search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேடி ராமராவ்"

    • கொண்டா சுரேகாவை கண்டித்த நடிகை சமந்தா அரசியலுக்காக என் பெயரை இழுக்க வேண்டாம் என கூறினார்.
    • கொண்டா சுரேகா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    சமந்தா- நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனான கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று தெலுங்கானா பெண் மந்திரி கொண்டா சுரேகா அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கே.டி. ராமாராவ் அவதூறு வழக்கு தொடர்வதாக கூறினார்.

    கொண்டா சுரேகாவை கண்டித்த நடிகை சமந்தா அரசியலுக்காக என் பெயரை இழுக்க வேண்டாம் என கூறினார். மேலும் கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜூனியர் என்.டி.ஆர்., நானி, நடிகை ரோஜா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கொண்டா சுரேகா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே மந்திரி சுரேகா தெரிவித்த கருத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். 24 மணி நேரத்திற்குள் பெண் மந்திரி மன்னிப்பு கேட்க தவறினால் அவதூறு வழக்கு மற்றும் தொடர்புடைய கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தொடங்குவேன் என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.

    இருப்பினும், சமந்தாவிடம் மன்னிப்பு கோரிய சுரேகா, கே.டி.ராமராவ் மீதான தனது விமர்சனத்தை திரும்பபெற மாட்டேன் என்றும் மன்னிப்பு கோர முடியாது என்றும் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், சந்திரசேகர ராவ் எங்கே என வினவியுள்ள சுரேகா, பொது வெளியில் சந்திரசேகர ராவ் காணாமல் போனதற்கு கே.டி.ராமராவ் தான் காரணம் என்று கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சந்திரசேகர ராவ் போட்டியிட்டு வெற்றி பெற்ற கஜ்வேலி தொகுதிக்கு சென்ற சுரேகா கட்சி நிர்வாகிகளிடம், சந்திரசேகர ராவ் காணாமல் போனதாக வழக்கு கொடுக்குமாறு கூறியுள்ளார்.

    கே.சி.ஆர். மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர் பொதுவெளியில் வராததற்கு கே.டி.ராமராவ் தான் காரணம் என் கொண்டா சுரேகா பேசி உள்ளார்.

    • தெலுங்கானா மக்களுக்கு காங்கிரஸ் இழைத்த கொடுமைகளை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
    • 1952 முதல் 2014 வரை நூற்றுக்கணக்கான தெலுங்கானா இளைஞர்களின் உயிரைப் பறித்ததற்கு உங்கள் கட்சி மட்டுமே காரணம்.

    திருப்பதி:

    ஐதராபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேட்டி அளித்தார். அப்போது தெலுங்கானா போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்கு மன்னிப்பு கேட்டார்.

    மேலும் சந்திரசேகர ராவ் வரலாற்று மாணவர் அல்ல. ஆந்திர பிரதேசத்தின் பெரும்பகுதி மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஐதராபாத் மாநிலம் இருந்தது.

    தெலுங்கு பேசும் மாநிலத்தை உருவாக்குவதற்கான ஒரு பெரிய இயக்கம் அப்போது இருந்தது. அப்படித்தான் தெலுங்கு பேசும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே ஆந்திர பிரதேசம் உருவாக்கப்பட்டது.

    ஒரு மாநிலத்தை உருவாக்குவது அல்லது ஒரு மாநிலத்தை பிரிப்பது குழந்தைகளின் விளையாட்டு அல்ல என கூறினார்.

    இதுகுறித்து பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமராவ் கூறியிருப்பதாவது:-

    மிகவும் தாமதம் சிதம்பரம் ஜி. தெலுங்கானா மக்களுக்கு காங்கிரஸ் இழைத்த கொடுமைகளை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

    1952 முதல் 2014 வரை நூற்றுக்கணக்கான தெலுங்கானா இளைஞர்களின் உயிரைப் பறித்ததற்கு உங்கள் கட்சி மட்டுமே காரணம்.

    இப்போது, நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், தெலுங்கானா மக்கள் காங்கிரஸ் எங்கள் மீது செய்த அட்டூழியங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். மறக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×