search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இதயம் பாதிப்பு"

    • வால்வுகள் கதவுகள் போல வேலை செய்யும்.
    • இதய வால்வுகளை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்யும் முறை ஸ்ட்ரக்ச்சுரல் இன்டர்வென்ஷன்.

    இதயத்தில் வால்வுகள் மொத்தம் நான்கு. மைட்ரல் மற்றும் டிரைகஸ்பிட் ஆகியவை இடது மற்றும் வலது ஏட்ரியம் என்கிற அறைகளில் இருந்து வென்டிரிக்கிள் என்கிற அறைகளுக்கு ரத்தத்தை அனுப்புகின்றன.

    அதேபோல அயோர்ட்டிக் மற்றும் பல்மனரி வால்வுகள் இடது மற்றும் வலது வென்டிரிக்கிள்களில் இருந்து மகாதமனிக்கும், பல்மனரி தமனிக்கும் ரத்தத்தை அனுப்புகின்றன. வால்வுகள் கதவுகள் போல வேலை செய்யும்.

    வால்வுகளில் இருவகை கோளாறுகள் வரும். ஒன்று அவை சுருங்கி விடும். அல்லது சரியாக மூடாமல் ரத்தத்தை சரியாக அனுப்பாது. இரண்டு வகைக் கோளாறுகளிலும் ஆரம்ப கட்டத்தில் மாத்திரைகள் போட்டு சமாளிக்கலாம். அதிகமானால் வால்வு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி.

    ஸ்ட்ரக்ச்சுரல் இன்டர்வென்ஷன் என்பது, சேதம் அடைந்த இதய வால்வுகளை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்யும் முறை ஆகும். இதயத்தில் உள்ள நான்கு வால்வுகளுக்கும் இதை செய்யலாம்.

    இதய வால்வில் உள்ள சேதத்தின் தன்மை, நோய்க்கான காரணம் மற்றும் நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப இந்த சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது.

    நோயாளியின் இதய வால்வு ஸ்ட்ரக்ச்சுரல் இன்டர்வென்ஷனுக்கு உகந்ததா என்பதை தீர்மானிக்க எக்கோகார்டியோகிராம், சி.டி.ஸ்கேன் பரிசோதனைகள் உதவுகின்றன.

    இதயக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைபடும்போது, பைபாஸ் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப் படுகிறது. சிறிய அளவிலான இதய ரத்தக் குழாய் அடைப்புக்கு மிகப்பெரிய அளவில் அறுவைசிகிச்சை இன்றி, சிறு துளையிட்டு, ரத்த நாளம் வழியே கருவியைச் செலுத்தி, அடைப்பை நீக்கும் முறைதான் இன்டர்வென்ஷனால் கார்டியாலஜி சிகிச்சை. இந்த சிகிச்சை இரண்டு கட்டமாகச் செய்யப் படுகிறது. முதலில், இதயக் குழாய் அடைப்பு எங்கு ஏற்பட்டுள்ளது எனக் கண்டுபிடித்து, தொடை அல்லது கையில் உள்ள ரத்தக் குழாய் வழியே கருவியைச் செலுத்தி அடைப்பு நீக்கப்படுகிறது. இதில், பல சிகிச்சை முறைகள் உள்ளன.

    இந்த சிகிச்சையை தேர்வு செய்யும் முன், இதனால் ஏற்படும் தொலைநோக்கு பலன், பக்கவிளைவுகள், உயிர் ஆபத்து, செலவு, நோயாளியின் விருப்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு எது பலன் தருமோ, அந்த சிகிச்சை முறை தேர்வு செய்யப்படுகிறது.

    இதய நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை:

    * புகை மற்றும் மதுப்பழக்கத்தைக் கைவிடவேண்டும்.

    * காலை ஜாகிங், நடைப்பயிற்சி, வார்ம்அப் பயிற்சிகள்.

    * யோகா, பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளைத் தினமும் அதிகாலையில் செய்ய வேண்டும்.

    * வேகவைத்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * 'ரெட் மீட்' எனப்படும் அதீதக் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள ஆடு, மாட்டு இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

    * எண்ணெயில் பொரித்த உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    • இதயம் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
    • மாணவ-மாணவிகளிடம் இந்நோய் விரைவாகப் பரவும்.

    மரிக்கா என்ற வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு பிறவியில் இதயத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஓடியாடி விளையாடிக்கொண்டும், பள்ளிக்கு சென்றுகொண்டும் இருந்தாள். திடீரென்று ஒரு நாள் மயக்கமடைந்து விழுந்தாள். சாதாரண மயக்கத்துக்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்தபோதுதான், அவளின் இதயம் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

    இதயப் பாதிப்பினால் ரத்த ஓட்டம் சீர்குலைந்து மூளைக்கு ரத்தம் சரியாக செல்லாததாலேயே மயங்கி விழுந்திருக்கிறாள். இதய வால்வில் ஒரே வழியாக சென்று வர வேண்டிய ரத்தமானது, இருவழியாக சென்றுவரத் தொடங்கியது. மேலும் உள்ளே சென்ற ரத்தமானது முழுமையாக வெளியேறாமல், பாதி மட்டுமே வெளியேற, மீதி ரத்தம் ஒவ்வொரு முறையும் அவளின் இதயத்திலேயே தங்கிவிட்டது.

    இந்த அதிகப்படியான ரத்தத்தை தாங்குவதற்காக இதயம் பெருக்கத் தொடங்கியது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள மருத்துவமனையை மரிக்கா அணுகியபோது சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இந்தநிலையில் பிஜியை சேர்ந்த இப்பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு தயாரானது. முன்நாட்களில் தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாகவே இதயம் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. இதனால் வீங்கிப் போய்விட்ட இதயத்தை அறுவை சிகிச்சை மூலமே சீரமைக்க முடியும் என மருத்துவக்குழு தீர்மானித்தது. சிகிச்சைக்குப் பின் நலமடைந்தாள் மரிக்கா.

     ஒரு தொண்டை நோய்த்தொற்று இதயத்தை இப்படியும் பாதிக்குமா? என கேள்வி எழலாம். ஆம், 15 நாட்களுக்கு மேல் தொண்டை நோய்த்தொற்றும் தொடர்ந்து காய்ச்சலும் இருந்தால் அலட்சியம் செய்துவிடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் இந்நோய் விரைவாகப் பரவும். இந்நோய் ராணுவ வீரர்களையும் தாக்கியுள்ளது. எந்த வயதிலும் இந்த நோய்த்தொற்று ஏற்படலாம். உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

    ×