என் மலர்
நீங்கள் தேடியது "வாடிகன்"
- சுமார் 250,000 பேர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
- 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் அவரது விருப்பப்படியே வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் 266வது தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார்.
அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
3-வது நாளாக நேற்றும் போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது.
பின்னர் மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வாடிகன் நகரில் தொடங்கியது. அவரது உடலுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது.
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடி உள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து கிறிஸ்துவ பேராயர்கள் பங்கேற்றனர்.
பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
போப் பிரான்சிஸ் உடல் புனித பீட்டர் பேராலயத்தில் இறுதிச்சடங்குகளை முடித்து புனித மேரி பசிலிக்காவுக்கு கொண்டு வந்ததும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழுவினர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்
போப் பிரான்சிஸ், தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக வாடிகன் தெரிவித்தது. சுமார் 250,000 பேர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா என பல நாடுளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.
- கோவா-டாமன் பேராயரான பிலிப்பி நேரி பெரேரா முக்கியமானவர்.
- கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடும் இந்த பட்டியலில் உள்ளார்.
போப் பிரான்சிஸ் மரணமடைந்துள்ள நிலையில் புதிய போப் தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்து உள்ளது.
புதிய போப் தேர்வு செய்யும் கார்டினல் காலேஜில் இந்தியாவை சேர்ந்த 4 பேரும் உள்ளனர். இதில் கோவா-டாமன் பேராயரான பிலிப்பி நேரி பெரேரா (வயது 72) முக்கியமானவர். இவர் தற்போது இந்திய பிஷப் மாநாடு மற்றும் ஆசிய பிஷப் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்.
அடுத்ததாக திருவனந்தபுரத்தை மையமாக கொண்ட சீறோ மலங்கரா கத்தோலிக்க சபையை சேர்ந்த பசேலியோஸ் கிளீமிஸ் (64) உள்ளார். 2001-ம் ஆண்டு பிஷப்பாக நியமிக்கப்பட்ட இவர், 2012 முதல் கர்தினாலாக உள்ளார்.
இதைப்போல ஐதராபாத் பேராயர் அந்தோணி பூலாவும் (63) இந்திய கர்தினால்களில் முக்கியமானவராக உள்ளார். இவர் இந்தியாவின் முதல் தலித் கர்தினால் என்பது கவனிக்கத்தக்கது. இறுதியாக கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடும் (51) இந்த பட்டியலில் உள்ளார். போப் பிரான்சிசின் வெளிநாட்டு பயணங்களை ஒழுங்குபடுத்தி வந்த இவர், இளம் கார்டினல்களில் ஒருவராக உள்ளார்.
- உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப் தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி உடையவர்கள் 135 கர்தினால்கள் ஆவர்.
- ரகசிய வாக்கெடுப்பில 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெறுபவர் புதிய போப்பாக அறிவிக்கப்படுவார்.
வாடிகன் சிட்டி:
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடலுக்கு வாடிகனில் வருகிற 26-ந்தேதி இறுதிச்சடங்குகள் நடக்கின்றன.
போப் பிரான்சிஸ் மரணமடைந்ததை தொடர்ந்து புதிய போப் தேர்வு எப்போது? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக, போப் என்பவர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆன்மிக தலைவர் மட்டுமின்றி உலகின் சிறிய நாடான வாடிகனின் ஆட்சித்தலைவரும் என்பதால் புதிய போப் யார் என்பதை அறிய அகில உலகமும் ஆவலுடன் உள்ளது.
ஒரு போப் மரணம் அடைந்தாலோ அல்லது பதவி விலகினாலோ புதிய போப்பை தேர்வு செய்வதற்கு கத்தோலிக்க திருச்சபையில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட நடைமுறை உள்ளது. சிக்கலான இந்த செயல்பாடுகள் சுவாரஸ்யம் வாய்ந்ததும் கூட.
தற்போது போப் பிரான்சிஸ் மரணமடைந்துள்ள நிலையில், அவரது உடல் நல்லடக்கத்துக்குப்பின் 9 நாட்கள் வாடிகனில் துக்கம் (நோவன்டியலி) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கார்டினல்கள் எனப்படும் கர்தினால்கள் தலைமையில் போப் ஆன்ம இளைப்பாறுதலுக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
அதேநேரம் புதிய போப் தேர்வு செய்வதற்காக இந்த நாட்களில் உலகெங்கிலும் உள்ள கர்தினால்கள் வாடிகனில் திரளுகிறார்கள். இதற்காக ஒவ்வொருவருக்கும் போதிய நேரம் வழங்கப்படும்.
பின்னர் புதிய போப் தேர்வு செய்வதற்காக 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்களின் கான்கிளேவ் (மாநாடு) தொடங்கும். போப் இருக்கை காலியாக (செடே வேக்கண்டே) இருப்பதாக அறிவிக்கப்பட்ட 15 முதல் 20 நாட்களுக்குள் இந்த கான்கிளேவ் தொடங்க வேண்டும்.
உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப் தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி உடையவர்கள் 135 கர்தினால்கள் ஆவர். இதில் பெரும்பாலானவர்கள் (108 பேர்) மறைந்த போப் பிரான்சிசால் நியமிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் வாடிகனில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடி புதிய போப்பை தேர்வு செய்வர். இதற்காக சிற்றாலயத்துக்குள் நுழைந்தபிறகு வெளி உலகத்துடனான தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர். புதிய போப் தேர்வு செய்யும் வரை அவர்கள் வெளியே வரமாட்டார்கள்.
இந்த கான்கிளேவ் தொடங்கிய பிறகு தங்களுக்கு உள்ளேயிருந்து ஒருவரை புதிய போப்பாக தேர்வு செய்வார்கள். இதற்காக தினமும் 4 முறை வரை ரகசியமாக வாக்களிப்பார்கள்.
இதில் பெரும்பான்மை கிடக்காவிட்டால் அந்த வாக்குச்சீட்டுகளை பிரத்யேக ஸ்டவ் மூலம் எரிக்கப்படும். அத்துடன் புகை போக்கி மூலம் கரும்புகை வெளியிடப்படும்.
இதன் மூலம் புதிய போப் இதுவரை தேர்வாகவில்லை என்பதை அந்த சிற்றாலயத்துக்கு வெளியே கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களும், உலகம் முழுவதும் உள்ள மக்களும் அறிந்து கொள்ள முடியும்.
ரகசிய வாக்கெடுப்பில 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெறுபவர் புதிய போப்பாக அறிவிக்கப்படுவார். அந்த பெரும்பான்மை கிடைக்கும் வரை ஓட்டெடுப்பு தொடர்ந்து நடக்கும். இதனால் இந்த வாக்கெடுப்பு ஒரு வாரம் வரை நீடிக்கலாம்.
அதேநேரம் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 போப்களும் ஓரிரு நாட்களிலேயே தேர்வாகி இருந்தனர்.
இறுதியில் அதிக பெரும்பான்மை பெறும் கர்தினாலிடம் போப் பதவியில் அமர விருப்பம் குறித்து கேட்கப்படும்.
அவர் ஏற்றுக்கொண்டால், புகை போக்கியில் வெண் புகை வெளிவரும். அதன் மூலம் புதிய போப் தேர்வானது உறுதியாகி விடும். அப்போது ஆலய மணிகள் ஒலித்து மகிழ்ச்சியை பிரதிபலிக்கும்.
அதேநேரம் செயின்ட் பீட்டர்ஸ் பேராலய பால்கனியில் கர்தினால் ஒருவர் தோன்றி 'ஹேபிமஸ் பாப்பம்' என அறிவிப்பார். இந்த லத்தீன் வார்த்தைக்கு 'நம்மிடம் ஒரு போப் இருக்கிறார்' என்பது அர்த்தம். அதைத்தொடர்ந்து புதிய போப் பால்கனியில் தோன்றி அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு ஆசி வழங்குவார்.
பின்னர் அவர் போப் பதவியேற்று கத்தோலிக்க திருச்சபையின் நிர்வாகத்தை வழிநடத்துவார்.
- பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
- சாண்டா மார்ட்டா இல்லத்தின் தேவாலயத்தில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலை 7.35 மணிக்கு உயிரிழந்தார். 88 வயதான அவர் கல்லீரல் ஆழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2012 முதல் போப் ஆண்டவராக இருந்த பிரான்சிஸ் தனது எளிமை மற்றும் ஏழைகளிடம் காட்டிய இரக்க சிந்தைக்காக போற்றப்படுகிறார்.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு குறித்து விவாதிக்க இன்று ரோமில் உள்ள அனைத்து கார்டினல்களும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து போப் பிரான்சிஸ் உடைய இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு (08:00 GMT) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிச் சடங்கு செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு முன்னால் நடைபெறும். கார்டினல்கள் கல்லூரியின் டீன் ஜியோவானி பாட்டிஸ்டா ரே வழிபாட்டிற்கு தலைமை தாங்குவார். பின்னர் போப்பின் உடல் ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும்.
போப்பாண்டவரின் உடல் நாளை (புதன்கிழமை) காலை 07:00 GMT மணிக்கு செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு பொதுமக்களின் பார்வைக்காக எடுத்துச் செல்லப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
போப் பிரான்சிஸ் உடைய உடல் தற்போது அவர் 12 ஆண்டுகாலமாக போப்பாண்டவராக இருந்த காலத்தில் வாழ்ந்த சாண்டா மார்ட்டா இல்லத்தின் தேவாலயத்தில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை வாடிகன் வெளியிட்டுள்ளது.

- தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அத்தகைய வீட்டை தான் வாங்குவேன் என்று அதில் எழுதியுள்ளார்.
- அந்தக் கடிதம் குழந்தைத்தனமானது என்று அமலியா நினைத்தார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடைய இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. 22 வயதில் இறை சேவைக்கு தன்னை அர்ப்பணித்த அவரால் கத்தோலிக்க திருச்சபையில் பல சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன எனலாம்.
டிசம்பர் 17, 1936 அன்று அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ பிறந்தார். அவரது தந்தை, மரியோ ஜோஸ் பெர்கோக்லியோ, ரயில்வேயில் பணிபுரிந்தார், அவரது தாயார், ரெஜினா சிவோரி, வீட்டை நிர்வகித்தார்.
ஜார்ஜ் குழந்தைப் பருவத்தில் அவருடைய குடும்பம் பியூனஸ் அயர்ஸில் உள்ள மெம்ப்ரில்லர் தெருவில் வசித்து. அங்கு ஜார்ஜ், அமலியா டாமோன்டே என்ற தனது அண்டை வீட்டுப் பெண் மீது காதல் வயப்பட்டார்.
12 வயதில், ஜார்ஜ் அமலியாவுக்கு ஒரு காதல் கடிதம் எழுதினார். அதில் சிவப்பு கூரையுடன் கூடிய ஒரு சிறிய வெள்ளை வீட்டின் ஓவியத்தை வரைந்திருந்தார்.
தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அத்தகைய வீட்டை தான் வாங்குவேன் என்று அதில் எழுதியுள்ளார். மேலும், "நான் உன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், நான் ஒரு பாதிரியாராகிவிடுவேன்" என்றும் அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதம் குழந்தைத்தனமானது என்று அமலியா நினைத்தார். ஜார்ஜ் எதிர்பார்த்தபடி அவர் பதிலளிக்கவில்லை. அமலியாவின் கண்டிப்பான பெற்றோரும் இந்தக் கடிதத்தைக் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்து வைத்தனர். சிறிது காலத்திலேயே ஜார்ஜ் பெர்கோக்லியோ குடும்பம் அங்கிருந்து வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தது. அமலியா இறுதியில் வேறொருவரை மணந்தார். பல ஆண்டுகள் கழித்து ஏபி செய்தி நிறுவனத்துக்கு அமலியா டாமோன்டே அளித்த நேர்காணலில், ஜார்ஜ் அளித்த கடிதத்தை நினைவு கூர்ந்தார்.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஜார்ஜ் பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், அவர் ஒரு பாதிரியாராக மாற முடிவு செய்தார்.
அவர் 1969 இல் திருச்சபையில் திருச்சபைப் பொறுப்பேற்றார், இறுதியில் பியூனஸ் அயர்ஸின் பேராயரானார். மார்ச் 13, 2013 அன்று, அவர் 266 வது போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அசிசியின் புனித பிரான்சிஸால் ஈர்க்கப்பட்டு பிரான்சிஸ் என்ற பெயரைப் பெற்றார்.
போப் பிரான்சிஸ் ஏழைகளுக்கான தனது பணிவு மற்றும் அர்ப்பணிப்புக்காக உலகளவில் அறியப்படுகிறார். 88 வயதில் நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ், நேற்று (ஏப்ரல் 21) காலை உயிரிழந்தாக வாடிகன் அறிவித்தது.
- மாறாக நகரின் புறநகரில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்தார்.
- ஆயிரக்கணக்கான அர்ஜென்டினா நாட்டு மக்கள் ரோமிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ் 1936-ம் ஆண்டு பிறந்தார். தனது பெற்றோரின் 5 குழந்தைகளில் ஒருவராக பிறந்த அவருக்கு ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்று பெயரிட்டனர். தனது சிறுவயதிலேயே இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை கற்றுக்கொண்டார்.
சிறு வயதிலேயே சமூக உணர்வு உள்ளவராக இருந்திருக்கிறார். மேலும் தனது வாழ்நாளில் எளிமையை கடைபிடிப்பவராக இருந்து வந்துள்ளார். மேலும் எளிமையை கடை பிடிக்குமாறு அனைவருக்கும் போதித்துள்ளார். பியூனஸ் அயர்சின் பேராயராக இருந்தபோது, அவர் அதகாரபூர்வ இல்லத்தில் வசிக்கவில்லை.
மாறாக நகரின் புறநகரில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்தார். பேராயருக்கான அதிகாரபூர்வ வாகனத்தையும் பயன்படுத்த வில்லை. சாதாரண மக்களுடன் பேருந்து மற்றும் ரெயில்களில் பயணம் செய்தார். ரோமிற்கு செல்ல வேண்டியிருந்தபோது விமானத்தில் எகானமி வகுப்பில் பயணித்து சென்றிருக்கிறார்.
அவர் பேராயராக இருந்த போது தான், 2013-ம் ஆண்டு போப் பிரான்சிசாக பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான அர்ஜென்டினா நாட்டு மக்கள் ரோமிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இதனையறிந்த போப் பிரான்சிஸ், அவர்கள் அதிக செலவு செய்து ரோமிற்கு வருவதை ஊக்குவிக்கவில்லை. அவர்களை விமான டிக்கெட்டுகளுக்கு செலவழித்த பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள் என்று கூறினார்.
போப் பிரான்சிசாக மாறியபோதும் அவரிடமிருந்த எளிமை மாறவில்லை. மேலும் அனைவரிடமும் அன்பு காட்டுவதிலும் இறைவனுக்கு நிகராக திகழ்ந்து வந்தார் என்றால் மிகை ஆகாது.
- முந்தைய போப்களின் பிரம்மாண்ட இறுதிச் சடங்குகளைப் போல் அல்லாமல் தனது இறுதிச் சடங்கு மிகவும் எளிமையான முறையில் நடைபெற வேண்டும்.
- வெள்ளைத் தொப்பியையும் மத விழாக்களின் போது அவர் அணியும் கம்பளி போன்றவை அணிவிக்கப்படுகிறது.
கத்தோலிக்க திருசபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88 வயது) நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 21) காலை உயிரிழந்ததாக வாடிகன் அறிவித்தது.
போப் ஆண்டவர்கள் மறைவுக்குப் பிறகு நல்லடக்க சடங்குகள் மிக விரிவாக நடப்பது வழக்கம்.
ஆனால் முந்தைய போப்களின் பிரம்மாண்ட இறுதிச் சடங்குகளைப் போல் அல்லாமல் தனது இறுதிச் சடங்கு மிகவும் எளிமையான முறையில் நடைபெற வேண்டும் என்று போப் பிரான்சிஸ் விரும்பினார்.
மற்ற போப்ஸ் அடக்கம் செய்யப்பட்ட புனித பீட்டர்ஸ் பசிலிக்காவின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதை விட வாடிகன் நகரத்திற்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் தன்னை அடக்கம் செய்ய போப் பிரான்சிஸ் விரும்பினார்.
அங்குள்ள கன்னி மரியாளின் உருவத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தி காரணமாக இந்த முடிவை அவர் எடுத்தார். பிரான்சிஸ் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பும்போது கன்னி மரியாள் முன்பு பிரார்த்தனை செய்வார். அதே இடத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
ஒரு பிஷப் இறுதிச் சடங்குகளில் கடைப்பிடிக்கப்படும் அதே இறுதிச் சடங்குகள் தனக்கும் பொருந்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அதன்படி இறந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு அவர் விரும்பியபடி 3 கட்டங்களாக நடைபெறும். திங்கள்கிழமை காலை போப்பின் மரணம் உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக 3 நாட்கள் செயிண்ட்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில் வைக்கப்படுகிறது.
கடந்த காலத்தில் இறந்த போப்களின் உடல் சைப்ரஸ் ஈயம் மற்றும் ஓக் ஆகியவற்றால் ஆன 3 சவப்பெட்டிகளில் ஒன்றின் உள்ளே மற்றொன்று வைக்கப்பட்டது.
ஆனால் போப் பிரான்சிஸ் உடல் துத்தநாக விளிம்புடன் கூடிய மர சவப்பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. அதில் வைக்கப்படுவதற்கு முன்பு போப்பின் உடல் மீது மத நடவடிக்கைகளின் போது அவர் அணியும் பாரம்பரிய சிவப்பு அங்கி மிட்டர் என்று அழைக்கப்படும் வெள்ளைத் தொப்பியையும் மத விழாக்களின் போது அவர் அணியும் கம்பளி போன்றவை அணிவிக்கப்படுகிறது.
பசிலிக்காவில் போப்பின் உடல் புனிதர்களின் வழிபாட்டு பாடலுடன் புனித பீட்டர் பசிலிக்காவிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

கடந்த காலத்தில் போப்பின் சவப்பெட்டி உயர்த்தப்பட்ட மேடையில் வைக்கப்பட்டது. இப்போது. அந்த வழக்கம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தேவாலயத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் போப்பின் உடல் தெரியும் வகையில் சவப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கிற்கு முந்தைய இரவு கமெர்லெக்னோ சவப்பெட்டி சீல் வைக்கும் விழாவைச் செய்கிறார்.
இந்த நிகழ்வு மற்ற கார்டினல்கள் முன்னிலையில் நடைபெறும்.
போப்பின் இறுதிச் சடங்ககிற்கு கார்டினல்கள் கல்லூரியின் டீனும் அவரது வாரிசான உச்சப் போப்பாண்டவரும் தலைமை தாங்குகிறார்கள்.
போப் பிரான்சிஸ் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களின்படி அவரது உடல் வாடிகன் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்விற்கு கமர்லெக்னோ தலைமை தாங்குகிறார்.
கடந்த 100 ஆண்டுகளில் வாடிகன் நகருக்கு வெளியில் நல்லடக்கம் செய்யப்படும் முதல் போப் இவர்தான். இன்று கார்டினல் குழு கூட்டத்தின்பின் நாளை நல்லடக்கம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நற்கருணை என்பது பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு பரிசு அல்ல, ஆனால் பலவீனமானவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து.
- சமூக நீதிக்காகவும், புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக திருச்சபை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் (திருத்தந்தை) பிரான்சிஸ் இன்று தனது 88 ஆவது வயதில் காலமானதாக வாடிகன் அறிவித்துள்ளது.
அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் உடைய இயற்பெயர் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ. புவெனஸ் ஐரிஸ் நகரில் இத்தாலியைச் சேர்ந்த கணக்காளரான மரியோ ஜோஸ் பெர்கோக்லியோ மற்றும் இத்தாலிய குடியேறிகளின் மகள் ரெஜினா மரியா சிவோரி ஆகியோருக்கு ஐந்து குழந்தைகளில் மூத்தவராகப் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ பிறந்தார்.
அரசுப் பள்ளியில் படிப்பை முடித்து, புவெனஸ் ஐரிஸ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற இவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இயேசு சபையில் 1958இல் துறவு நிலை ஏற்றார். 1998 இல், புவெனஸ் ஐரிஸ் பேராயராகப் பொறுப்பேற்றார். 2001 இல் கார்டினலாக உயர்த்தப்பட்டார்.

2013, மார்ச் 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கத்துக்கு மாறாக அப்போதைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பதிவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் பரபரப்பான சூழலில் திருத்தந்தை ஆன ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ, போப் பிரான்சிஸ் ஆக தன்னை அடையாளப்படுத்தினார்.
சேரிகளின் போப்
ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புக்காக பிரான்சிஸ் "சேரிகளின் போப்" என்ற புனைபெயரைப் பெற்றார்.
அர்ஜென்டினாவில் பேராயராக இருந்தபோதும், வாடிகனில் போப் ஆகவும் தனது ஊழியம் முழுவதும், அவர் தொடர்ந்து வறிய சமூகத்தினரிடையே கருணை செலுத்தினார். சமூக நீதிக்காகவும், புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக திருச்சபை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

சீர்திருத்தவாதி
பழமைவாதத்தின் பேரில் புலம்பெயர்ந்தோர், LGBTQ கத்தோலிக்கர்கள் மற்றும் திருச்சபையால் பெரும்பாலும் விலக்கப்பட்ட மக்களையும் ஏற்று போப் பிரான்சிஸ் கத்தோலிக்க பொது மனப்பான்மையில் சீர்திருத்தங்களைச் செய்தார்.
வாடிகன் நிதி மற்றும் கட்டமைப்புகளில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினார். முதலாளித்துவ அமைப்புகளை சவால் செய்தல், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையை ஆதரித்தல் மற்றும் விவாகரத்து மற்றும் ஒர் பாலின உறவு போன்ற பிரச்சினைகளில் அவர்களுக்கு சமூகத்திலும் மதத்திலும் கோட்பாட்டு ரீதியாக இருந்த புறக்கணிப்பை எதிர்த்தல் ஆகியவை பழமைவாதத்தை எதிர்த்து போப் பிரான்சிஸ் செய்த முக்கிய பணிகளாகும். மத அடிப்படைவாதத்தை பிளேக் நோய் என்று போப் பிரான்சிஸ் கூறினார்.
12 ஆண்டுகள் திருச்சபையை வழிநடத்தி, கல்லீரல் அழற்சி நோயுடன் போராடிய பிறகு, பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) 88 வயதில் இறைவனடி சேர்ந்தார். தனது இறுதிச் சடங்கை எளிமையாக செய்ய வேண்டும் என்று போப் பிரான்சிஸ் முன்னரே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பணியைத் குரலற்றவர்களுக்கான குரலாகவும், சீர்திருத்தவாதியாகவும், திருச்சபையின் பணியின் மையத்தில் ஏழைகளுக்கான நற்பணியை தொடர்ந்து முன்னிறுத்திய மேய்ப்பராகவும் போப் பிரான்சிஸ் உடைய என்றும் மரபு நிலைத்திருக்கும்.
ஏழைகளை விலக்கி வைக்கும் உலக பொருளாதார அமைப்பைக் கண்டிக்கும் பிரான்சிஸ், "நற்கருணை என்பது பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு பரிசு அல்ல, ஆனால் பலவீனமானவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து" என்று கூறுவார்.

டைம் லைன்
2014 : பாலஸ்தீன மக்களின் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் விதமாக, மேற்குக் கரை நகரமான பெத்லகேமிலிருந்து இஸ்ரேலைப் பிரிக்கும் சுவர் அருகே பிரார்த்தனை செய்தார்.
2015 : ஏழைகளைச் சுரண்டி பூமியை ஒரு பெரிய குப்பைக் குவியலாக மாற்றியுள்ள கட்டமைப்பு ரீதியாக வக்கிரமான உலகளாவிய பொருளாதார அமைப்பைச் சரிசெய்ய ஒரு கலாச்சாரப் புரட்சிக்கு அழைப்பு விடுத்து, "லாடாடோ சி" என்ற அறிக்கையை வெளியிடுகிறார்.
2015 : அமெரிக்காவைக் காலனித்துவ காலத்தில் கைப்பற்றியபோது, பொலிவியாவில் பழங்குடி மக்களுக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை செய்த பாவங்கள் மற்றும் குற்றங்களுக்காக மன்னிப்பு கோருகிறது.
2015 : விவாகரத்து பெற விரும்பும் கத்தோலிக்கர்கள் தேவாலயத்தில் மறுமணம் செய்து கொள்ளும் வகையில், திருமண ரத்து செயல்முறை விரைவாகவும், எளிமையாகவும் மாற்றும் வகையில் மறுசீரமைக்கப்பட்டது.
2016 : அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இறந்த புலம்பெயர்ந்தோருக்காகப் பிரார்த்தனை போப் பிரான்சிஸ் செய்கிறார். எல்லைச் சுவரைக் கட்ட விரும்பியதற்காக அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் "ஒரு கிறிஸ்தவர் அல்ல" என்று போப் தெரிவத்தார்.
2019: கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கூட்டு உறவுகளை ஏற்படுத்தி, அல் அசார் இமாமுடன் "மனித சகோதரத்துவம்" ஆவணத்தில் கையெழுத்திடுகிறார்.
2021: ஈராக்கிற்கு விஜயம் செய்த முதல் போப் ஆன பிரான்சிஸ், உயர்மட்ட ஷியா முஸ்லிம் மதகுருவை சந்தித்தார்.
2023: அசோசியேட்டட் பிரஸ் நேர்காணலில் "ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது குற்றமல்ல" என்று அறிவிக்கிறார்.
2023: ஒரே பாலின ஜோடிகளுக்கு ஆசீர்வாதங்களை அங்கீகரித்தார். இதனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பிற இடங்களில் உள்ள பழமைவாத பிஷப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைத் சந்தித்தார்.
2025 ஏப்ரல் 20 (நேற்று) ஈஸ்டர் செய்தியாக, காசாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என்பதை தனது உரையில் வலியுறுத்தினார்.
- 88 வயதான போப், நிமோனியா, சுவாசக் கோளாறுக்கு சிகிச்சை பெற்றார்.
- கடந்த மார்ச் 23 அன்று வாடிகனுக்கு திரும்பினார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
போப் பிரான்சிஸ் இன்று (திங்கள்கிழமை) காலை காலமானார் என்று வாடிகன் கேமர்லெங்கோ கார்டினல், கெவின் ஃபெரெல் அறிவித்தார்.
"இன்று காலை 7:35 மணிக்கு, ரோம் பிஷப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் இறைவனுக்கும் அவரது திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று கெவின் ஃபாரெல் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
88 வயதான போப், நிமோனியா, நுரையீரல் தொற்று, சுவாசக் கோளாறு காரணமாக பிப்ரவரி 14ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்று, 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23 அன்று வாடிகனுக்கு திரும்பினார்.
நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாடிகன் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு போப் பிரான்சிஸ் கையசைத்து ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- வாடிகன் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி கையசைத்தார்.
- அவரது உரையில் உலக அமைதியை வலியுறுத்தினார்.
இன்று ஈஸ்டர் திருநாளையொட்டி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று (ஏப். 20) மக்களை நேரடியாகச் சந்தித்தார்.
வாடிகன் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.
உலக அமைதியை வலியறுத்திய அவரது உரையில், "காசாவின் நிலைமை பரிதாபகரமானது. பசியால் வாடும் மக்களுக்கு உதவ நாம் முன்வர வேண்டும். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் துன்பப்படும் மக்களுடன் தனது எண்ணங்கள் இருப்பதாக கூறினார்.
காசா எல்லையில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என முறையிடுவதாகவும், பிணைக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்று சேர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
88 வயதான போப், சுவாசக் கோளாறு காரணமாக பிப்ரவரி 14ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்ற அவர், 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23 அன்று வாடிகனுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
- போப் பெனிடிக்ட் அவர்களால் பிஷப் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் ஜோசப்
- கடவுள் தந்த அடையாளங்களை சிதைக்கப்படுவதாக ஜோசப் குற்றம் சாட்டினார்
சமீப காலமாக, கிறித்துவ மதத்தில் தற்போதைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு பல சட்ட திட்டங்களை மாற்ற போப் பிரான்சிஸ் தீவிரமாக உள்ளார்.
கருக்கலைப்பு, தன்பாலின திருமணம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஞானஸ்நானம் செய்விப்பது போன்றவை குறித்த கிறித்துவ மத சம்பிரதாயங்களில் போப் பிரான்சிஸ் பல மாறுதல்களை கொண்டு வர முயன்று வருகிறார். வாடிகனின் இந்த முயற்சிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
2012ல் போப் பெனிடிக்ட் அவர்களால் பிஷப் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டு (65). அவர் போப் பிரான்சிஸ் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தார்.
கத்தோலிக்க சித்தாந்தம் பல எதிர்ப்புகளை சந்திப்பதை குறித்து தனது கவலையை தெரிவித்தார்.
ஆண்'மற்றும் பெண் ஆகிய இருவருக்கிடையே மட்டுமே ஏற்பட வேண்டிய திருமண பந்தத்தை சீர்குலைக்கும் விதமாகவும், கடவுள் கொடுக்கும் அடையாளங்களை சிதைக்கும் விதமாகவும், மாற்ற முடியாதவற்றை மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும் ஜோசப் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வாடிகன் விசாரணைகளை நடத்தி, அவரை பதவி விலக வலியுறுத்தியது. ஆனால், இதற்கு உடன்பட ஜோசப் மறுத்து விட்டார்.
இதனை தொடர்ந்து, போப் பிரான்சிஸ், பிஷப் ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டுவை பதவியிலிருந்து நீக்கி உள்ளார். அவரது நடவடிக்கைகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக, ஆற்றி வந்த பணிகளிலிருந்து முழுவதுமாக ஜோசப் விடுவிக்கப்பட்டுள்ளார் என வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- போப் பிரான்சிஸ் லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
- இதனால் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரோம்:
போப் பிரான்சிஸ் (87) லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லேசான காய்ச்சல் காரணமாக போப் பிரான்சிஸ் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது அன்றாட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிறிஸ்தவர்கள் ஆறுதல் அடைந்துள்ளதோடு விரைவில் உடல்நலம் பெற பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிசுக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.