என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூந்தல் பராமரிப்பு"

    • பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
    • நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்

    கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். குறிப்பாக இந்த வகை கூந்தல் உள்ளவர்களுக்கு முடி எளிதில் உடையும். அதிகமாக உதிரும். முடியில் ஈரப்பதம் நிச்சயம் தேவையான ஒன்று. அதை எப்படி தக்க வைத்துக் கொள்வதென இங்கு பார்ப்போம்.

    எல்லா பெண்களும் அடிக்கடி முடி உதிராத, நீண்ட, பளபளப்பான, பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்:

    அவகேடா, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்ந்த ஹேர் மாஸ்க் வறண்ட கூந்தலுக்கு சிறந்த ஒன்று. இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் மென்மையான பட்டு போன்ற கூந்தல் கிடைக்கும்.

    ஒரு கையளவு வேப்பிலை எடுத்து 4 கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். வினிகரை தலையில் தடவி குளித்து வந்தாலும் பொடுகு தொல்லை குறையும்.

    வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாராம் பூ ஆகியவற்றை வெயிலில் காய வைத்து மெஷினில் நன்கு பொடித்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்புக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசி குளியுங்கள். உங்கள் கூந்தல் பளப்பளக்க தொடக்கிவிடும். ஹேர் டிரையரை அதிகம் உபயோகிக்காதீர்கள். அப்படி செய்தால் தலை வறண்டு, முடியின் வேர்களும் பழுதடைந்து போய்விடும். மேலும், அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ, ஹேர் கலர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள்.


    இரவு படுக்கைக்கு செல்லுமுன் ஆலிவ் ஆயிலை தலையில் தடவி ஊறவிட்டு, மறுநாள் காலையில் குளித்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    தலைக்கு குளித்த பின்னர், ஒரு கப் தண்ணீரில் 1/2 கப் வினிகரை கலந்து தலையில் தேய்த்து அலசவும். பின் அப்படியே துண்டால் தலையில் கட்டிக் கொள்ளவும். 15 நிமிடத்திற்கு ஊற விடுங்கள். பின்பு, பேன் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்துவிடும். 2 வாரத்திற்கு ஒருமுறை இப்படி செய்து வந்தாலே போதும். பேன் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.

    முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, தலையில் தேய்த்து ஊறவைத்து, மாதம் 2 முறை அவ்வாறு செய்து குளித்து வந்தால் போதும். கூந்தல் பளபளக்க ஆரம்பித்து விடும்.

    கறிவேப்பிலை, மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம். மாதம் இரு முறை இவ்வாறு செய்தாலே போதும்.

    • வறண்ட கூந்தலுக்கு முட்டை மாஸ்க்கும் சிறந்தது.
    • ஆலிவ் ஆயில் வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த முறை

    கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். உங்களின் கூந்தல் வறண்ட தன்மையுடையதா? இதோ, உங்கள் கூந்தல் பட்டு போன்று மிளிர சில குறிப்புகள் பின்வருமாறு:-

    1. வறட்சியால் முடி உதிர்வு எனில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து ஸ்கால்ப்பில் அப்ளை செய்து தொடர்ந்து குளித்து வர, முடி உறுதி அடைவதோடு உதிர்வதும் நிற்கும்.

     2. வறண்ட கூந்தல் உள்ளவர்கள் 25 மில்லி 'ஈவினிங் ப்ரிம் ரோஸ் ஆயில்' உடன் (அனைத்து ஹெல்த் புராடக்ட்ஸ் கடைகளிலும் கிடைக்கும்) தேங்காய்ப்பால் (கூந்தலின் தேவைக்கு ஏற்ப) கலந்து தலையில் தேய்த்து நான்கு மணிநேரம் ஊறவைத்துக் குளிக்க, கூந்தல் டால் அடிப்பது உறுதி

    3. ஒரு அவகாடோ பழத்தை மேஷ் செய்து முட்டையுடன் சேர்த்துக்கொள்ள வேண்டு. பின்னர் ஈரமான கூந்தலில் இந்த பேஸ்டை தடவி குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு மேல் ஊற வைத்து கழுவினால் மென்மையான கூந்தலை பெறலாம்.

     4. வெண்ணையை வரண்ட முடிகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யலாம், பின்னர் அரை மணி நேரம் ஊறவைத்து வழக்கம் போல் ஷாம்பூ போட்டு தலைமுடியை சுத்தம் செய்யலாம். இப்படி செய்தால் பளபளப்பான கூந்தலை எளிதாக பெறலாம்.

     5. வறண்ட கூந்தலுக்கு முட்டை மாஸ்க்கும் சிறந்தது. முட்டையின் வெள்ளை கரு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து தலையில் தேய்த்துக்கொள்ள வேண்டும். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கூந்தல் பட்டு போல் அலைபாயும்.

    6. ஆலிவ் ஆயில் வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த முறையாகும். 1/2 கப் ஆலிவ் எண்ணெயை இதமான சூட்டில் காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். வறண்ட உங்கள் கூந்தலில் இதனை தேய்த்து ஊறவைத்து பின்னர் கூந்தலை ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டு கவர் செய்யவும். 45 நிமிடங்களுக்கு பின்னர் ஷாம்பூ போட்டு அலசலாம். இதனை செய்து வந்தால் மென்மையான பளபளப்பான கூந்தலை பெறலாம்.

    7. வறண்ட கூந்தல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர கற்றாழை ஜெல் பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை மயிர்க்கால்களில் படும்படி தேய்க்கும் போது அது முடியின் வேர்க்கால்களுக்குள் நுழைந்து கூந்தல் வறண்டு போவதை தடுக்கிறது. கற்றாழை ஜெல்லை தடவிய பிறகு ஒரு ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு அலசிக் கொள்ளுங்கள்.

    8. ஆல்மண்ட் ஆயில்,ஆலிவ் ஆயில்,,நல்லெண்ணெய்,விளக்கெண்ணையை சமஅளவு எடுத்து,லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து குளிக்கலாம். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து குளிக்க உங்கள் கூந்தல் 'டால்' அடிப்பது உறுதி.

    • பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள்.
    • ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    இன்றைய ஃபேஷன் உலகில், பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள். இந்த நோக்கத்திற்காக பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. சருமத்தின் அழகு மட்டுமின்றி, அவர்கள் அழகு நிலையத்திற்குச் சென்று, தலைமுடியை அழகாக்குவதற்கு, ஹேர் ஸ்ட்ரெய்டனிங் மற்றும் ஹேர் ஸ்மூத்திங் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

     தற்காலிக ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், பிறகு முடி மீண்டும் சிக்கலாகிவிடும். நீங்கள் அதே நிரந்தர ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், முடி 3-6 மாதங்களுக்கு நேராக இருக்கும். ஆனால்... இந்த சிகிச்சையில் சில வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    * ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    * ஏனெனில் தோல் எரியும் அபாயம் உள்ளது.

    * ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் சரியாக செய்யாவிட்டால், பொடுகு, முடி உதிர்தல், நரை, முடி பிளவு முனைகள் ஏற்படும்.

    * ஹேர் ஸ்மூத்திங் செய்தால் முடி உதிர்தல், உச்சந்தலையில் எரிச்சல், சிலருக்கு ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்படலாம்.

    * கர்லிங் (சுருட்டையாக்குதல்) செய்யும்போது கூந்தல் முற்றிலும் உலர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவை வேறுபட்ட சூட்டைப் பயன்படுத்துகின்றன.

    * சுருட்டை முடியில் ஃபிளாட் அயர்னை பயன்படுத்துதல். ஃபிளாட் அயர்னை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை புளோ -டிரை செய்ய வேண்டும்.

    * கூந்தல் முழுவதையும் ஒரே நேரத்தில் அயர்ன் செய்யக்கூடாது. இதனால், சீரற்ற சூடும் அழுத்தமும் ஏற்படுகிறது. இவை இரண்டுமே சீரற்ற கூந்தல் நேராக்குதலுக்கு வழிவகுத்து விடும்.

    • செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
    • கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும்.

    நமது ஊர்களில் பலபேர் வீடுகளின் முன்பு சாதாரணமாக செம்பருத்தி செடி வளர்ந்து இருப்பதை பார்த்து இருப்போம். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

    தோல் நோய் வராமல் பாதுகாக்க காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன், ஆவாரம்பூ பாசிப்பயிறு, கருவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்புக்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நம் சருமமும் பளபளப்பாக இருக்கும்.

    பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தன்னுடைய தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் வாழ்க்கை முறை மாற்றம், சூழல், ரசாயன ஷாம்போ பாவனை இவற்றால் அது பலவீனமடைகின்றது. இது போன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஆங்கில மருத்துவத்திற்கு செல்வதற்கு முன் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு கை வைத்தியம் செய்வதால் ஆரோக்கியமான முடிவை பெற முடியும்.

    இதன்படி, செம்பருத்தி பூவை பயன்படுத்தி எண்ணெய் செய்து தடவுவதால் தலைமுடி பிரச்சினைகள் அனைத்தும் சரியாகின்றது என கூறப்படுகின்றது.

    செம்பருத்தி பூ வெப்பமண்டல பகுதிகளில் பொதுவாக காணப்படும் பூச்செடி. இதில் இருக்கும், இலை மற்றும் பூ உங்கள் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில், செம்பருத்தியை தலைமுடி பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்துவது, அதன் நன்மைகள் என்ன? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்...

    1. தேங்காய் எண்ணெய் + செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவினால் தலைமுடி உதிர்வு குறையும்.

    2. செம்பருத்தி எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் தலைமுடி பாதுகாக்கப்படுகின்றது.

    3. செம்பருத்தி எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, தலைமுடியை பளபளப்பாக்கவும் உதவியாக இருக்கின்றது.

    4. மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டம், புதிய முடி வளர்ச்சி மற்றும் சுழற்சியைத் தூண்டுதல் ஆகிய வேலைகளை செம்பருத்தி பார்க்கிறது.

    5. இந்த எண்ணெயை குளிக்கும் முன்னர் தடவுவதால் பலவீனமான தலைமுடிகள் உதிர்ந்து புதிய தலைமுடி வளர்வதற்கு உதவியாக இருக்கின்றது.

    6. சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிலை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதேபோன்று வாரத்திற்கு 2 முறை செய்துவந்தால் தலைமுடி பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இப்படி செய்து வரும்போது நம் கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும். உடம்பில் உள்ள சூடு தன்மை குறையும்.

    7. அதிக தலைமுடி உள்ளவர்களுக்கு பேன் ஈறு தொல்லை அதிகமாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் இரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அப்படியே படுத்து உறங்கலாம். நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க 2, 3 செம்பருத்திப் பூக்களை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

    • அழகிய கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் இல்லை.
    • மசாஜ் செய்வது தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

    நீளமான அழகிய கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் இல்லை. இதை எப்படி எளிதில் பெறுவது என்று சொல்கிறோம்.

    மசாஜ்

    உங்கள் கூந்தலை எண்ணெய் மசாஜ் செய்வது தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது தேவையான ஊட்டச்சத்தை கொண்டு சேர்க்க உதவும்.

    அவ்வபோது ட்ரிம் செய்யவும்

    நீங்கள் சலூனுக்கு செல்வதை விரும்பவில்லை என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில் உங்கள் கூந்தலின் நீளம் குறைந்துவிடும் என்ற பயம்தானே! ஆனால், உண்மையில் உங்கள் கூந்தல் வேகமாக வளரவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஒரு முறை கூந்தலை ட்ரிம் செய்வது அவசியம். இது உங்களை பிளவு பெற்ற கூந்தலில் இருந்து விடுவிக்கும்.

    சப்ளிமென்ட்

    சரியான விட்டமின்களை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். கடைகளில் கிடைக்கும் விட்டமின் மாத்திரைகளில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் விட்டமின் பி அதிக அளவில் இருக்கும். இது கூந்தலின் ஆரோக்கியத்திற்கு அவசியம். பயோடின் போன்றசப்ளிமென்ட்களும் கூந்தலை ஆரோக்கியமாக்கும்.

    ஷாம்பு

    நல்ல ஷாம்பூ நல்ல கூந்தலை கொடுக்கும். ஷாம்பூ கூந்தலை நன்றாக கிளென்ஸ் செய்து தூசிகளில் இருந்து காத்து கூந்தலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.

    குளிர்ந்த நீரில் கூந்தலை அலசவும்

    இந்த எளிமையான டிப் உங்கள் கூந்தலுக்கு பல வித்தியாசங்களை ஏற்படுத்தும். உங்கள் கூந்தலை ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு சுத்தம் செய்ததும் குளிந்த நீரால் கூந்தலை அலசவும். இது உங்கள் கூந்தலில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். சூடான நீரில் தலைக்குளிப்பதை தவிர்க்கவும்.

    ஹீட் ஸ்டலிங் செய்வதை குறைத்திடுங்கள்

    ஸ்ட்ரெயிட்னர் மற்றும் கர்லர் போன்ற சாதனங்களை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்திடுங்கள். இது உங்கள் கூந்தலை எளிதில் உடையச் செய்யும். சரியான ஹீட் புரொடெக்டிவ் கிரீம், ஸ்பிரேக்களை பயன்படுத்திய பிறகே இந்த சாதனங்களை கூந்தலில் பயன்படுத்தவேண்டும்.

    • சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.
    • ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது.

    பெண்ணுக்கும், ஆணுக்கும் முடிகொட்டும் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. அதிலும் ஆண்களுக்கு முடி கொட்டி வழுக்கை வந்துவிட்டால் தன்னம்பிக்கை இழந்து அதனால் மிகவும் வறுத்த படுகிறார்கள். தற்சமயம் சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.

    எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளிக்க முடியும். ஆனால் தலை முடி உதிர்வதை தடுப்பதும், அதனால் தலையில் வழுக்கை ஏற்படுவதையும் நம்மால் சமாளிக்கவே முடியாது.

    அவ்வாறு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட அந்த இடத்தில் எவ்வாறு மீண்டும் முடி வளர வைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க...

    வெங்காயம் ஹேர் பேக்

    சின்ன வெங்காயத்தை நன்ற அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த பேஸ்டை உங்கள் தலையில் நன்கு மசாஜ் செய்து தலையில் நன்கு படும் படி ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

    ஆலிவ் ஆயில் மசாஜ்

    ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. இதனைத் தொடர்ந்து தலையில் தேய்த்து வர, நல்ல முன்னேற்றம் இருக்கும்.

    ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்

    தேன்- 1 டேபிள் ஸ்பூன்

    பட்டை பொடி- 1 டேபிள் ஸ்பூன்

    இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு விட வேண்டும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.

    முட்டை ஹேர்மாஸ்க்:

    முட்டையின் மஞ்சள் கருவில் ரத்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒரு முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கருவை தனித்தனியாக பிரித்துக்கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் கருவில் ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

    இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து செய்து பின்னர் தலைக்கு குளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

    • கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
    • எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள் கண்டிஷனரை தவிர்ப்பது நல்லது.

    கண்டிஷனர் என்பது நம் கூந்தலை எண்ணெய் தன்மையுடன் வைத்து வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனால் எண்ணெய் பசை இல்லாத கூந்தலின் பகுதிகளில் மட்டும் கண்டிஷனரை பயன்படுத்தினால் மட்டும் போதும்.

    அதிக எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள், அல்லது பொடுகு பிரச்சினை உள்ளவர்கள், சீகைக்காய் பயன்படுத்துபவர்கள் கண்டிஷனர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    கண்டிஷனர் வாங்கும் போது உங்களது கூந்தலின் உறுதித்தன்மையை மனதில் வைத்து டிபாட்மெண்ட் ஸ்டோர்களிலோ அல்லது காஸ்மெடிக் கடைகளில் வாங்குவது நல்லது.

    அவகேடோ பழத்தின் சதை பகுதியை ஷாம்பு பயன்படுத்தி குளித்த பிறகு கூந்தலில் மட்டும் படும்படி தேய்த்து 5 நிமிடம் கழித்து குளித்து வந்தால் கூந்தலுக்கு நல்ல ரிசல்ட் இருக்கும்.

    பூந்திக்கொட்டையை எடுத்து குளிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பூந்திக்கொட்டை ஊறவைத்த தண்ணீரை ஒவ்வொருமுறை ஷாம்பு வாஷிற்கு பிறகும் கூந்தலை இந்த தண்ணீரில் அலசி வர வேண்டும். இது இயற்கையாகவே கண்டிஷனர் போல் உங்களது கூந்தலை பாதுகாக்கும்.

    ஒரு ஸ்பூன் வினிகரை கால் கப் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த தண்ணீரையும் ஷாம்பு போட்டு குளித்த பிறகு இந்த வினிகர் கலந்த தண்ணீரில் கூந்தலை அலச வேண்டும். இவ்வாறு செய்யும் போது கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

    • வழக்கமாக கூந்தலுக்கு எண்ணெய் அவசியம்.
    • கூந்தலில் அதிக நேரம் எண்ணெய் விடாதீர்கள்.

    வழக்கமாக கூந்தலுக்கு எண்ணெய் அவசியம். ஆனால் எல்லா நேரங்களிலும் எண்ணெய் தேய்க்கலாமா என்றால், அதிலும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

    எண்ணெய் வைத்தவுடன் சீப்பு போடுவது

    பெண்கள் வழக்கமாக, கூந்தலில் உள்ள சிக்குகளை நீக்க, கூந்தலுக்கு எண்ணெயிட்ட பிறகு சீப்பை பயன்படுத்தி வாருவது இயற்கையானது. ஆனால் இது ஒரு பெரும் தவறு, அதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

    அதே மாதிரி, நல்ல எண்ணெய் மசாஜ் செய்த பிறகு, சீப்பு பயன்படுத்தினாலும் உச்சந்தலையில் உள்ள கூந்தல் உடையக்கூடியதாக மாறும். அதாவது, கூந்தலுக்கு எண்ணெய் வைத்தவுடன் கூந்தலுக்கு சீப்பு பயன்படுத்துவது உடைப்பு மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். உங்கள் கூந்தலுக்கு சீப்பு வேண்டும் என்றால், மெதுவாக உச்சந்தலையில் இருந்து கீழ்நோக்கி சீவலாம்.

    இரவு முழுவதும் கூந்தலில் எண்ணெய் வைத்திருப்பது

    பெரும்பாலான இந்திய பெண்கள் செய்யும் மற்றொரு பொதுவான தவறு, இரவு முழுவதும் உச்சந்தலையில் எண்ணெயை வைத்திருப்பது. இது உங்கள் கூந்தலை கிரீஸ் மற்றும் பிசுபிசுப் தன்மை கொண்டதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் படுக்கை மற்றும் தலையணையில் இருந்து அழுக்குகளையும் சேகரிக்கும்.

    இந்த அழுக்கு உங்கள் உச்சந்தலையின் இயற்கை எண்ணெய்களுடன் எளிதில் கலந்துவிடும் மற்றும் உச்சந்தலையில் சிக்குகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, உங்கள் கூந்தலில் அதிக நேரம் எண்ணெய் விடாதீர்கள்.

    கூந்தல் ஈரமாக இருக்கும்போது எண்ணெய் தேய்ப்பது

    சில பெண்களுக்கு ஈரமான கூந்தலுக்கு எண்ணெய் பூசும் பழக்கம் உள்ளது. இந்த தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம். உங்கள் கூந்தல் ஈரமாக இருக்கும்போது, தலைமுடியின் வேர்க்கால்கள் மிகவும் மென்மையாக இருக்கும்.

    மேலும் மென்மையான சிக்கு மற்றும் இழுப்பது கூட முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் கூந்தலை பாதுகாக்க, முதலில் உங்கள் கூந்தலை உலரவிட்டு, பின்னர் எண்ணெயை பயன்படுத்துங்கள்.

    அதிகப்படியான எண்ணெய் பயன்படுத்துதல்

    உலர்ந்த கூந்தல் மற்றும் உச்சந்தலையாக இருந்தாலும், அதிகப்படியான எண்ணெயை பயன்படுத்துவது நல்லதல்ல. உங்கள் கூந்தலுக்கு தேவைப்படுவதை விட அதிகமாக பயன்படுத்த வேண்டாம். எண்ணெயில் இருந்து விடுபட உங்களுக்கு நிறைய ஷாம்பு தேவைப்படும், இது உங்கள் கூந்தலை பராமரிக்கும். அதன் இயற்கையான பாதுகாப்பு எண்ணெய்களை எடுத்துக்கொள்ளும்.

    கூந்தலை மிகவும் இறுக்கமாக கட்டுவது

    முன்பு குறிப்பிட்டபடி, உச்சந்தலை கூந்தல் தளர்வானதாக இருப்பதால், எண்ணெய் வைத்தப் பிறகு, உங்கள் கூந்தலின் மயிர்க்கால்கள் பாதிக்கப்படக்கூடியதாகவும் உடையக்கூடியதாகவும் மாறும். அதனால், உங்கள் கூந்தலை இறுக்கமாக அல்லது பின்னலில் கட்டுவது வேர்களை பலவீனப்படுத்தி கூந்தல் உதிர்வை ஏற்படுத்தும். ஒரு தளர்வான குறைந்த போனிடெயில் கட்டவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
    • தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.

    ஆளி விதைகள் அறிவியல் பெயர் லினம் உசுடாடிசிமம் ஆகும். ஆளிவிதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து காரணமாக முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.

    ஆளிவிதையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான முடிவளர்ச்சிக்கு பங்களிக்கும். நீண்ட மற்றும் வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது.

    ஆளிவிதையில் 18 முதல் 24 சதவீதம் புரதம் உள்ளது. இதனால் தலைமுடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

    ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்து நல்ல முடிவளர்ச்சிக்கு உதவுகிறது.

    ஆளிவிதைகளில் லிக்னான்ஸ் எனப்படும் தாவர கலவை உள்ளது. இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இந்த ஆண்டிஆக்சிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாத்து தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.

    மேலும் முடிவளர்ச்சிக்கு சீரான உணவு, மன அழுத்த மேலாண்மை மற்றும் சரியான முடி பராமரிப்பு நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.

    • `ஹேர் ஸ்பிரே'யை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
    • இன்றைய நாளில் இளம் வயதிலேயே பலரும் சந்திக்கும் பிரச்சினை நரைமுடி.

    இன்றைய நாளில் இளம் வயதிலேயே பலரும் சந்திக்கும் பிரச்சினை நரைமுடி. அதற்காக பலவித செயற்கை சாயங்களை பூசி, பக்கவிளைவுகள் போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள். ஆனால், நரைமுடியை இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற உதவும் `ஹேர் ஸ்பிரே'யை வீட்டிலேயே தயாரிக்கலாம். அது எப்படி என்று பார்ப்போமா?

    தேவையான பொருட்கள்:

    பிரிஞ்சி இலை- 3

    கிராம்பு- 1 ஸ்பூன்

    காபித் தூள்- 1 ஸ்பூன்

    தயாரிக்கும் முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் பிரிஞ்சி இலையை நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். பின்னர் அதில் கிராம்பு சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து  இது ஆறியவுடன் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் காபி தூளை சேர்த்து கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

    இதை நரைமுடி இருக்கும் இடத்தில் தொடர்ந்து ஸ்பிரே செய்து வந்தால், விரைவில் நரைமுடி கருப்பாக மாறும். இதில் உள்ள காபி, மென்மையான கூந்தலுக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்.

    • ஷாம்புக்கு முன் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது.
    • முடியை அலசுவது முடியின் ஒட்டும் தன்மையை நீக்குகிறது.

    சூரிய ஒளி காரணமாக காற்றில் ஈரப்பதம் இருக்காது. இதனால் முடி உதிர்வு, மற்றும் உயிரற்ற முடி ஒரு பொதுவான பிரச்னையாக மாறும். அதே சமயம் தலைமுடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால், முடி தொடர்பான பல பிரச்னைகளும் ஏற்படும். முடி உதிர்தல், ஒட்டும் முடி, பொடுகு மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகள் இதில் அடங்கும்.

    இதுபோன்ற முடி தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபட சிலர் தினமும் தலையை அலசுவார்கள். தினமும் தலைமுடியைக் கழுவுவது முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லதா? இது முடிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விளக்கங்களை இங்கே காண்போம்.

    தினமும் தலை குளிப்பது முடி உதிர்வை ஏற்படுத்துமா?

    கோடை காலமோ அல்லது குளிர் காலமோ, ஒவ்வொரு நபரும் தவறாமல் தலைமுடியை அலச வேண்டும். முடியை அலசுவது முடியின் ஒட்டும் தன்மையை நீக்குகிறது. இது தானாகவே முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கிறது. முடி உதிர்தலுக்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை.

    தலைமுடியை தேவைக்கு குறைவாகக் அலசினால், முடி வலுவிழந்து, உச்சந்தலையில் அதிகப்படியான சருமம் உற்பத்தியாகி, முடியை ஒட்டும் தன்மையுடையதாக்கி, முடி உதிர்வை அதிகரிக்கும். இதேபோல், ஒருவர் தலைமுடியை அலசினால், அது உச்சந்தலையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக, உச்சந்தலையில் அதிக வறட்சி ஏற்படுவதுடன், முடி மிகவும் வறண்டு, உயிரற்றதாக மாறும். இதனால் தினமும் தலைக்கு குளிக்கக்கூடாது.

    வாரத்திற்கு எத்தனை முறை தலை குளிக்க வேண்டும்?

    வாரத்திற்கு எத்தனை முறை முடியை கழுவ வேண்டும் என்பது நபரின் முடி வகை மற்றும் முடி அடர்த்தியைப் பொறுத்தது. உதாரணமாக, ஒருவருக்கு சுருள் முடி இருந்தால், அவர்கள் 3-4 நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளிக்க வேண்டும். அதே நேரத்தில், ஒருவருக்கு எண்ணெய் பசை இருந்தால், அவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஒருவருக்கு மெல்லிய மற்றும் நேரான முடி இருந்தால், தலைமுடி அழுக்காக இருக்கும் போது தான் தலைக்கு குளிக்க வேண்டும்.

    தலைக்கு குளிக்கும் போது கவனிக்க வேண்டியவை

    தலைக்கு குளிப்பதற்கு முன், உங்கள் முடி வகையை நினைவில் கொள்ளுங்கள். ஷாம்பூவில் அதிக ரசாயனங்கள் பயன்படுத்தப் படுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    தலைமுடியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், மருத்துவர் பரிந்துரைக்கும் ஷாம்பூவை மட்டும் பயன்படுத்தவும்.

    ஷாம்புக்கு முன் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது. இது முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

    • தலைமுடி அழகை மட்டும் தருவதில்லை. உடலுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
    • ஊட்டச்சத்து குறைவினாலும் முடி கொட்டுதல் ஏற்படுகிறது.

    உடலின் உச்சிப் பகுதியை ஆக்கிரமித்துள்ளவை ரோமங்களே. அதை தலைமுடி என்றும், கேசம் என்றும், கூந்தல் என்றும் அழைக்கின்றோம். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனது கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும், பளபளப்புடனும் இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஆண்களை விட பெண்களே கூந்தல் அலங்காரம் செய்து கொள்ள அதிக நேரத்தை செலவிடுகின்றனர். மேலும் கேசத்தைப் பராமரிக்க ஒரு தொகையையே செலவு செய்கின்றனர்.

    தலைமுடி அழகை மட்டும் தருவதில்லை. தலைக்குப் பாதுகாப்பையும், சீதோஷ்ண நிலையை சமப்படுத்தி உடலுக்குப் பாதுகாப்பையும் அளிக்கிறது. சித்தர்கள். முனிவர்கள், ரிஷிகள், ஜடாமுடியுடன் காட்சி தருவதற்குக் காரணம் இதுவே ஆகும்.

    பிறவியிலேயே எல்லோருக்கும் ஆரோக்கியமான கூந்தல் இருக்கிறது. ஆனால் கவலைப்படுவதாலும், கூந்தலை பாதுகாக்காததாலும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் முடி கொட்டுதல் ஏற்படுகிறது.

    நாம் தலை வாரும்போது சீப்பில் சில முடிகள் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அதை அருவருக்கத்தக்க அன்னிய பொருளாகத் தூக்கி எறிந்து விடுகிறோம். உதிர்ந்த முடிகளுக்கு புதிய முடிகள் அதே இடத்தில் முளைத்து விடுவது இயற்கை. சில சமயம் இயற்கை தன்மைக்கு மாறுபட்டு தலைமுடி வேரோடு கொட்டுவதையே முடி கொட்டுதல் என்கிறோம்.

    முடி கொட்டுதலுக்கான காரணங்கள்:

    மனச்சோர்வு, தூக்கமின்மை, மற்றும் நீண்ட நாள் நோய் காரணமாக முடி கொட்டுதல் ஏற்படும். மேலும் ஊட்டச் சத்தின்மையாலும், அதிக சூடான நீரில் குளிப்பதாலும், குளித்த பின் தலையை நன்கு உலர விடாத காரணத்தாலும் முடி கொட்டுதல் ஏற்படும்.

    பெண்களின் உடலில் சுரக்கும் பெண்மை ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன், ஆண்களுக்கு ஆண்மையை வெளிப்படுத்தும் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன்களின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களும் முடி கொட்டுதலை ஏற்படுத்தும்.

    தலையில் ஏற்படும் பொடுகு, தோல் நோய்கள், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ரத்த சோகை, ஒத்துவராத மருந்துகள், ரசாயனக் கலப்புள்ள ஹேர் ஆயில், ஷாம்பு ஆகியவற்றினாலும் முடி கொட்டுதல் ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு உப்புத் தண்ணீரில் குளிப்பதாலும், மலச்சிக்கல் ஏற்படுவதாலும், உடல் உஷ்ணத்தாலும் முடி கொட்டுதல் ஏற்படும்.

    ×