என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய பாகிஸ்தான் எல்லை"

    • பஹல்காம் தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசடைந்துள்ளது.
    • விசா, சிந்து நதி நீர் நிறுத்தம் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் பி.எஸ்.எஃப். வீரர் பிடிபட்டுள்ளார்.

    ஓய்வு எடுப்பதற்காக நிழலைத்தேடி சென்றபோது, தவறுதலாக பாகிஸ்தானில் எல்லைக்குள் சென்றதால் இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. அவர் விடுவிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் எல்லையில் 182ஆவது பட்டாலியனைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.சிங் விவசாயிகளுடன் ஓய்வு எடுக்க நிழல் பகுதிக்கு செல்ல முயன்றபோது, இந்திய எல்லையில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றார். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பி.கே. சிங்கை கைது செய்துள்ளனர்.

    யுனிபாஃர்ம் மற்றும் அவருடைய துப்பாக்கியுடன் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றார். பி.கே. சிங்கை பாதுகாப்பாக மீட்க இருநாட்டு வீரர்களிடையே கொடி சந்திப்பு நடைபெற்றது.

    இதுபோன்ற சம்பவங்கள் அசாதாரணமானது அல்ல என்றும், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த காலங்களில் நடந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில், பயங்கரவாதத்தை ஆதரிப்பாக பாகி்ஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    • எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்
    • இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், நேற்றிரவு திடீரென பாகிஸ்தான் வீரர்கள் (Pakistan Rangers) துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.

    நேற்றிரவு 8 மணியில் இருந்து நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் வீட்டை பூட்டிக்கொண்டு பாதுகாப்பாக வீட்டிற்குள்ளே இருந்தனர். இருந்தபோதிலும் எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர், நான்கு பொதுமக்கள் காயம் அடைந்தனர்.

    பாகிஸ்தான் வீரர்கள் அரினியா, ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள ஐந்து இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

    இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் குப்வாரா மாவட்டம் மச்சில செக்டாரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தான் வீரர்கள் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர்.

    இதற்கிடையே எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஐந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி, உடுருவல் திட்டத்தை முறியடித்தனர்.

    சுமார் இரண்டு மூன்று வருடத்திற்குப் பிறகு தற்போது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், நேற்றிரவு 8 மணியில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக எல்லையோர மக்கள் தெரிவித்தனர்.

    ×