என் மலர்
நீங்கள் தேடியது "தலைமுறை"
- அவினாசி திருப்புக்கொளியூர் வாக்சர் மடாலய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- கார்மேகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
திருப்பூர்:
திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயதசமி அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் ஜில்லா ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்) சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பூர் நடராஜன் தியேட்டர் அருகே ஆலங்காடு பகுதியில் தொடங்கியது. அணிவகுப்பை அவினாசி திருப்புக்கொளியூர் வாக்சர் மடாலய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அணிவகுப்பு ஊர்வலம் கருவம்பாளையம் மேற்கு பிள்ளையார் கோவில், மருக்காடு வீதி, கே.வி.ஆர். நகர் நால்ரோடு வழியாக சென்று செல்லம் நகர் பிரிவில் முடிவடைந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு திருப்பூர் சிவில் என்ஜினீயர் அசோசியேசன் மற்றும் திருப்பூர் பில்டர்ஸ் அசோசியேசன் சங்க முன்னாள் தலைவர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் கார்மேகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தென்தமிழகம் மாநில அமைப்பாளர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் ,விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்ட இயக்கம் தான் இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம். சனாதன தர்மம் பற்றி சிலர் தவறான கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் அவ்வாறு இல்லை. யார் என்ன செய்தாலும் சனாதன தர்மம் தலைமுறை தலைமுறையாக தொடரும்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது யாரையோ எதிர்ப்பதற்காகவோ, வெறுப்பதற்காகவோ, நாட்டை விட்டு விரட்டுவதற்காகவோ தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அது சாதி, மத, மொழி வேறுபாட்டால் பிரிந்து கிடக்கும் இந்து சமுதாய மக்களை ஒன்றிணைக்க தொடங்கப்பட்ட சங்கம் என்றார். இதில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA ஆவர்.
- இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஜென் Z தலைமுறை டிரெண்டிங்கில் உள்ள நிலையில் 2025 ஜனவரி 1 முதல் Gen-Beta என்ற புதிய தலைமுறை உருவாக உள்ளது.
2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் ஜென் பீட்டா என்று அழைக்கப்படுவர். இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Z-க்களின் வாரிசுகளாக இருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
1998 முதல் 1996 வரை மில்லினியல்கள் என்றும், 1996 முதல் 2010 ஆம் வரை பிறந்தவர்கள் Gen Z என்றும் 2010 முதல் 2024 க்கு இடையில் பிறந்தவர்கள் Gen Alpha ஆல்பா என்றும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் வரும் புத்தாண்டுடன் இந்த லிஸ்டில் பீட்டா தலைமுறை சேர உள்ளது.

வரும் 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA-ஆக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளது.

பீட்டா குழந்தைகளின் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக AI தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை, பீட்டாவினரின் அன்றாட வாழ்க்கை, கல்வி மற்றும் பணியிடங்களில் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் முழுமையான ஆதிக்கம் செலுத்தும்.

தொழில்நுட்பம் அவர்களின் விரல் நுனியில் இருக்கும். அதே வேளையில், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் உலகளாவிய மக்கள்தொகை மாற்றங்கள் போன்ற பல குறிப்பிடத்தக்க சவால்களைக் கொண்ட ஒரு சமூக வாழ்க்கையை பீட்டா தலைமுறையினர் எதிர்கொள்வார்கள்.
- 3.12 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்த இந்த ஆண் குழந்தை 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலில் பிறந்தது.
- மூத்த சகோதரி, தாய் ராம்சிர்மாவி மற்றும் தந்தை ரெம்ருத்சங்கா மகிழ்ச்சியில் உள்ளனர்.
1998 முதல் 1996 வரை மில்லினியல்கள் என்றும், 1996 முதல் 2010 ஆம் வரை பிறந்தவர்கள் Gen Z என்றும் 2010 முதல் 2024 க்கு இடையில் பிறந்தவர்கள் Gen Alpha ஆல்பா என்றும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த புத்தாண்டுடன் இந்த லிஸ்டில் பீட்டா தலைமுறை சேர்நதுள்ளது. 2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் ஜென் பீட்டா என்று அழைக்கப்படுவர்.
அந்த வகையில் இந்தியாவின் முதல் ஜென் பீட்டா தலைமுறை குழந்தை தென் கிழக்கு மாநிலமான மிசோரமில் பிறந்துள்ளது.
மிசோரமில், ஜனவரி 1, 2025 அன்று அதிகாலை 12:03 மணிக்கு ஐஸ்வாலின் டர்ட்லாங்கில் உள்ள சினோட் மருத்துவமனையில் நாட்டின் முதல் ஜென் பீட்டா குழந்தை பிறந்துள்ளது. 3.12 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்த இந்த ஆண் குழந்தை 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலில் பிறந்தது. இது ஒரு புதிய தலைமுறை சகாப்தத்தின் தொடக்கமாகும்.

பிரான்கி [Frankie] என்று பெயரிடப்பட்ட இந்த ஆண் குழந்தை பிறக்கும்போது 3.12 கிலோ எடையுள்ளதாகவும், எந்த சிக்கலும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் சினோட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முதல் ஜென் பீட்டா குழந்தை பிரான்கி பிறந்ததில் அவரது மூத்த சகோதரி, தாய் ராம்சிர்மாவி மற்றும் தந்தை ரெம்ருத்சங்கா மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த குடும்பம் ஐஸ்வாலில் உள்ள கிழக்கு கட்லா பகுதியில் வசிக்கிறது.
"ஜென் பீட்டா" என்ற சொல் மார்க் மெக்ரிண்டில் என்ற அறிஞரால் 2025 மற்றும் 2039 க்கு இடையில் பிறந்த குழந்தைகளை விவரிக்க உருவாக்கப்பட்டது.