search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்லநேரம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
    • அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் நாட்டில் பல்வேறு இடங்களில், அந்த பகுதிக்கு ஏற்ப பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளி பண்டிகை மட்டும் ஒரே பெயரில் கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு ஐப்பசி 26-ந்தேதி (நவம்பர் 12) ஞாற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது நரகாசுர சதுர்தசி என்பார்கள். அதாவது அமாவாசை தினத்திற்கு முன் வரக்கூடிய திதி சதுர்த்தசி. இதன் காரணமாக வட இந்தியாவில் இந்த சதுர்தசி திதி வரக்கூடிய நாளில் தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது.

    தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் சதுர்தசி திதியும், அமாவாசை தினமும் சேர்ந்து வரக்கூடிய நவம்பர் 12-ந்தேதி தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது. மற்ற விரத தினங்களைப் போல தீபாவளி நன்னாளிலும் விரதம் இருந்து பகவான் கிருஷ்ணரை நினைத்தும், மகாலட்சுமி, குபேரரை வணங்கி பூஜை செய்தால் நல்லது. அதுமட்டு மல்லாமல் மிக முக்கியமான ஒன்று என்ன வென்றால், தீபாவளி அன்று வீட்டை சுத்தம் செய்யக்கூடாது. முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து தயாராக வைக்க வேண்டும்.

    தமிழக மக்கள் இதை ஒரு நாள் மட்டும் கொண்டாடுகின்றனர். ஆனால் மற்ற பல இடங்களில் தீபாவளியை ஐந்து நாள் கொண்டாட்டமாக கொண்டாடுகின்றனர். நவம்பர் 10-ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கி 14-ம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று தீபாவளி கொண்டாட்டம் முடிவடைகிறது.

    பொதுவாகவே அமாவாசை அன்று தான் தீபாவளி வரும். ஆனால் ஒரு சில வருடங்கள் அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வரும். இந்த வருடம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி வருகிறது. தீபாவளி அன்று புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், இனிப்பு சுவைத்தல் போன்றவை எப்படி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறதோ, அதே போல அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கங்கா நீராடல் எனப்படும் எண்ணெய் தேய்த்து குளிப்பதும் முக்கியம் ஆகும்.

    தீபாவளி அன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தீபாவளி பண்டிகையின் போது ஏழை, எளியோருக்கு, முடிந்த வரை புத்தாடை தானமும், இனிப்பு மற்றும் உணவு தானமும் செய்தால் அந்த மகாலட்சுமியின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ×