என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவிட்-19"
- இலவசமாக மத்திய அரசு வழங்கிய தடுப்பூசியால் நிலைமை கட்டுக்குள் வர தொடங்கியது
- பலருக்கு நுரையீரல் திறன் பாதிப்பு நிரந்தரமானதாக இருக்கும் என ஆய்வில் தெரிகிறது
கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றி உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதல் 2020 மார்ச் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பரவியது.
கோவிட் பெருந்தொற்று பரவலை தடுக்க அரசு கொண்டு வந்த நாடு தழுவிய பொது முடக்கத்தினால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்தனர். ஆனாலும், அடுத்தடுத்த மாதங்களில் இந்தியாவில் வெகுவேகமாக லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்.
2021 ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய மருந்து நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக அனைவருக்கும் வழங்க தொடங்கியது.
மக்கள் முன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டதால் சிறிது சிறிதாக நிலைமை கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், வேலூரில் உள்ள கிறித்துவ மருத்துவ கல்லூரி (Christian Medical College) கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான இந்தியர்களின் நுரையீரல் திறன் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது.
அந்த ஆய்வு, "ஐரோப்பியர்கள் மற்றும் சீனர்கள் ஆகியோருடன் ஒப்பிட்டால், கொரோனா தாக்குதலுக்கு உள்ளான இந்தியர்களின் நுரையீரல் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு சிலருக்கு காலப்போக்கில் இந்த பாதிப்பு சரியாகலாம்; ஆனால், பலருக்கு அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் தொடரும் ஒரு நிரந்தர பாதிப்பாகத்தான் இது இருக்கும்" என தெரிவிக்கிறது.
"பப்ளிக் லைப்ரரி ஆஃப் சைன்ஸ்" (PLOS) எனும் லாப நோக்கற்ற அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வு கட்டுரைக்காக பங்கேற்ற நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பலவித பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
"அனைத்து விதமான பரிசோதனைகளிலும், அயல்நாட்டினருடன் ஒப்பிட்டால் இந்தியர்களின் நுரையீரல் திறன் மிக குறைவாக இருந்தது" என கிறித்துவ மருத்துவ கல்லூரியின் நுரையீரல் மருத்துவ துறையின் பேராசிரியர் டி. ஜே. கிறிஸ்டோபர் தெரிவித்தார்.
- 2020ல் பரவிய கொரோனா பெருந்தொற்று லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது
- கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசியே புதிய திரிபிலிருந்தும் காக்கும் என்றார் டெட்ரோஸ்
2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் நுண்கிருமியால், கோவிட்-19 எனும் சுவாச தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது.
இதை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி சுகாதார அவசர நிலையை கொண்டு வந்தது.
2020ல் உலகின் அனைத்து நாடுகளிலும் வெகுவேகமாக பரவிய இந்த பெருந்தொற்று, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது.
உயிரிழந்தவர்களின் உடல்களை கூட உறவினர்கள் தூரத்தில் நின்று மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு, அந்த உடல்களை மருத்துவமனை ஊழியர்களே அடக்கம் செய்தனர்.
பெருந்தொற்று பரவலை தடுக்க இந்தியா உட்பட பல உலக நாடுகள் மாதக்கணக்காக ஊரடங்கை பிறப்பித்தன. இதனால், பெருமளவு தொழில் முடக்கம் மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டது.
லட்சக்கணக்கான உயிர்சேதத்தினாலும், கோடிக்கணக்கான பொருளாதார இழப்பினாலும் உலகையே அச்சுறுத்திய கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி கொள்ள அறிவுறுத்தின.
இதன் பயனாக தொற்றினால் தாக்கப்படுபவர்கள் குறைய தொடங்கினர்.
2022 தொடக்கம் முதல் இந்தியாவில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் குறைந்தனர்.
2023 மே மாதம் உலக சுகாதார அமைப்பு, கோவிட் பெருந்தொற்றுக்கான சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில், சமீப சில மாதங்களாக ஆங்காங்கே இந்தியா உட்பட உலக நாடுகளில், ஜேஎன்.1 (JN.1) எனும் கொரோனா வைரசின் புதிய திரிபு பரவ தொடங்கி உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேய்சஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜெனிவாவில் இந்த புதிய திரிபு குறித்து கருத்து எச்சரித்துள்ளார்.
அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
2023 டிசம்பர் மாதம் மட்டுமே, ஜேஎன்.1 திரிபால் சுமார் 10 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எண்ணிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தை ஒப்பிட்டால் இது குறைவுதான் என்றாலும் இது ஏற்க கூடியது அல்ல.
மேலும் சில இடங்களில் இது பரவி தகவல்கள் தெரிவிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கங்கள்தான் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதுவும் ஓமிக்ரான் (omicron) வகை வைரஸ் என்பதால், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளே இந்த வைரசுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும்.
மக்கள் தடூப்பூசி இன்னமும் செலுத்தி கொள்ளா விட்டால் விரைவாக செலுத்தி கொள்வது நல்லது. அத்துடன் முககவசம் அணிவதும், பணிபுரியும் இடங்கள் மற்றும் வசிக்கும் இடங்ககள் காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
இவ்வாறு டெட்ரோஸ் கூறினார்.
- 1 வருடத்திற்கும் மேலாக பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன
- திறன் அடிப்படையிலான தரவரிசை பட்டியலில் கீழே உள்ளவர்கள் நீக்கப்படுவார்கள்
2020 கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொடங்கிய பொருளாதார மந்தநிலை நாளுக்கு நாள் மோசமடைவதால் உலகெங்கிலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இணையவழி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
அதனால் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக அத்துறையில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரூவை மையமாக கொண்டு செயல்படும் பிரபல இணையதள வர்த்தக நிறுவனம், ஃப்ளிப்கார்ட் (Flipkart).
2007ல் புத்தகங்களை இணையவழியில் விற்பதற்காக தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட், பிறகு நுகர்வோர் மின்னணு சாதனங்கள், நவீன ஆடைகள், அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை இணையதளத்தின் மூலம் விற்பனை செய்து, பெரும் லாபம் ஈட்டி வந்தது.
இதே துறையில் உள்ள அமெரிக்காவை மையமாக கொண்ட புகழ் பெற்ற அமேசான் நிறுவனத்திற்கு ஃப்ளிப்கார்ட் போட்டியாக இயங்கி வருகிறது.
2018ல் அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு முன்னணி மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை நிறுவனமான வால்மார்ட் (Walmart), ஃப்ளிப்கார்ட் நிறுவன பங்குகளில் 77 சதவீதத்தை விலைக்கு வாங்கியது.
2022-23 நிதியாண்டில் ஃப்ளிப்கார்ட் ரூ.4,890 கோடி நஷ்டத்தை சந்தித்ததாக 2023 அக்டோபர் மாதம் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், திறன் அடிப்படையில் தரவரிசை ஏற்படுத்தி அப்பட்டியலில் கீழே உள்ள சுமார் 7 சதவீதம் வரை பணியாளர்களை நீக்க ஃப்ளிப்கார்ட் முடிவு செய்துள்ளது.
பணிநீக்க நடவடிக்கை வரும் ஏப்ரலில் நிறைவடையும்.
புதியதாக பணியாளர்களை சேர்ப்பதை ஃப்ளிப்கார்ட் சில மாதங்களுக்கு முன்னரே நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 5 நிறுவன பங்குகள் முதலீட்டிற்கு 50 சதவீத லாபத்தை ஈட்டி தந்தன
- இவ்வருடம் முதல்முறையாக நிஃப்டி 21 ஆயிரத்தை கடந்து வர்த்தகமாகியது
2020 கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு விதித்த ஊரடங்கு உத்தரவினால் பல இந்தியர்கள் வீட்டிலிருந்தே வருவாயை அதிகரிக்கும் வழிகளை தேடி வந்தனர். அவர்களுக்கு பங்கு சந்தை ஒரு நல்வாய்ப்பாக அமைந்ததனால், அப்போதிலிருந்தே இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இவ்வருடத்தின் முதல் வர்த்தக நாளான ஜனவரி 2 முதல் கடந்த டிசம்பர் 21 காலம் வரை இந்திய பங்கு சந்தையில் பல பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை ஈட்டி தந்தன.
குறிப்பாக 5 நிறுவன பங்குகள் 50 சதவீதத்தை கடந்து வர்த்தகமாகி உள்ளன.
டாடா மோட்டார்ஸ் - ஜனவரி 2 அன்று 394 - டிசம்பர் 21 அன்று 708
என்டிபிசி - ஜனவரி 2 அன்று 168 - டிசம்பர் 21 அன்று 301
பஜாஜ் ஆட்டோ - ஜனவரி 2 அன்று 3573 - டிசம்பர் 21 அன்று 6246
எல் அண்ட் டி - ஜனவரி 2 அன்று 2089 - டிசம்பர் 21 அன்று 3424
கோல் இண்டியா - ஜனவரி 2 அன்று 224 - டிசம்பர் 21 அன்று 355
முதல்முறையாக, மும்பை பங்கு சந்தை பிஎஸ்ஈ (BSE) குறியீட்டு எண் 70,000 தொட்டதும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி (Nifty) 21,000 தொட்டதும் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ், முதலீட்டாளர்களுக்கு 44 சதவீதம் லாபம் ஈட்டி தந்தது. ஜனவரி 2 அன்று 2715 என தொடங்கி டிசம்பர் 21 அன்று 3850 என வர்த்தகமாகியது.
ரஷிய-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர், உலகளாவிய பொருளாதார மந்தநிலை உட்பட பல சிக்கல்களுக்கு இடையே பங்கு சந்தை வலுவாக இருந்ததை சாதனையாக குறிப்பிடுகின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.
- பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது
- கார்பா கொண்டாட்டத்தின் போது 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
கோவிட் பெருந்தொற்று என பரவலாக அழைக்கப்பட்ட, 2019 டிசம்பரில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தாக்குதல், 2020 முழுவதும் உலகையே உலுக்கியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு, 3 வெவ்வேறு காலகட்டங்களில் பெருமளவில் அனைத்து இந்தியர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது.
ஆனால், 2022லிருந்து 20 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட பலர் இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்த செய்திகள் சில மாதங்களாக வெளி வந்தன.
இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 15 தொடங்கி அக்டோபர் 24 வரை தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் பிரபலமான 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த கார்பா கொண்டாட்டங்களின் போது 12-ஆம் வகுப்பு மாணவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Mansukh Mandaviya) கருத்து தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கோவிட் பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் தங்கள் உடலை அதிகம் வருத்தி கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், சுமார் 2 வருடங்கள் வரை உடலுக்கு அதிக சிரமம் தரும் உடற்பயிற்சியிலோ அல்லது கடின உழைப்பு தேவைப்படும் செயல்களிலோ ஈடுபட கூடாது. இதனால் மாரடைப்பு வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.
இவ்வாறு மாண்டவியா எச்சரித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்