search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புளோரிடா"

    • புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார்.
    • அங்கு காணப்பட்ட மர்ம நபரை நோக்கி அவரது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார். இதனால் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கிடையே, புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் காணப்பட்ட மர்ம நபரை நோக்கி அவரது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

    இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் புளோரிடாவில் உள்ள அவரது சொத்துக்களுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்திகள் குறித்து எனக்கு விளக்கப்பட்டது. அவர் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • 1 சென்ட் [இந்திய மதிப்பில் 0.024 பைசா] காசுக்காக சிறை சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • 'என்னை வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வைக்கிறீர்களா?' என்று மிரட்டியுள்ளார்.

    உலகத்தில் பல்வேறு நாடுகளில் கோடி கோடியாக கொள்ளையடித்தவர்கள் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் முதலாளித்துவத்தின் மகுடமாக விளங்கும் அமெரிக்கவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் 1 சென்ட் [இந்திய மதிப்பில் 0.024 பைசா] காசுக்காக சிறை சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    புளோரிடா மாகாணத்தின் சம்டர் கவுண்டி பகுதியில் உள்ள வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்து ஒரு சென்ட் வேண்டும் என்று மைக்கேல் பிளெம்மிங் என்ற 41 வயது நபர், பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி கவுண்டரில் இருந்தவரிடம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரி, இவ்வளவு சிறிய தொகையையெல்லாம் தர முடியாது என்று மறுத்துள்ளார்.

    இதனால் சற்று பொறுமை இழந்த மைக்கேல், 'என்னை வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வைக்கிறீர்களா?' என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அதிகாரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரியை மிரட்டியதற்காகவும், அவர் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . 

    • பிரசார நிதிக்காக பல தொழிலதிபர்களை டிரம்ப் சந்தித்து பேசி வருகிறார்
    • பாம் பீச் விமான நிலையத்தில் இருவரின் விமானங்களையும் கண்டதாக செய்திகள் வெளியாகின

    அமெரிக்காவில் இவ்வருடம் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதில் போட்டியிட உள்ள தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.

    தனது பிரசாரங்களுக்கு நிதி தேவைப்படுவதால் குடியரசு கட்சி ஆதரவாளர்களில் பல முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து டொனால்ட் டிரம்ப் நிதியுதவி கோரி வருகிறார்.

    இந்நிலையில், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்கை டொனால்ட் டிரம்ப் சந்தித்து பிரசாரங்களுக்கு நிதி கோரியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


    புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் டொனால்ட் டிரம்ப் நடத்திய பல பிரமுகர்களுடனான சந்திப்பில் எலான் மஸ்க் கலந்து கொண்டார்.

    பாம் பீச் விமான நிலையத்தில் எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரின் விமானங்களும் ஒரு மணிக்கும் குறைவான கால இடைவெளியில் வந்திறங்கியது குறித்து முன்னரே தகவல்கள் வெளியாகின.

    2024 அதிபர் தேர்தல் போட்டிக்கு டிரம்பை எலான் மஸ்க் ஆதரிப்பாரா என்பது தற்போது வரை தெரியவில்லை.

    2022ல் தனக்கு ஆதரவாக மஸ்க் வாக்களித்ததாகவும் அதை அவரே ஒப்பு கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இதனை அப்போது மஸ்க் மறுத்தார்.

    இதுவரை அமெரிக்காவின் இரு கட்சிகளில் எந்த கட்சியையும் சாராதவராக தன்னை முன்னிறுத்தி வந்திருக்கும்  உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டிரம்பை ஆதரிக்கும் பட்சத்தில், பைடனின் வெற்றி வாய்ப்புகள் பெருமளவு குறையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • அதிவேக இணைய சேவைக்கு ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் பயன்படும்
    • 70 நாடுகளில் 2.3 மில்லியன் மக்களை ஸ்டார்லிங்க் இணைய சேவை இணைக்கிறது

    கடந்த 2002ல் உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், விண்வெளி ஆராய்ச்சிக்காக துவக்கிய நிறுவனம், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX).

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன வல்லுனர்கள், விண்வெளிக்கு மனிதர்களையும், சரக்குகளையும் கொண்டு செல்ல ஃபால்கன்-9 (Falcon-9) எனும் செயற்கை கோள் ஏவும் வாகனத்தை உருவாக்கினர்.

    இந்த ஃபால்கன்-9 மூலம் இணைய சேவைகளை வழங்கும் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன.

    ஆன்லைன் கேமிங் (online gaming) உட்பட பல அதிவேக இணைய சேவை தேவைப்படும் பயன்பாடுகளை எளிதாக்க கூடிய ஸ்டார்லிங் செயற்கை கோள்கள், 70 நாடுகளில் 2.3 மில்லியன் மக்களை இணைக்க உள்ளது.


    இந்நிலையில், 2023 வருடத்திய கடைசி பயணமாக அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்தில் இருந்து ஃபால்கனின் 96-வது பயணத்தில், 23 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களை வெற்றிகரமாக செலுத்தியதாக அதன் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ஸ்பேஸ்எக்ஸ் பதிவிட்டது.

    இந்த சாதனைக்கு ஸ்பேஸ்எக்ஸின் நிறுவனர் எலான் மஸ்க், பாராட்டு தெரிவித்துள்ளார்.

    2023 ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.

    • சாலை விதிமீறல் அமெரிக்காவில் குற்றமாக கருதப்படுகிறது
    • சிகப்பு விளக்கு எரிவதை கண்டும் சாலையை அப்பெண் கடந்தார்

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பினெல்லஸ் கவுன்டி (Pinellas County) பகுதியில் உள்ளது க்ளியர்வாட்டர் (Clearwater) நகரம்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இங்குள்ள கடற்கரை பகுதியில் உள்ள ஒரு டிராபிக் சிக்னல் அருகே 32 வயதான ஒரு பெண் சுற்றுலா பயணி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதசாரிகள் சாலையை கடக்க முயல்வதை தடுக்கும் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அப்பெண் அதை பொருட்படுத்தாமல் சாலையை கடக்க முயற்சித்தார்.

    சாலை விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை தீவிரமாக வலியுறுத்தும் அமெரிக்காவில் இந்த விதிமீறல் குற்றமாக கருதப்படுவதால், அங்குள்ள டிராபிக் காவல் அதிகாரி நிகோலஸ் பலோமா (29) அப்பெண்ணை தடுத்து நிறுத்தினார்.

    அப்பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிகோலஸ், அப்பெண்ணை தனது காரில் ஏற சொன்னார். தயங்கிய அப்பெண்ணிடம், சாலை விதிமீறலுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க தனது பாலியல் ஆசைகளுக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அவரிடம் சிக்கி கொண்ட அப்பெண்ணை தனது காரில் 30 நிமிடங்களுக்கும் மேலாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று தகாத முறையில் நடந்து கொண்டார். பிறகு அப்பெண் தங்கியிருந்த ஓட்டலில் அவரை இறக்கி விட்டு சென்று விட்டார். குற்றம் செய்தவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதால் அப்பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கவில்லை.

    இந்நிலையில் அப்பெண்ணுக்கும் அவரது நண்பருக்கும் இடையே நடந்த ஒரு மோதலை தீர்க்க காவல்துறையினர் சென்றிருந்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையில் அப்பெண் தனக்கு நேர்ந்ததை தெரிவித்தார்.

    தங்கள் துறையை சேர்ந்த ஒருவரே பெருங்குற்றம் புரிந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் நிகோலஸை வலைவீசி தேடி வந்தனர்.

    இறுதியாக நேற்று அவரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×