என் மலர்
நீங்கள் தேடியது "தொடக்க கல்வி பட்டயத்தேர்வு"
- வருகிற மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- விண்ணப்பங்களை வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை:
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வருகிற மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்ட்தில் அமைந்துள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக கீழ்க்கண்ட தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து தேர்வுக் கட்டணத்தினையும் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50-ம், மதிப்பெண் சான்றிதழ் (முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு) தலா ரூ.
100-ம், பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15-ம், ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70-ம் தேர்வு கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களை வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் 25, 26-ந்தேதி ஆகிய 2 நாட்கள் விண்ணப்பிக்க வேண்டும். (சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1000). தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்படங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடுமலை :
நடப்பாண்டுக்கான முதல் மற்றும் இரண்டாமாண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு ஜூன், ஜூலை மாதங்களில் நடந்தது. தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
விடைத்தாள்களின் ஒளிநகல்களை பெறுவது, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் நேரடியாகச்சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தபால் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மறுகூட்டல் விண்ணப்பிக்க தலா ஒரு பாடத்துக்கு 205 ரூபாயும், மறுமதிப்பீட்டுக்கு தலா ஒரு பாடத்துக்கு 505 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அவரவர் பகுதிக்கு அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாகச்சென்று உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு இன்று இறுதி நாளாக உள்ளது.இத்தகவலை திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தெரிவித்தார்.