search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress பாஜக"

    • கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது.
    • எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து மல்லிகார்ஜூனா கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது. இருந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகள், 100 நாட்களில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.

    தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் பாஜகவை வீழ்த்தி, மோடியால் தூண்டப்பட்ட இந்த விலை உயர்வை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


    • ராஜஸ்தானில் காங்கிரஸ் ஒவ்வொரு பகுதியிலும் தோல்வியை சந்திக்கும்.
    • அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது.

    ஜெய்ப்பூர்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராஜஸ்தானில் இன்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜெய்ப்பூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராஜஸ்தானில் காங்கிரஸ் ஒவ்வொரு பகுதியிலும் தோல்வியை சந்திக்கும். பா.ஜனதா தான் அடுத்த ஆட்சியை அமைக்கும்.

    காங்கிரஸ் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வாக்கு வங்கி அரசியலால் கலவரக்காரர் கள் மீது ராஜஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசோக் கெலாட்டுக்கு சொந்தமாக எந்த உத்தரவாதமும் இல்லை. அவர் என்ன உத்தரவாதம் அளிக்கிறார்?

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×