search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்கள் ரத்து"

    • நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணியளவில் தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து.
    • தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணியளவில் கொச்சுவேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    *நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணியளவில் தாம்பரம் செல்லும் (வண்டி எண்: 06012) எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 13, 20, 27, மே 04, 11, 18, 25, ஜூன் 01, 08, 15, 22, 29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது

    *தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணியளவில் நாகர்கோவில் செல்லும் (வண்டி எண்: 06011) எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 14, 21, 28, மே 05, 12, 19, 26, ஜூன் 02, 09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    *தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணியளவில் கொச்சுவேலி செல்லும் (வண்டி எண்: 06035) எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 11, 18, 25, மே 02, 09, 16, 23, 30, ஜூன் 06, 13, 20, 27 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது

    *கொச்சுவேலியில் இருந்து இரவு 3.25 மணியளவில் தாம்பரம் செல்லும் (வண்டி எண்: 06036) எக்ஸ்பிரஸ்ஏப்ரல் 13, 20, 27, மே 04, 11, 18, 25, ஜூன் 01, 08, 15, 22, 29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பரவுனி செல்லும் சிறப்பு ெரயில் 11ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • ஈரோடு வழியாக கோவை வரும் சிறப்பு ரெயில் 7-ந் தேதி மற்றும் 14-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ஒடிசா ரூர்கேலா நிலையத்தின் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் 2 சிறப்பு ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ெரயில் எண் (03358) கோவையிலிருந்து நள்ளிரவு, 12:50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பரவுனி செல்லும் சிறப்பு ெரயில் 11ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ெரயில் எண் (03357) பரவுனியில் இருந்து 23:45 க்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக கோவை வரும் சிறப்பு ரெயில் 7-ந் தேதி மற்றும் 14-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ×