என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூலநோய்"

    • பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.
    • கருணைக் கிழங்கை புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.

    மூல நோய் என்பது மருத்துவத்தில், 'ஹெமராய்ட்ஸ்' அல்லது 'பைல்ஸ்' என்று குறிப்பிடப்படுகிறது. பெருங்குடலின் கடைசிப் பாகம் முதல் ஆசனவாய் வரையுள்ள ரத்த நாளங்கள் புடைத்து வீங்கி வலியைத் தருவதைத் தான் 'மூலம்' என்கின்றோம்.

    ஆசன வாயில் உள்ள வெண் கோடு போன்ற பகுதிக்கு மேலே தோன்றுவது 'உள்மூலம்' என்றும், கோட்டிற்கு கீழே தோன்றுவது 'வெளிமூலம்' என்றும் பிரிக்கப்படுகிறது.


    மூல நோய் எதனால் ஏற்படுகின்றது?

    'அனில பித்த தொந்த மலாது மூலம் வராது' என்று சித்தர் தேரையர் பாடல் கூறுகின்றது. அதிகரித்த நாள்பட்ட அபான வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் ஏற்படும் வயிற்றின் அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகிலுள்ள தசைகளில் ஏற்படும் பலகீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, எப்போதும் இருக்கை நிலையில் இருப்பது போன்ற காரணங்களினால் மூலநோய் ஏற்படுகின்றது.

    ஆசனவாயில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிதல், உடல் எடை மெலிதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.


    உணவு பழக்கம்

    துத்திக் கீரையுடன், சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம்.

    கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.


    பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.

    முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    காரநூல் சிகிச்சை

    மருந்துகளினால் தீராத மூல நோய்க்கு சித்தர்கள் கூறியுள்ள பாரம்பரிய 'காரநூல்' அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காணலாம். காரநூல் என்பது உறுதியான லினன் நூலை, நாயுருவி உப்பு, மஞ்சள், உத்தாமணிப் பால், எருக்கம்பால் போன்றவைகளைக் கொண்டு முறைப்படி செய்து மூலம் பாதித்த பகுதிகளை அந்த நூலினால் இறுக்கிக்கட்டி விடும் முறை. இது மூலத்தை அறுத்து புண்ணை ஆற்றும் இயல்புடையதால் நோயாளிக்கு எந்த பக்க விளைவுகளும் கிடையாது.

    • வாழ்வியல் முறைகள் மூலத்திற்கு முக்கிய காரணம்.
    • மலச்சிக்கல் வரும்போது ஆசன வாயில் அழுத்தம் ஏற்படும்.

    மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தற்போது மூலநோயும் இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்கங்கள், வாழ்வியல் முறைகள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 50சதவீத மக்கள் தங்கள் வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் மூல நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதில் 5 சதவீதம் பேர் நிரந்தரமாக மூலநோய் பாதிப்பை பெற்றிருக்கிறார்கள் என தேசிய மருத்துவ நூலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.

    ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய்கள் இருக்கும். மலச்சிக்கல் வரும்போது ஆசன வாயில் அழுத்தம் ஏற்படும். அப்போதுதான் மூலம் உருவாகும். நார்ச்சத்து குறைவு, குறைவாக தண்ணீர் குடிப்பது போன்றவற்றால் தான் இந்த நோய் உருவாகிறது.

    சிகிச்சை முறை

    பொதுவாக மூலத்தில் 4 வகை உண்டு. அதுபோன்று அறுவை சிகிச்சை முறையிலும் 4 வகை இருக்கிறது. முதல் வகை - கத்தி மூலம் அறுவை சிகிச்சை செய்யும் (ஒப்பன் சர்ஜரி) முறை. இதில் வலி அதிகமாக இருக்கும். 2-வது முறையில் கத்திக்கு பதிலாக கருவிகள் உதவியுடன் மூலம் வெட்டி எடுக்கப்படும். இதிலும் வலி இருக்கும்.

    3-வது லேசர் சிகிச்சை முறை. மூலத்தில் 2 மற்றும் 3-வது வகை இருப்பவர்களுக்கும், வலி இருப்பவர்கள் மற்றும் ரத்தக் கசிவு உள்ளவர்கள், மருந்து கொடுத்தும் சரியாகாதவர்களுக்கு லேசர் முறையில் சிகிச்சை செய்யப்படும். இந்த சிகிச்சையின் போது ரத்தக்கசிவு வலி இருக்காது. காலையில் வந்து சிகிச்சை பெற்று விட்டு மாலையில் வீடு திரும்பிவிடலாம்.

    மூலத்தில் 4-வது வகை இருக்கிறது. இந்த வகைக்கு சிகிச்சை அளிக்க 'ஸ்டேபிலர்' என்று சொல்லக்கூடிய அதிநவீன கருவி உள்ளது. அந்தக்கருவியை பயன்படுத்தி மூலத்தை அகற்றிவிடலாம். காலையில் வந்தால் அறுவை சிகிச்சை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பிவிடவாம். ரத்தக்கசிவு, வலி இருக்காது. தையலும் தேவையில்லை.

    மூலத்துக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறும் வழி இல்லை. எந்த வகையான மூலம் இருக்கிறது என்று பரிசோதனை செய்து கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

    • இரவு அதிக நேரம் கண்விழிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    மூல நோய் வரும் வழியை பற்றி, தேரையர்' என்ற சித்தர், 'அனில பித்த தொந்தமலாது மூலம் வராது' என்று கூறியுள்ளார். வாயுவைப்பெருக்கக் கூடிய உணவுகள், காரமான உணவுகள், கிழங்கு வகைகள், உடல் சூடு, உட்கார்ந்த நிலையில் நெடுநேரம் இருப்பது, பசியை அடக்குதல், மலத்தை அடக்குதல் போன்ற காரணங்களால் மூல நோய் வருகிறது. இதற்கான சித்த மருத்துவம் வருமாறு:-

    1) திரிபலா சூரணம் 1 கிராம். நாக பற்பம் 200 மிகி. நத்தை பற்பம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை நெய் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    2) தேற்றான் கொட்டை லேகியம் 5 கிராம் வீதம், காலை. இரவு சாப்பிடலாம்.

    3) கருணைக்கிழங்கு லேகியம் 5 கிராம் வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.

    4) மூலக்குடார நெய் 5-10 மிலி வீதம் இரவு உணவுக்கு பின் எடுக்க வேண்டும்.

    5) மலச்சிக்கல் இருந்தால், நிலவாகைச் சூரணம் அல்லது. சிவதைச்சூரணம் 1 கிராம் வெந்நீரில் இரவு வேளை மட்டும்.

    மேற்கண்ட மருந்துகளில் உங்களுக்கு எது தேவை என்பதை சித்த மருத்துவர் முடிவு செய்து கொடுப்பார். எனவே சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுப்பது அவசியம்.

    6) துத்திக்கீரை சிறிதளவு, ஐந்து சின்ன வெங்காயம் இவைகளை விளக்கெண்ணெய் சிறிது விட்டு வதக்கி அரைத்து நெல்லிக்காய் அளவு இரவு வேளை சாப்பிட்டு வர மூலவலி மற்றும் முளை குறைந்து கொண்டு வரும்.

    உணவுப் பழக்கவழக்கங்கள்:

    நார்ச்சத்து அதிகம் நிறைந்த அவரைப் பிஞ்சு, பீன்ஸ் பிஞ்சு, கோவைக்காய். பூசணிக்காய், முள்ளங்கி, புடலங்காய், முட்டைக் கோஸ், கிழங்கு வகையில் கருணைக்கிழங்கு. கீரைகளில் துத்திக்கீரை, அறுகீரை. தண்டுக் கீரை, புளியாரைக் கீரை, பசலைக்கீரை சாப்பிடலாம்.

    பிரண்டைத் தண்டுடன், புளி, உப்பு. மிளகு, சீரகம், பெருங்காயம் இவை சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் மூலமுளை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. பழங்களில் முலாம் பழம், அத்திப்பழம், மாதுளம் பழம், வாழைப்பழம், ஆப்பிள் நல்லது.

    நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல், சுண்டை வற்றல், பெருங்காயம், இந்துப்பு, ஓமம், சீரகம், கொத்தமல்லி இவைகளை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து வைத்து, சாதத்தில் நெய் விட்டு சாப்பிட குணம் கிடைக்கும். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்வது மிகச் சிறந்தது.

    டீ. காபி அடிக்கடி குடிப்பதையும், இரவு அதிக நேரம் கண்விழிப்பதை தவிர்க்க வேண்டும். காரமான உணவுகள், மாவுப்பண்டங்கள், எண்ணெய் பலகாரங்கள். கோழிக்கறி போன்றவற்றை அளவுடன் எடுப்பது நல்லது. தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    • மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி இலை.
    • துத்தி இலையை வதக்கி மூலநோய் மீது கட்டி புண்கள் ஆறும்.

    மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி, இதன் இலையை வதக்கி கட்ட மூலநோய் கட்டி மற்றும் புண்கள் ஆறும்.

    நம் முன்னோர்கள் துத்திக் கீரையை சமையலில் பயன்படுத்தி வந்தனர். இன்று நம் வீடுகளில் இக்கீரையை சமைப்பதையே மறந்துவிட்டோம். மலச்சிக்கலுக்கு துத்தி சிறந்த மருந்து.


    இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு.

    நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச் சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன.

    துத்தி இலை குடல் புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    துத்திக் கீரை- 200 கிராம்

    சின்ன வெங்காயம்- 100 கிராம்

    வேகவைத்த துவரம்பருப்பு- 3 மேஜைக்கரண்டி

    மிளகு தூள்- அரை ஸ்பூன்

    சீரகம்- 1 தேக்கரண்டி

    நல்லெண்ணெய்- 3 தேக்கரண்டி

    உப்பு- சுவைக்கேற்ப


    செய்முறை:

    துத்திக் கீரை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சிறியதாக அரிந்துகொள்ள வேண்டும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளித்து, வெட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் துத்திக் கீரையை போட்டு வதக்கி சற்று நீர் தெளித்துக் கீரையை வேக விடவேண்டும்.

    கீரை வெந்தபின் வேகவைத்த துவரம் பருப்பு, மிளகுத் தூள், உப்பு கலந்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    இந்த கீரையை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட, மூலநோய் குணமாகும். மூலத்தின் உண்டாகும் வலி நீங்கும், மலச்சிக்கல் தீரும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நீங்கும்.

    மூல நோயால் துன்பப்படுபவர்கள் இந்த கீரையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சமையலில் பயன்படுத்தலாம்.

    • உள்மூல பாதிப்புகளில் வலி பெரியளவில் இருக்காது.
    • வெளிமூல நோயில் வலி அதிகம் இருக்கும்.

    மூலநோய் உள்மூலம், வெளிமூலம் என இரு வகைப்படுகிறது. சித்த மருத்துவத்தில் 21 வகை மூல நோய்கள் பற்றி சித்தர்களால் கூறப்பட்டுள்ளது.


    'அனில பித்த தொந்த மலாது மூலம் வராது' என்று சித்தர் தேரையரின் பாடல் கூறுகின்றது. அதிகரித்த நாள்பட்ட அபான வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் வயிற்றின் அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகிலுள்ள தசைகளில் ஏற்படும் பலகீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, எப்போதும் இருக்கையில் அமர்ந்து இருப்பது போன்ற காரணங்களினால் மூலநோய் ஏற்படுகின்றது.


    மூல நோய் 4 நிலைகள் கொண்டிருக்கும். உள்மூல பாதிப்புகளில் வலி பெரியளவில் இருக்காது. மலம் முக்கி வெளியே போகும் போது ரத்தம் வடிதல் காணப்படும். ஆனால், வெளிமூல நோயில் வலி இருக்கும். ஆசனவாயில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிதல், உடல் எடை மெலிதல் போன்றவை ஏற்பட்டால், அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.


    உணவுப்பழக்கம்:

    * துத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம்.

    * கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.

    * பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.

    * முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.


    * உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    * தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும்.

    * வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்.

    * கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    * இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம் மற்றும் வாழைப்பழம் உண்ண வேண்டும்.

    * காலையில் நடைப்பயிற்சி, ஆசனவாய் தசைகளை உறுதிபடுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும். நேரம் தவறாமல், சரியான முறையில் உணவு உண்ண வேண்டும்.


    வயிற்றில் வாயு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * சீரகம், கொத்தமல்லி, ஓமம் இவைகளை சிறிதளவு எடுத்து கொதிக்க வைத்த தண்ணீரை காலை, இரவு குடித்து வர வேண்டும்.

    ×