search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவாற்றல் இழப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மைகளை தரும்.
    • மூளையின் இயக்கம் சீராக இருப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

    மது அருந்துபவர்கள் சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு 9.5 லிட்டர் ஆல்கஹால் உட்கொள்வதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சிலர் அவ்வப்போது குடிப்பவர்கள். 28 நாட்களுக்கு மது அருந்தாமல் இருப்பது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    நமது பழக்கவழக்கங்களால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நமது பழக்க வழக்கங்களால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. சில மாற்றங்கள் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றன. சில மாற்றங்கள் மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளை தரும்.

    பொதுவாக, மது குடித்து உறங்கும் நிலையில் மூளையின் இயக்கம் சரியான நிலையில் இல்லாமல் போவதால் ஆழ்ந்த தூக்கம் இருக்காது.

    மதுவை கைவிடும் போது மூளையின் இயக்கம் சீராக இருப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

    காலையில் எழும் போது ஹேங்க் ஓவர் தலைவலி பாதிப்புகள் நீங்கும். மது உடலில் இருக்கும் நீர் சத்தை உறிஞ்சிக் கொள்வதால் வாய் நாக்கு வறண்டு விடும். ஆனால், மது குடிக்காதபோது உடலில் நீர் வினியோகம் சரியாக இருக்கும். மது மூளையில் உள்ள மெல்லிய நரம்புகளை பலவீனம் அடையச் செய்துவிடும்.

    மூளையின் நினைவாற்றலை கையாளும் பகுதியான "ஹிப்போகேம்பஸ்" என்ற பகுதியை செயல்பட விடாமல் மது தடுக்கிறது. இதனால், நினைவாற்றல் குறையும். எளிதில் எந்த விஷயங்களும் உடனே நினைவுக்கு வராது. ஆனால், மதுவை நிறுத்தியவுடன் மூளை நரம்புகள் பலம் பெறுவதால் நினைவாற்றல் மேம்பட ஆரம்பிக்கும்.

    மது உடலின் வளர்சிதை மாற்றத்தை குறைப்பதால் உண்ணும் உணவின் சத்துக்கள் உடலில் உட்கிரகிக்கப்படாமல் போகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும்.

    மதுவை நிறுத்தி விடும்போது வயிறு நன்றாக இருக்கும். செரிமான மண்டலம் பலம் பெற்று குடல் உறிஞ்சிகள் ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சி, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை ரத்தத்தில் சேமிப்பதால் உடல் பலம் பெறும்.

    மதுப்பழக்கம் உடலின் தோல் பகுதியில் உள்ள நீர்ச்சத்தை இழக்க செய்வதால் மங்கலான அல்லது வீங்கிய சருமம் மற்றும் தோல் அழற்சியை ஏற்படுத்தும். மதுவை கைவிடும் போது தோலுக்கு போதியளவு நீர்ச்சத்து கிடைத்து சரும ஆரோக்கியம் மேம்படும்.

    மதுப்பழக்கம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான முக்கிய காரணமாக அறியப்படுகிறது. மதுவை கைவிடும்போது இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

    • சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் தூக்கம் அவசியமானது.
    • போதுமான தூக்கம் வரவில்லை என்றால் மூளை சரியாக செயல்படாது

    அடிக்கடி ஞாபக மறதியால் அவதிப்படுகிறீர்களா? சின்ன விஷயம் கூட சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறதா? மற்ற வேலைகளுக்கு மத்தியில் திட்டமிட்ட விஷயம் தாமதமாக நினைவுக்கு வருகிறதா? இல்லை மறந்து விடுகிறீர்களா? இதுபோன்ற பிரச்சினைகள் எட்டிப்பார்த்தால் மூளையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மூளையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அவை மூளையின் செயல்பாடுகளை பாதிப்புக்குள்ளாகி நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுத்துவிடும்.

    தூக்கமின்மை:

    மூளையின் ஆரோக்கியத்திற்கும், சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் தூக்கம் அவசியமானது. போதுமான தூக்கம் வரவில்லை என்றால் மூளை சரியாக செயல்படாது. அதனால் நினைவாற்றல் இழப்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனை தவிர்க்க இரவு 7 முதல் 8 மணி நேரம் தூங்குங்கள்.

    உணவுக்கட்டுப்பாடு:

    பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை கலந்த பானங்கள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கொண்ட உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்வது மூளையை சேதப்படுத்தும். நினைவாற்றல் திறனை சீர்குலைக்கும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.

    புகைப்பழக்கம்:

    மூளை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மோசமான விஷயங்களில் ஒன்று, புகைப்பழக்கம். புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்வது ரத்த நாளங்களை சேதப்படுத்தும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கும். இது நினைவாற்றல் இழப்பு மற்றும் பிற அறிவாற்றல் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    மது அருந்துதல்:

    அதிக அளவில் மது அருந்துவது மூளை செல்களை சேதப்படுத்தி நினைவாற்றலை பாதிக்கும். ஆல்கஹால் தூக்கத்தில் குறுக்கீடு செய்து, நினைவக கட்டமைப்பை பலவீனப்படுத்திவிடும்.

    மன அழுத்தம்:

    நாள்பட்ட மன அழுத்தம் மூளையின் நினைவகத்திற்கு முக்கிய பொறுப்பு வகிக்கும் ஹிப்போகாம்பஸை சேதப்படுத்தும். கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். நினைவாற்றலையும் பாதிக்கும். அதனால் மனஅழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் மனதை ரிலாக்ஸாக வைத்திருங்கள்.

    தனிமை:

    மற்றவர்களுடன் தொடர்பில் இல்லாமல் தனிமை வாழ்க்கை வாழ்வதும் மூளை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். மனச்சோர்வை அதிகரிக்கச்செய்து நினைவாற்றல் திறனை குறைத்துவிடும். மூளை ஆரோக்கியமாக செயல்படுவதற்கு தேவையான தூண்டுதலையும் இழக்க நேரிடும். அதனால் தனிமை வாழ்க்கை முறையை தவிர்த்திடுங்கள்.

    சோம்பேறி வாழ்க்கை முறை:

    நீண்ட காலமாக உடற்பயிற்சியிலோ அல்லது வேறு எந்த உடல் செயல்பாடுகளிலோ ஈடுபடாமல் இருந்தால் டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நினைவாற்றல் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். ஏனெனில் உடல் செயல் இழந்தால், மூளையையும் பலவீனமாக்கிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் சிறு சிறு உடற்பயிற்சிகளையாவது மேற்கொள்ளுங்கள்.

    ×