என் மலர்
நீங்கள் தேடியது "சமையல் டிப்ஸ்"
- தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.
* இஞ்சிபூண்டு அரைக்கும் பொழுது சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் பிரெஷ்ஷாக இருக்கும்.
* வாழைப்பூ நறுக்கும்போது உப்புக்கலந்த தண்ணீரில் வாழைப்பூவை வெட்டிப்போட்டால் வாழைப்பூ கறுத்து போகாமல் இருக்கும்.
* கடல் பாசி காய்ச்சும்போது இறுதியாக சில சொட்டு எலுமிச்சை பழச்சாறு ஊற்றினால் கடல் பாசி கண்ணாடி போல தெளிவாக இருக்கும்.
* அசைவ இறைச்சிகள் கழுவும் போது உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கழுவினால் வாடை வராமல் இருக்கும்.
* ஸ்வீட் வகைகள் செய்யும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொண்டால் இனிப்பு தூக்கலாக தெரியும்.
* தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* துவரம் பருப்பை வேகவைக்கும் பொழுது தண்ணீரில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வேக வைத்தால் பொங்காது.
* பருப்புக் குழம்பில் இறுதியாக வெங்காயத்தை நெய்யில் தாளித்து ஊற்றினால் சுவை அதிகரிக்கும். நன்கு வாசனையாக இருக்கும்.
* வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.
* தேங்காய்ப் பாலில் பொட்டுக்கடலையை பொடி செய்து சேர்த்து உப்பு சேர்த்து தாளித்து இறக்கினால் அவசர சட்னி ரெடி.
* சாதம் மஞ்சளாக இருந்தால் சாதம் வடிக்கும் நேரத்தில் ஒரு துண்டு புளியை சேர்த்து பிறகு வடித்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.
* மாவில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொதித்தவுடன் இட்லி ஊற்றினால் இட்லி பஞ்சு போல இருக்கும்.
- பச்சரிசி தோசைக்கு இரண்டு ஓம இலையை சேர்த்து அரைத்தால் சுவையும், மணமும் கூடும்.
- அவரைக்காயை உணவில் கூடுதலாகச் சேர்த்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
* தேங்காய் பால் எடுக்கும்போது சிறிதளவு சமையல் உப்பை சேர்த்தால் பால் கூடுதலாக கிடைக்கும்.
* பஜ்ஜி, பூரிக்கு மாவு பிசையும்போது அதில் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய்யை சேர்த்து மாவு பிசைந்தால் எண்ணெய் அதிகம் உறிஞ்சாது.
* காய்கறிகளை வேகவைக்கும்போது, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்தால் போதும். அதிக தண்ணீர் சேர்ப்பது எரி பொருள் செலவை அதிகப் படுத்தும்.
* சேனைக்கிழங்கை வறுவல் செய்யும் முன்பு அதனை வேக வைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
* தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.
* கோதுமை மாவுடன் இளநீரை ஊற்றி பிசைந்தால் சப்பாத்தி ருசியாக இருக்கும்.
* வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும்போது அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்தால் நெய் மணக்கும்.
* பச்சரிசி தோசைக்கு இரண்டு ஓம இலையை சேர்த்து அரைத்தால் சுவையும், மணமும் கூடும்.
* குளோப் ஜாமூன் மாவுடன் சிறி தளவு நெய் சேர்த்து பிசைந்தால் ஜாமூன் மிருதுவாக இருக்கும்.
* அவரைக்காயை உணவில் கூடுதலாகச் சேர்த்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
* எந்த கீரையை சமைத்தாலும் தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் சுவையும், மணமும் கூடும்.
* பொங்கல் செய்யும்போது தண்ணீருடன் நெய் அல்லது டால்டா சேர்த்தால் பாத்திரத்தில் பொங்கல் ஒட்டாது.
- சீடைக்கு மாவு பிசைந்ததும், அதை சிறிது நேரம் ஊற விடவும்.
- தேன்குழலுக்கு தேங்காய்ப் பால் சேர்த்துப்பிசைந்து சுடுங்கள்.
* இனிப்பு பட்சணங்களுக்கு பாகு வைக்கும்போது நான்ஸ்டிக் பாத் திரத்தை பயன்படுத்துவதை விட அடி கனமான பாத்திரத்தை உபயோகிக்கலாம். பாகு பதம் சரியாக இருக்கும். சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போதுதான் பாகு நன்றாக வரும்.
* எந்தவிதமான காரமாக இருந்தாலும், பிசையும் மாவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை கலந்து செய்யவும். பட்சணம் உள்ளே மிருதுவாகவும், வெளியே கரகரப்பாகவும் வரும். வாயில் போட்டால் கரையும்படி மென்மையாக இருக்கும்.
* முறுக்கு, சீடை, தேன்குழல் செய்யும்போது அரிசி, உளுந்து மாவுடன் சிறிது ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். மொறுமொறுவென ருசி கூடுதலாக இருக்கும். ஏலக்காய் விதைகளை மாவில் சேர்த்து அரைத்து செய்தால், சுவையும் வாசனையும் பிரமாதமாக இருக்கும்.
* தேன்குழல், ரிப்பன், ஓமப்பொடி பிழியும்போது மாவு வைக்கும் முறுக்குக் குழாயின் உட்புறத்திலும், அழுத்திப் பிழியும் மேல் குழாயின் வெளிப்புறத்திலும் எண்ணெய் தடவிய பிறகு மாவைப் போட்டுப் பிழிந்தால் குழாயில் மாவு அதிகம் ஒட்டிக்கொள்ளாது.
* தேன்குழலுக்கு மாவு பிசையும்போது தண்ணீர் விட்டுப் பிசையாமல், தேங்காய்ப் பால் சேர்த்துப்பிசைந்து சுடுங்கள். தேன்குழல் வெள்ளை வெளேர் நிறத்தில் காட்சி அளிக்கும். சுவையாகவும் இருக்கும்.
* ரிப்பன் பக்கோடா செய்யும்போது அரிசி மாவு, கடலை மாவோடு இரண்டு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவும் கலந்து பிசைந்து பிழிந்து பாருங்கள். பக்கோடா கூடு கூடாக வருவதுடன் சுவையும் பிரமாதமாக இருக்கும்.
* மிக்சருக்கு மாவு கரைக்கும்போது மிளகாய்த் தூளுடன் சிறிது மிளகுத்தூளும் சேர்த்தால் சுவையும், மணமும் வித்தியாசமாக இருக்கும். வயிற்றுக்கும் நல்லது.
* பொரித்த மிக்சரை வடிதட்டில் கொட்டி ஆற விட்டதும், டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய்ப் பசை போனவுடன் பாலிதீன் கவரில் போட்டு வைத்தால் மிக்சரில் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கமறல் வராமல் இருக்கும்.
* லட்டு பிடிக்கப் பொரித்து வைத்த பூந்தி அதிகமாக இருந்தால் மிளகுப்பொடி, உப்பு தூவி, கடுகு, கறிவேப்பிலையைப் போட்டுத் தாளித்தால் காரசார காராபூந்தி ரெடி!
* சீடைக்கு மாவு பிசைந்ததும், அதை சிறிது நேரம் ஊற விடவும். அதன்பிறகு சிறிது சிறிதாக உருட்டி ஒரு துணியில் பரப்பவும். ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்தால், மாவில் இருக்கும் ஈரத்தைத் துணி உறிஞ்சிக்கொள்ளும். அதன்பிறகு சீடையைப் பொரித்தால் வெடிக்காமல் இருக்கும்.
* தீபாவளி லேகியம் செய்ய நேரமில்லையா? ஒரு கைப்பிடி டைமண்ட் கற்கண்டுடன் மூன்று சுக்கு, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், இரண்டு ஏலக்காயைச் சேர்த்து மிக்ஸியில் போட்டுப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இந்த பவுடரை டீயில் போட்டுக் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.
* கார வகைகளுக்கு மாவு கரைக்கும்போது மாவுடன் நேரடியாக உப்பை கலப்பதை விட, உப்பைத் தண்ணீரில் கரைத்துக் கலந்தால், எண்ணெய்யில் போட்டதும் வெடிக்காமல் இருக்கும். உப்பும் திட்டுத் திட்டாக இல்லாமல், நன்றாகக் கலந்திருக்கும்.
* அரிசி மாவை மெல்லிய துணியில் சிறு மூட்டையாகக்கட்டி ஆவியில் வேக வைக்கவும். ஆறியதும் உதிர்த்து உப்பு, ஓமம் அல்லது சீரகம் சேர்த்துப் பிசைந்து சீடை செய்தால் வாயில் போட்டதும் கரையும்.
- சட்னி செய்யும் போது எள்ளை வறுத்து பொடித்து தூவினால் ருசி அதிகமாக இருக்கும்.
- எண்ணெய் கொட்டினால் கோலமாவை போட்டு துடைத்தால் நீங்கி விடும்.
* வெங்காய சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவினால் ருசி அதிகமாக இருக்கும்.
* துருபிடித்த தோசைக்கல், வாணலி உள்ளிட்ட துருபிடித்த பாத்திரத்தில் படிந்துள்ள கறைகளை நீக்க உருளைக்கிழங்கை பாதியாக வெட்டிக் கொள்ளவும். சிறிது உப்பு மற்றும் எண்ணெய்யை கலந்து அதில் உருளைக்கிழங்கை தோய்த்து, துருபிடித்த பாத்திரத்தை தேய்த்தால் பளிச்சென மாறிவிடும்.
* சமையல் அறையில் கரப்பான் பூச்சி தொல்லையா? அந்த இடத்தில் கிராம்பை வைக்கலாம் அல்லது கிராம்பு எண்ணெய்யை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம். இதன் வாசனைக்கு கரப்பான் பூச்சி வராது. அடிக்கடி கிராம்பை மாற்ற வேண்டும்.
* புதிதாக வாங்கிய மண் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சிறிது நேரம் வைத்து சூடேற்றிவிட்டு, பின் அதை கழுவினால் மண் வாசனை வராது. விரிசலும் ஏற்படாது
* சாக்பீஸ்சை காடா துணியில் பொதிந்து வெள்ளிப்பொருள்கள் வைத்திருக்கும் இடத்தில் வைத்தால் அவை துரு பிடிக்காமலும், கருத்துப்போகாமலும் இருக்கும்.
* அடைக்கு கடலைப்பருப்பை ஊறவைத்து அரிசி கலந்து அரைக்கும் போது வேகவைத்த உருளைக்கிழங்கு அல்லது மரவள்ளிக்கிழங்கை போட்டு அரைத்தால் அடை ருசியாக இருக்கும்.
* சமையல் மேடையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மீது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.
* மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்சில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
* வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
* பாகற்காயை வில்லைகளாக நறுக்கி, எலுமிச்சை சாறில் சிறிது நேரம் ஊற வைத்து பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.
- சிக்கன், மட்டன் சமைக்கும் போது சிறிதளவு தயிர் சேர்த்தால் சுவை கூடும்.
- மோர்க் குழம்பில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்தால் வாசனையாக இருக்கும்
* பாகற்காயை சிறு துண்டுகளாக வெட்டி, அரிசி கழுவிய தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்தால் அதன் கசப்புத் தன்மை நீங்கி விடும்.
* சப்பாத்தி மிருதுவாக இருக்க சப்பாத்தி மாவை தேய்த்தவுடன் தோசைக்கல்லில் போட்டு எடுத்து விட வேண்டும்.
* பொரியலுடன் வேர்க்கடலையை வறுத்துப் பொடியாக்கி இறுதியில் சேர்த்தால் அதன் சுவை கூடும்.
* ஊறுகாயில் மஞ்சள் தூள் சேர்த்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். ஊறுகாய் மணமாகவும் இருக்கும்.
* அல்வா செய்யும் போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் அதனுடன் சிறிது சோள மாவை சேர்த்தால் சரியான பதம் கிடைத்துவிடும். அல்வாவின் சுவையும் அதிகரித்து விடும்.
* மோர்க் குழம்பு செய்யும்போது இறுதியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்தால் குழம்பு வாசனையாக இருக்கும்.
* அரிசி வைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் வண்டுகள் புகாது.
* சர்க்கரைப் பாகு செய்யும் போது அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்தால் குலாப் ஜாமூன் விரியாமல் இருக்கும்.
* சிக்கன், மட்டன் சமைக்கும் போது அதில் சிறிதளவு தயிர் சேர்த்தால் சுவை கூடும்.
- பேப்பர் விரித்து அப்பளம் வைத்தால் வெகு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
- பூச்சி, புழுக்கள் வராமல் இருக்க வசம்பை போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
* அப்பளம் வைக்கும் டப்பாவில் சிறிது அரிசி போட்டு அதன் மேல் பேப்பர் விரித்து அப்பளம் வைத்தால் வெகு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
* சிறிய வகை மீன்களுக்கு அதிக மசாலா சேர்க்காமல் உப்பும், மிளகாய்த்தூளும் கலந்தாலே சுவை அதிகமாக இருக்கும்.
* தக்காளி சட்னி தயார் செய்யும் போது வெங்காயம், தக்காளியின் அளவு குறைவாக இருந்தால் இரண்டையும் வதக்கியவுடன் சிறிது வறுத்த வேர்க்கடலை சேர்க்க சட்னியின் அளவு கூடும்.
* கறிவேப் பிலையை காம்புடன் பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு அதன் பசுமை மாறாமல் இருக்கும்.
* பூண்டுவை கேரட் துருவுவதில் துருவினால் அதன் தோல்கள் உரிந்து, உரிக்க சுலபமாக இருக்கும்.
* இட்லி பாத்திரத்திற்கு அடியில் இரண்டு ரூபாய் நாணயத்தை போட்டு இட்லி வேக வைத்தால் தண்ணீரின் அளவை அதன் சத்தத்தை வைத்து கண்டு பிடிக்க எளிதாக இருக்கும்.
* ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
* வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.
* காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
* காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
* கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போன்று செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாக இருக்கும்.
- அவலை அரைத்துக் கலந்தால் கூழ் பதமாகி விடும்.
- வடகம் கூழில் இஞ்சியை சேர்த்தால் மணமும் கூடும், காரமும் இருக்கும்.
* வடகம் செய்பவர்கள் ஐந்து பங்கு பச்சரிசிக்கு ஒரு பங்கு ஜவ்வரிசி சேர்த்து மாவு அரைத்து வடகம் பிழிந்தால் வடகம் நல்ல மொறுமொறுப்பாகவும் வெள்ளையாகவும் இருக்கும்.
* வடகம் கூழ் நீர்த்து விட்டால் ஊற வைத்த அவலை அரைத்துக் கலந்தால் கூழ் பதமாகி விடும்.
* வடகம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டுப் பார்த்தால் உப்பு குறைவாகவே இருக்க வேண்டும். அப்போது தான் காய்ந்த பிறகு உப்பு சரியாக இருக்கும்.
* சாதம் மிகுந்து விட்டால், அதனுடன் பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து வடகம் போல பிழிந்து காய வைக்கவும். இதை எண்ணெய்யில் பொரித்து சாப்பிட்டால் மொறுமொறுவென்று இருப்பதுடன் சுவையும் அசத்தும்.
* ஜவ்வரிசி வடகம் உடைந்து தூளாகி இருந்தால் அவற்றை பஜ்ஜி மாவில் இரண்டு நிமிடங்கள் ஊறப்போட்டு பிறகு பஜ்ஜி சுட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.
* வடகக்கூழில் பச்சை மிளகாயின் அளவைக் குறைத்து இஞ்சியை அரைத்துச் சேர்த்தால் மணமும் கூடும், காரமும் இருக்கும், உடம்புக்கும் நல்லது.
* வடகம் மாவில் எலுமிச்சைச்சாறு அதிகமாக விடக்கூடாது. வடகம் பொரித்து எடுக்கும் போது சிவந்து விடும். அதுபோல் வடகம் மாவு கிளறும்போது சிறிது பாலை விட்டுக்கிளறினால் வடகம் வெண்மையாக இருக்கும்.
* எந்தவித வடகக் கூழானாலும் அதில் சிறிது நெய் கலந்து விட்டால் பொரிக்கும்போது மணமாக இருக்கும்.
* வடகம், வற்றல் வைக்கும் டப்பாக்களில் வெந்தயம் சிறிது போட்டு வைத்தால் அவை சீக்கிரமாக நமத்துப் போகாது.
* வடகத்தில் பூச்சி வராமல் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க அதனுடன் மிளகாய் வற்றலையும் கொஞ்சம் போட்டு வைத்தால் போதும். மிளகாயின் காரத்தினால் பூச்சிகள் அண்டாது.
* வடகம் பிழியும் அச்சின் உட்புறம் கொஞ்சம் எண்ணெய்யைத் தடவி வைத்தால், சிரமப்படாமல் வடகம் பிழியலாம்.
* கொத்தமல்லி அதிகமாகவும், விலை மலிவாகவும் கிடைக்கும் நாட்களில் அதனுடன் உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து வடகமாகத்தட்டி வெயிலில் காயவைத்து குழம்பு, ரசத்துடன் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.
* குழம்பு வடகம் உருட்டி வைக்கும்போது ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து உருட்டி வைத்தால் ஒரு வருடத்துக்கு கெட்டுப்போகாது.
* ஜவ்வரிசி வடகம் முத்து முத்தாக இருக்க வேண்டுமென்றால் ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.
- உருளைக்கிழங்கை மசித்து கலந்தால் வடை எண்ணெய் குடிக்காது.
- தேங்காய் பால் ஊற்றிக் சர்க்கரை பொங்கல் செய்தால் சுவையாக இருக்கும்.
1. ஏலக்காய் தூள் அரைக்கும்பொழுது ஏலக்காய் நமத்து போய்விட்டால் வெறும் வாணலியில் ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின்னர் அரைத்து பாருங்கள். நைசாக அரைபடும்.
2. உளுந்து வடை செய்யும்போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.
3. சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
4. பாயசத்திற்கு திராட்சைக்குப் பதிலாக பேரிச்சம் பழத்தை பொடிதாக நறுக்கி, நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
5. ரவா தோசை செய்யும்போது 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்.
6. கனமில்லாத மெலிதான தோசைக்கல்லை சப்பாதிக்கும், அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும் பயன் படுத்த வேண்டும்.
7. புளித்த மோர் வீட்டில் இருந்தால் சிறிதளவு வெண்டைக்காயில் சேர்த்து பொறியல் செய்தால், வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.
8. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்த பின்பு அதிக நேரம் வதக்க கூடாது. அது பச்சையாக இருந்தால் தான் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
9. புடலங்காய் கசப்பாக இருந்தால், அவை பாம்பு ஏறிய காய் என்பார்கள். ஆகவே சிறிது கிள்ளி சுவைத்து பார்த்து வாங்க வேண்டும்.
10. அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அருகம்புல்லில் அதிகம்.
- சமையல் அறையில் வசம்பு தூள் தூவி விட்டால் பூச்சிகள் வராது.
- காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
* இறைச்சி வேகவைக்கும்போது கொஞ்சம் பாக்கு சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* வெந்தயத்தை வேகவைத்து, கடைந்து தேன் கலந்து உண்டு வர தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
* காலிபிளவர் சமைக்கும்போது கொஞ்சம் பால் சேர்த்தால் பூ போன்ற வெள்ளை நிறம் மாறாமல் இருக்கும். பச்சை வாடையும் வராது.
* பிரிட்ஜில் மாவை வைக்கும்போது உப்பு சேர்க்கக்கூடாது. உப்பு சேர்த்தால் புளித்துவிடும்.
* அலுமினியப் பாத்திரங்களில் அடிப்பிடிப்பு கறையை நீக்க உப்புக்காகிதம் கொண்டு தேய்த்தால் பாத்திரம் புதுசு போல மின்னும்.
* ஒரு கைப்பிடி கல் உப்பை துணியில் கட்டி அரிசி மூட்டைக்கு அருகில் வைத்தால் பூச்சிகள் எதுவும் வராது.
* சமையல் அறையில் வசம்பு தூள் தூவி விட்டால் பூச்சிகள் வராது.
* எறும்பு தொந்தரவு உள்ள இடங்களில் நான்கைந்து கிராம்பை போட்டு விட்டால் எறும்புகள் வராது.
* சீடை செய்யும்போது அதனை ஊசியால் குத்தி பின்பு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
* புளியை வெந்நீரில் ஊறவைத்து, பிறகு கரைத்தால் சீக்கிரமாக கரைந்துவிடும்.
* சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை அகற்றி வட்ட வடிவமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறு மொறுவென இருக்கும்.
* அரிசியில் வண்டோ, புழுவோ வராமல் இருக்க வேப்பம் இலைகளைப் போட்டு வைக்கலாம்.
* உலர்ந்த ஆரஞ்சு தோலை புகை போட்டால் வீட்டுக்குள் கொசு வராது. இது இயற்கையான கொசு விரட்டி.
* பூஜை செய்யும்போது வீட்டில் புகை அதிகமாக இருந்தால் ஒரு ஈரத்துணியை தொங்கவிடுங்கள். புகை காணாமல் போய்விடும்.
* சப்பாத்திக்கு மாவு பிசையும் முன்னால் கையில் கொஞ்சம் உப்பை தடவிக்கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
* உருளைக்கிழங்கை வேகவைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் அவை ஜொலிக்கும்.
* காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
- கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது நெய்யில் வதக்கி சேர்த்தால் மணம் கூடும்.
- ஊறுகாய்களில் கடுகு எண்ணெய்யை சேர்த்தால் கெடாமல் இருக்கும்.
* புதினா, தக்காளி இரண்டையும் அரைத்து, பஜ்ஜி மாவில் கலந்து கலர்புல் பஜ்ஜிகள் செய்யலாம்.
* ரசத்திற்கு புளி கரைக்கும்போது சிறிது வெல்லமும் சேர்த்து கரைத்தால் சுவை கூடும்.
* கடைகளில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை சிறிது நேரம் எலுமிச்சை சாறு கலந்த நீரில் முக்கி வைத்தால் அவற்றின் மீது தெளிக்கப்பட்டிருக்கும் ரசாயனத்தின் வீரியம் குறையும்.
* வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, தேன், வாழைப்பழம், பூசணி இவற்றை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
* தேங்காய் சட்னியில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக சிறிது தேங்காய் பால் கலந்தால் மணமும், சுவையும் கூடும்.
* மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களில் சிறிது கடுகு எண்ணெய்யை சேர்த்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
* கேரட், பீட்ரூட்டை துருவி தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் கண்ணைக் கவரும் கலர்புல் தோசை ரெடி.
* கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது கத்தரிக்காயை தனியாக நெய்யில் வதக்கி குழம்பில் சேர்த்தால் மணம் கூடும்.
* கிழங்கு வகைகளை சமைக்கும்போது அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயம் கலவையில் கிழங்குகளை புரட்டி எடுத்து பின் வதக்கினால், காரம், மணம் சூப்பராய் இருக்கும்.
* கீரை சமைக்கும்போது மஞ்சள்தூள் கலந்த சுடுநீரில் சிறிது நேரம் மூழ்க வைத்துவிட்டு சமைத்தால் கீரையின் நிறமும் மாறாது, ரசாயன பாதிப்பும் இருக்காது.
- ஆப்பிள் பழங்கள் வாடாமல் இருக்க எலுமிச்சை, ஆரஞ்சு சாறு கலந்து வைக்கலாம்.
- பொரிக்கும் போது எண்ணெய் பொங்காமல் இருக்க புளியை எண்ணெயில் போட்டால் போதும்.
* ரவா கேசரி தயாரிக்கும்போது அதில் ஆப்பிள், அன்னாசி, திராட்சை, மாம்பழத் துண்டுகளை, இறக்கும் முன் கலந்து கிளறவும். வித்தியாசமான பழக்கேசரி தயார்.
* நறுக்கிய ஆப்பிள் பழங்கள் வாடாமல் இருக்க சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு கலந்து வைக்கலாம்.
* ஏலக்காயை பொடித்து போட்ட பிறகு அதன் தோலை தூக்கி எறிந்து விடாதீர்கள். அப்படியே குடிக்கும் நீரில் போட்டால் போதும். மணமும், ருசியும் சேர்ந்த நீரை பருகலாம்.
* பலாப்பழத்தை வெட்டி சுளை எடுப்பதற்கு முன்னால் கையில் எண்ணெய் தடவிக் கொண்டால் அதில் உள்ள பால் கைகளில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும். வெட்டுவதற்கும் சவுகரியமாக இருக்கும்.
* பீன்ஸ் காய்ந்துவிட்டால் அதை வேகவைத்த பிறகுதான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் விரைவாக வேகாது.
* வடை தயார் செய்யும்போது மாவில் தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்.
* எந்த வகை குழம்பிலும் கடலை மாவை தனியாக கரைத்து, பின்னர் குழம்பில் சேர்த்தால் குழம்பு கெட்டியாகிவிடும்.
* மசாலா, குருமாக்களில் காரம் கூடுதலாகிவிட்டால் சிறிது தயிரை கடைந்து சேர்க்கவும் அல்லது தேங்காய்ப்பாலை விடவும். தேங்காய்ப்பாலை விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக பசும்பாலை சேர்த்துக்கொள்ளலாம்.
* பருப்பு உசிலியை பீன்சுக்கு பதிலாக வெண்டைக்காய், பாகற்காய் இவற்றிலும் செய்யலாம்.
* அல்வா கலவையை மிகவும் கெட்டியாக வரும் வரை வைக்கக்கூடாது. அடை மாவு பதத்தில் எடுத்தால் ஆறும்பொழுது சரியாக இருக்கும்.
* கீரையை கூட்டு செய்வதற்கு சிறிது சிறிதாக நறுக்காமல் ஒன்றிரண்டாக பிய்த்து அளவான தண்ணீரில் குக்கரில் வேகவிட்டு மிக்சியில் லேசாக அரைக்கவும். அரிந்தது போல மசிந்து விடும். சத்தும் கெடுவதில்லை.
* வாணலியில் ஏதேனும் உணவுப்பதார்த்தங்களை வறுக்கும்போதோ அல்லது பொரிக்கும்போதோ எண்ணெய் பொங்குமானால், சிறிது புளியை எண்ணெய்யில் போட்டால் போதும், பொங்காது.
* கொழுப்புச்சத்தை குறைக்க விரும்புபவர்கள் பன்னீரை பொரிக்காமல் பயன்படுத்தலாம்.
- வத்தக்குழம்பில் உப்பு அதிகமானால் தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவையும் கூடும்.
- பிரிஞ்சி இலையை பொடித்து மூலை முடுக்குகளில் போட்டால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.
* வெந்தயக்கீரையை வேகவைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் உடல் சுத்தமாகும். குடல் புண்கள் குணமாகும். மலச்சிக்கலையும் போக்கும்.
* பருப்புக்கீரையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளன. நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கும் வல்லமை இதற்கு உண்டு. உடலில் உள்ள கொழுப்புகளையும் கரைக்கும் ஆற்றல் கொண்டது. வெந்நீர் மற்றும் வியர்வையால் ஏற்பட்ட கொப்புளங்கள், தீக்காயங்களுக்கு பருப்புக்கீரையை அரைத்து தடவ குணம் பெறும்.
* வெண்டைக்காய் பொரியல் செய்து முடித்த பின்பு வேர்க்கடலையை பொடித்துப்போட்டு கலந்தால் சுவை கூடும். பொரியல் மீதமாகிவிட்டால் தயிர் சேர்த்து பச்சடி செய்து சாப்பிடலாம்.
* பூண்டு, வெங்காயம் நறுக்கிய பின்பு கைகளில் உப்பு தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவினால் வாடை வீசாது.
* பிரெட், பர்பி, மைசூர் பாகு போன்றவைகளை வெட்டும் கத்திகளை சூடாக்கி வெட்டினால் பிசிறு இல்லாமல் அழகான துண்டுகள் கிடைக்கும்.
* பால் திரிந்துவிட்டால் அதை வீணாக்காமல் வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளி நகைகள், கொலுசுகளை அதில் 15 நிமிடங்கள் ஊற வைத்து தேய்த்து எடுத்து துணியால் துடைத்துவிட்டால் புதிது போல 'வெள்ளி' மின்னும்.
* பிரிஞ்சி இலைகளை பொடித்து சமையலறை மூலை முடுக்குகளில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.
* வத்தக்குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் தேங்காய்ப்பால் சேர்த்தால் சரியாகிவிடும். சுவையும் கூடும்.
* பூரி உப்பலாக சில மணி நேரம் இருக்க, ரவை ஒரு ஸ்பூன், பச்சரிசி மாவு ஒரு ஸ்பூன் கலந்து கோதுமை மாவை கெட்டியாகப் பிசைந்து ஊற விடாமல் உடனே தடிமனாக தேய்த்து பொரித்து எடுக்கவும். உப்பலான சுவையான பூரி கிடைக்கும்.
* தக்காளி சீக்கிரமாக வதங்க, சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்தால் போதும்.
* சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காமல் அதனுடன் சிறிது உப்பு, சீரகம், மிளகு கலந்து சூப் போல பருகலாம். உடலுக்கு ஆரோக்கியமும், உற்சாகமும் மிகுதியாக கிடைக்கும்.
* பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிவிட்டு, எலுமிச்சை சாறில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து பத்திரபடுத்தி தயிர் சாதத்திற்கு எண்ணெய்யில் பொரித்தும், பொரிக்காமலும் சாப்பிடலாம். ருசி அமோகமாக இருக்கும்.
* சேப்பங்கிழங்கை வேகவைப்பதற்கு முன்பு கத்தி கொண்டு ஆங்காங்கே கீறிவிட்டால் வேகவைத்த பிறகு தோல் உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.
* காபி, டீ கறை படிந்த பீங்கான் பாத்திரங்களை எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து கழுவினால் பளிச்சென்று இருக்கும். எலுமிச்சை தோலை தூக்கி எறியாமல் பிரிட்ஜில் பாதுகாத்து பயன்படுத்தலாம்.