search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி"

    • அன்னமய்யா மாவட்டத்தில் ஹரிதா ரெட்டி உள்ளூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • வைரலான வீடியோவில், காரின் முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஹரிதா ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டரை நோக்கி பல கேள்விகளை கேட்கிறார்.

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆந்திராவில் 4-வது முறையாக முதல்-மந்திரியாக தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டுள்ளார். துணை முதல்வராக கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் பதவியேற்றார். சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி என்பவர் அமைச்சராக உள்ளார். இவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.

    இந்நிலையில், அமைச்சர் ராம்பிரசாத் ரெட்டியின் மனைவி ஹரிதா ரெட்டி, ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, தன்னைக் காத்திருக்க வைத்ததற்காக ரமேஷ் என்ற சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அன்னமய்யா மாவட்டத்தில் ஹரிதா ரெட்டி உள்ளூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. வைரலான வீடியோவில், காரின் முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஹரிதா ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டரை நோக்கி பல கேள்விகளை கேட்கிறார்.

    அப்போது... "இன்னும் காலை ஆகவில்லையா? என்ன கான்பரன்ஸ்? கல்யாணத்துக்கு வந்திருக்கியா, ட்யூட்டிக்கு வந்திருக்கியா? உங்களுக்காக அரைமணிநேரம் காத்திருந்தேன். உனக்கு சம்பளம் யார் தருவது? அரசாங்கமா அல்லது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியா?" என்று கடுமையான வார்த்தைகளால் வசப்பாடியுள்ளார்.

    வீடியோவின் முடிவில், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதா ரெட்டிக்கு சல்யூட் அடித்து, அவரது வாகனத்துக்கு வழி ஏற்படுத்தி தர முன்னோக்கி செல்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் "அமைச்சரின் மனைவிக்கும் ராஜ மரியாதை வேண்டுமாம். அமைச்சர் மண்டபள்ளி ராம்பிரசாத் ரெட்டின் மனைவி ராயச்சோட காவல் நிலையத்தை சேர்ந்தவர்களை தனக்கு துணையாக வரும்படி கூறினார். போலீசாரை அடிமைபோல் எச்சரிக்கை செய்துள்ளார். பயமடைந்த போலீஸ் ஆதரவற்ற நிலையில் அவருக்கு சல்யூட் அடித்தார்'' என தெரிவித்துள்ளது.

    • முழுநேர அரசியலில் ஈடுபடும் என்னைப் போன்ற பிடிவாதமான ஒருவன், என் போக்கில் ஏராளனமான கருத்துக்களைக் கூறலாம்.
    • என்.டி.ராமராவ் காலத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்த அடித்தளம் இருந்தது.

    திருப்பதி:

    ஜனசேனா கட்சியின் (ஜேஎஸ்பி) தலைவர், நடிகர் பவன் கல்யாண் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடுவை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதை எதிர்க்கும் மக்கள் தங்கள் கவலைகளை வெளிப்படையாகக் கூறமாட்டார்கள்.

    திரைப்படத் துறை வெவ்வேறு குழுக்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் அதன் சொந்த அரசியல் சார்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை எச்சரிக்கையாக உள்ளன.

    "முழுநேர அரசியலில் ஈடுபடும் என்னைப் போன்ற பிடிவாதமான ஒருவன், என் போக்கில் ஏராளனமான கருத்துக்களைக் கூறலாம். இருப்பினும், திரையுலகில் உள்ளவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியையும் பகைத்துக் கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்களுக்கு அன்றாடம் போராட வேண்டிய சொந்தப் பிரச்சனைகள் உள்ளன.

    மறைந்த ஆந்திர சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மற்றும் பிரபல குணச்சித்திர நடிகர் எம். பிரபாகர் ரெட்டி ஆகியோர் காங்கிரசின் தீவிர ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்கள். என்.டி.ராமராவ் காலத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்த அடித்தளம் இருந்தது.

    சந்திரபாபு நாயுடு செய்த நல்ல பணியை ஆதரித்ததற்காக, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் போன்ற ஒரு நட்சத்திரத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கேலி செய்திருக்க கூடாது. அது துரதிர்ஷ்டவசமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×