என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்ட்ரோடாக்"

    • இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது
    • பயனர்களின் "வாலட்" கணக்கில் பரிசு தொகை சேர்க்கப்படும் என்றார் புனீத்

    இந்தியாவில் ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்தியாவின் புகழ் பெற்ற இணையவழி ஜோதிட வலைதளமான "அஸ்ட்ரோடாக்" (Astrotalk) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி புனீத் குப்தா (Puneet Gupta), இந்தியர்களையும், இந்திய அணியினரையும் உற்சாகப்படுத்தும் ஒரு செய்தியை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் வெளியிட்டுள்ளார்.

    2011ல் இந்தியா உலக கோப்பையை வென்ற போது தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ள புனீத், இந்த இறுதி போட்டியில் இந்தியா உலக கோப்பையை வென்றால், அஸ்ட்ரோடாக் வலைதள பயனர்கள் அனைவருக்கும் ரூ.100 கோடி தொகையை சமமாக பகிர்ந்து வழங்க போவதாகவும், பகிர்மான தொகை பயனர்களின் "ஆப் வால்ட்" (app wallet) கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    இதன் மூலம் போட்டி முடிவதற்குள் பலர் இந்த வலைதளத்தில் பயனர்களாக பதிவு செய்யக்கூடும் என்பதால் இதனை சந்தை வியாபார யுக்தி என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜோதிட இணையதளமான அஸ்ட்ரோடாக், இன்றைய போட்டியில் யார் வெல்ல போவது என கணித்து தெரிவிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • கிட்டத்தட்ட 4 கோடி மக்கள் Astrotalk செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
    • Astrotalk செயலியில் 15,000-க்கும் மேற்பட்ட ஜோசியர்கள் உள்ளனர்.

    அஸ்ட்ரோடாக் இந்தியாவின் புகழ் பெற்ற இணையவழி ஜோதிட வலைத்தளமாக உள்ளது. இதில் புகழ்பெற்ற பல ஜோசியர்களுடன் மக்கள் தங்களது பிரச்சனைகளை கூறி தீர்வுகளை பெறலாம்.

    ஒவ்வொரு ஜோசியருக்கும் ஏற்றவாறு அந்த வலைத்தளத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த வலைத்தளத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ஜோசியர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 4 கோடி மக்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    அஸ்ட்ரோடாக் வலைத்தளம் 2017 ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வலைத்தளத்தின் 7 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நேற்று (அக்டோபர் 18) ஜோசியர்களுடன் இலவசமாக மக்கள் சாட் செய்யலாம் என்று அதன் சி.இ.ஓ புனித் குப்தா அறிவித்தார். இந்த அறிவிப்பிற்காக கிட்டத்தட்ட ரூ.50 கோடி பணத்தை அந்நிறுவனம் செலவு செய்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து கிட்டத்தட்ட 1 கோடி பயனர்கள் நேற்று இலவசமாக ஜோசியர்களிடம் சாட் செய்து பல கேள்விகளை எழுப்பினர். அதில், எப்போது தனக்கு திருமணம் நடக்கும். என்னுடைய முன்னாள் காதலி எப்போது என்னிடம் திரும்பி வருவாள் போன்ற கேள்விகளை பலரும் ஜோசியர்களிடம் கேட்டுள்ளனர்.

    ×