search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலுவை சம்பளம்"

    • ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
    • மாநில அரசு நிதியில் இருந்து நிதியை எவ்வாறு பகிர்ந்து அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை.

    ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் விடுவிக்கப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் போலராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைதொடர்ந்து, செப்டம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, எஸ்.எஸ்.ஏ.ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

    ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

    மத்திய கல்வி அமைச்சரிடம் 2 முறை கோரிக்கை வைத்தும், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதி இதுவரையில் வரவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    மேலும், மாநில அரசு நிதியில் இருந்து நிதியை எவ்வாறு பகிர்ந்து அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம் என்றார்.

    • தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ், உடுமலை ஒன்றிய கிராமங்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்
    • நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய பி.டி.ஓ., விடம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ், உடுமலை ஒன்றிய கிராமங்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு, கடந்த 3 மாதமாக வேலைக்கான சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை காலத்தில் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×