search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பந்து வீச்சு பயிற்சியாளர்"

    • லக்னோ அணிக்கு புதிய ஆலோசகராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர்ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர் பொறுப்பேற்றார். இப்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் உயர்ந்துள்ளா

    கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்த நிலையில் ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.


    இந்நிலையில் லக்னோ அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் லக்னோ அணிக்கு அடுத்த பந்து வீச்சு பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கு லக்னோ அணியின் புதிய ஆலோசகரான நியமிக்கப்பட்ட ஜாகீர் கான் பதில் அளித்துள்ளார். நான் இருக்கும் போது உங்களுக்கு ஒரு பந்து வீச்சு பயிற்சியாளர் தேவையா? அணிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வேன் என அவர் கூறினார்.

    • ஓரம் நியூசிலாந்து அணிக்காக 33 டெஸ்ட், 160 ஒருநாள் மற்றும் 36 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.
    • டி20 உலகக் கோப்பை போட்டியின்போது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக ஓரம் செயல்பட்டார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஜேக்கப் ஓரம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு ஷேன் ஜூர்கன்சன் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றார்.

    இதனால் காலியான அந்த வெற்றிடத்தை ஜேக்கப் ஓரம் நிரப்புகிறார். ஏற்கனவே அவர் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட், சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின்போது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    46 வயதான ஓரம் நியூசிலாந்து அணிக்காக 33 டெஸ்ட், 160 ஒருநாள் மற்றும் 36 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

    • பாகிஸ்தான் அணி 4 வெற்றியுடன் 5-வது இடத்தை பிடித்தது.
    • இந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் அணியில் ஆறு மாத ஒப்பந்தத்தில் பயிற்சியாளராக மோர்கல் இணைந்தார்.

    இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான் லீக் போட்டியுடனே வெளியேறியது. இங்கிலாந்து அணி 9 போட்டிகள் முடிவில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்றது. பாகிஸ்தான் அணி 4 வெற்றியுடன் 5-வது இடத்தை பிடித்தது.

    இந்நிலையில் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறாத நிலையில் அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகியுள்ளார்.

    தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்கல், இந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் அணியில் ஆறு மாத ஒப்பந்தத்தில் பயிற்சியாளராக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×