search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவான்மியூர்"

    • 6 வழித்தட சாலைப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடியும்.
    • அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    சென்னை:

    சென்னையின் முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கியது. இதற்கு ரூ.940 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    திருவான்மியூர், கொட்டி வாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் நில எடுப்பு பணி 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    6 வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கு கொட்டி வாக்கம் பகுதியில் ரூ.19 கோடியிலும், பால வாக்கம் பகுதியில் ரூ.18 கோடியிலும், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை மற்றும் சோழிங்க நல்லூர் பகுதிகளில் ரூ.135 கோடியிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் 6 வழிச்சாலை பணியை வேகப்படுத்தும் ஆய்வு கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அக்கரை சந்திப்பில் சாலை யோரம் கூடாரம் அமைத்து நடைபெற்றது. அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர் மட்ட சாலை அமைப்பதற்கு கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசு பரிசீலனை செய்து வருகிறது. உயர் மட்ட பாலம் டைடல் பூங்கா சந்திப்பில் தொடங்கி எல்பி சாலை சந்திப்பு, நீலாங்கரை, ஈஞ்சம் பாக்கம், அக்கரை வழியாக உத்தண்டியில் முடியும்.

    இப்பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு எல்.பி. சாலை சந்திப்பு, திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலம், , நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், மற்றும் அக்கரை சந்திப்பில் பாலத்தில் ஏறி, இறங்கி செல்லும் வகையில் வடிவமைப்பு செய்யப்படும்.

    இந்த பாலத்தின் மூலம் இப்பகுதியை 20 நிமிடங்களில் கடக்க முடியும். கிழக்குகடற்கரை சாலையில் நடைபெறும் 6 வழித்தட பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடியும்.

    நிலஎடுப்பு செய்த இடங்களில் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் முடிந்து உள்ளன. இப்பணிகள் முடிந்த இடங்களிலும் மின்வாரிய உபகரணங்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்த பணி முடிந்ததும் குடிநீர் குழாய் மற்றும் பாதாள கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகள் இருபுறமும் நடைபெறும்.

    அண்ணாசாலையில் இரும்பு மேம்பாலம் பணிக்கு மண்பரிசோதனை நடக்கிறது. கீழே மெட்ரோ ரெயில் பாதை உள்ளதால் அதற்கு ஏற்ப வடிவமைப்பு செய்து உள்ளோம். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அண்ணாசாலை மேம்பாலம் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று காலையில் கோர்ட்டுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
    • உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை திருவான்மியூர் அவ்வை நகரில் வசித்து வந்தவர் கவுதம். 29 வயதான இவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.

    இவர் நேற்று காலையில் கோர்ட்டுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றார். திருவான்மியூர் ஜெயந்தி சிக்னல் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வக்கீல் கவுதம் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேர் அவரை சுற்றி வளைத்தனர். தாங்கள் மறைத்து வைத்தி ருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து அவர்கள் கவுதமை வெட்டினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிர் பிழைப்பதற்காக ஓட்டம் பிடித்தார். இருப்பினும் 3 பேரும் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினார்கள்.

    இதில் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் கவுதம் கீழே சாய்ந்தார். உயிருக்கு போரா டிய அவரை மீட்டு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை வெட்டிக் கொன்ற கும்பல் தப்பி ஓடி தலை மறைவானது.

    இந்த பயங்கர கொலை சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் கிடைத்த தும் திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக் கொலையாளிகளை உடன டியாக பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இதைத் தொடர்ந்து வக்கீல் கவுதம் கொலை தொடர்பாக கமலேஷ், கார்த்தி, நித்யா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கண்ணகி நகர் மற்றும் கொட்டிவாக்கம் பகுதிகளை சேர்ந்த இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வந்துள்ளது.

    கொலையுண்ட வக்கீல் கவுதம் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிலரை ஜாமீனில் எடுத்துள்ளார். இது தொடர்பாக கமலேஷ், கார்த்தி, நித்யா ஆகிய 3 பேருக்கும், வக்கீல் கவுதமுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் கவுதமை கொலை செய்வதற்கு நேரம் பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில்தான் நேற்று அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர்.

    இதையடுத்து அவரை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்தான் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு திருவான்மியூர் சிக்னல் பகுதிக்கு சென்ற கவுதமை பின்தொடர்ந்து சென்று 3 பேரும் சரமாரி யாக டெ்டிக் கொன்றுள்ள னர். இரவு 8.30 மணி அளவில் சரமாரியாக வெட்டுபட்டதும் கவுதமை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இரவு 10 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.

    அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிரிழந்த கவுதமின் உடலை ஒப்படைப்பதற்கு முன்னர் ஆஸ்பத்திரி நிர்வாகம் ரூ. 50 ஆயிரம் பணம் கேட்டுள்ளது. இதனால் கவுதமின் நண்பர்களான சக வக்கீல்களும், உறவினர்களும் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டினார்கள். உறவினர்கள் கதறி அழுது கண்ணீர் வடித்தனர்.

    இதையடுத்து போலீசார் சென்று சமரச பேச்சு நடத்தியதையடுத்து ரூ.30 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு ஆஸ்பத்திரி நிர்வாகம் உடலை ஒப்படைத்தது. இதன் பின்னர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கவுதமின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    • கோவில் அல்ல சமாதி என கோரி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.
    • இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை, திருவான்மியூர், மயூரபுரம், ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் கோவில் 3 ஏக்கர் 11 சென்ட் பரப்பளவில் அமைந்து உள்ளது.

    இந்த சொத்தும், இதில் அமைந்துள்ள கோவி லும் நிர்வகிக்க ஸ்ரீமத்பாம் பன் சுவாமிகள், தமது உயிலில் தேஜோ மண்டல் சபா என்ற அமைப்பினை ஏற்படுத்தியிருந்தார். அதன் காரியதரிசி டி.டி.குப்புசாமி செட்டியாரால் 9.9.1984 அன்று தாமாக முன் வந்து இந்து சமய அறநிலையத் துறை வசம் கோவில் ஒப்படைக்கப்பட்டு அன்று முதல் தொடர்ச்சியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    1985-ம் ஆண்டு முதல் மகா தேஜோ மண்டலத் தாரால் இது கோவில் அல்ல சமாதி என கோரி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.

    சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகளை கொண்ட அமர்வானது வழக்குகளின் இறுதி தீர்ப்பை கடந்த 27.3.2024 அன்று வழங்கியது. இத்தீர்ப்பில் ஸ்ரீமத் பாம்பன் குமரகுரு தாசர் கோவில் எனவும் அதன் நிர்வாகம் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதி செய்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    இதற்கிடையில் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சின்னசாமி சமாதி நிலையத் தில் கோவில் நிர்வாகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத உழவாரப்பணிக் குழு என்று அழைத்துக் கொள்ளும் ராஜா என்பவர் அருண், முருகேசன், சிவா மற்றும் ரமேஷ் ஆகியோர் ஆதரவு டன் தொடர்ந்து சட்ட விரோ தமான ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்.

    இது சட்ட விரோ தமான செயலாகும். மேலும் இந்து சமய அறநிலையத் துறை சட்ட விதிமுறைகளுக்கு புறம்பானதாகும்.

    எனவே, மேற்குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படியும், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் மற்றும் விதிமுறை களுக்கு உட்பட்டும் கோவில் நிர்வாகம் நடைபெறுவதற்கு ஏதுவாக கோவில் நிர்வாகத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் அமைப்பினை சின்னசாமி சமாதி நிலையத்திலிருந்து வெளியேற்றி ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் கோவில் நேரடி ஆளுகை யின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    இதை தொடர்ந்து பொது மக்கள் சுமார் 36 ஆண்டு களாக ஆவலுடன் எதிர் நோக்கும் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி அன்று நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேவாரப் பாடல் பெற்ற 275 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று.
    • திருவான்மியூர் பகுதியில் மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    சென்னை திருவான்மியூர் பகுதியில் மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நோய் தீர்க்கும் தெய்வமாக `மருந்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். அகத்திய முனிவருக்கு தெய்வீக மருத்துவ முறைகளை உபதேசித்ததால், இத்தல இறைவனுக்கு `மருந்தீஸ்வரர்' என்ற பெயர் வந்ததாக தல வரலாறு சொல்கிறது.

    தேவாரப் பாடல் பெற்ற 275 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. அந்த காலத்தில் சோழ நாட்டை பல்லவம், ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோவில் இருந்ததை வரலாற்றுச் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக் கடற்கரைச் சாலையாக உருமாறியுள்ளது.

    தினமும் இங்கிருக்கும் இறைவனுக்கு கோ பூஜையுடனே மற்ற பூஜைகளும் செய்யப்படுகிறது. இந்த கோவிலின் கர்ப்பகிரகத்திற்கு மேலிருக்கும் விமானம் சதுர்வஸ்தம் என்ற முறையில் கட்டப்பட்டது. இங்கு கோவில் கொண்டிருக்கும் மருந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்ட பின்பு, பிரசாதமாக தரப்படும்.

    விபூதியை உண்பதால் எப்படிப்பட்ட தீராத நோய்களும் குணமாகி விடுமாம். மேலும், இத்தல விருட்சமான வன்னி மரத்தைச் சுற்றி வந்து வழிபடுவதால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்திக்கான வழி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ×