search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் குறிப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று பலருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது பிரியாணி.
    • தரமான பிரியாணியையே தேடி அலைகிறார்கள்.

    இன்று பலருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது பிரியாணி. ஆனால் பிரியாணி பிரியர்கள் எல்லோரும் தரமான பிரியாணியையே தேடி அலைகிறார்கள். நீங்கள் பிரமாதமான பிரியாணியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் இந்த குறிப்பை பின்பற்றுங்கள்...

    * எண்ணெய், நெய் இரண்டையும் சம அளவில் சேர்த்தால் பிரியாணி திகட்டாது. நெய் மட்டுமே சேர்த்தால் திகட்டும். எண்ணெய் மட்டுமே சேர்த்தால் பிரியாணி கமகமக்காது.

    * பிரியாணி செய்யும் போது, ஈரல் இல்லாமல் இறைச்சி மட்டும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஈரல் இருந்தால் பிரியாணி ருசிக்காது.

    * சிக்கன் பிரியாணிக்கு ஏலம், கிராம்பு தாளிக்க வேண்டாம். திகட்டும்.

    * சிக்கன் பிரியாணியில் தயிர்தான் சேர்க்க வேண்டும். தேங்காய்ப்பால், மட்டன் பிரியாணியில் சேர்க்க வேண்டும்.

    * இறால் பிரியாணிக்கு கொத்தமல்லி, புதினா சேர்க்கக்கூடாது. கறிவேப்பிலை மட்டும்தான்.

    * குக்கரில் பிரியாணி செய்யும்போது மூடியை மூடுவதற்கு முன்பாக சிறிது எண்ணெய் விட்டுக் கிளறி மூடினால் பிரியாணி உதிரியாக வரும். குழைந்துபோகாது.

    * புதிதாக பிரியாணி செய்பவர்கள் பிரியாணி உதிரி உதிராக வர வேண்டுமென்றால் சாதத்தை தனியாக வடித்து 'கிரேவி'யுடன் கலக்க வேண்டும்.

    * பாசுமதி அரிசியை தனியாக வேகவைத்து வடிக்கும்போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டால் சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

    * 'தம்' போடுவது பிரியாணியின் ருசியை அதிகரிக்கும். அடுப்பின் மேல் தோசைக்கல்லை வைத்து, அதன் மேலே இறுக மூடிய பிரியாணி பாத்திரத்தை வைத்து 'தம்' போடலாம்.

    * புலாவ் செய்வதற்கு அரிசி அரைவேக்காடும். பிரியாணி செய்வதற்கு அரசி முக்கால்வேக்காடும் வெந்திருக்க வேண்டும்.

    * இறைச்சியை போட்டபிறகுதான் இஞ்சி- பூண்டு விழுதை போட்டு வதக்க வேண்டும். முன்னாடியே போட்டால் விழுது, பாத்திரத்திலேயே ஒட்டிக் கொள்ளும்.

    * பிரைடு ரைஸ் செய்யும்போது ஒரு 'கப்' அரிசிக்கு அரை 'கப்' தண்ணீரும், பிரியாணிக்கு 2 'கப்' தண்ணீரும் அவசியம்.

    * பாசுமதி அரிசியை பிசைந்து கழுவாதீர்கள். அரிசி உடைந்துவிடும். அரிசியின் வாசமும் போய்விடும்.

    * பிரியாணி கமகமவென்று இருக்க வேண்டும் என்பவர்கள் பிரியாணி எசன்ஸ்' தெளித்துக் கொள்ளலாம்.

    • கூட்டோ, குழம்போ கொதித்த பின் தீ எரியும் அளவை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.
    • வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது.

    * அடுப்பில் வைத்த பாத்திரம் தீய்ந்து கருகி போனால் உப்பு நீரில் ஒரு நாள் இரவு முழுக்க ஊற வைத்து மறுநாள் காலையில் அழுத்தி தேய்க்க சுத்தமாகி விடும்.

    * தயிர் புளித்துப்போனால் அதில் 4 டம்ளர் நீர் ஊற்றி அரைமணி நேரம் கழித்து மேலே நிற்கும் நீரை மட்டும் கீழே ஊற்றி விட்டால் தயிர் புளிக்காது.

    * பாட்டில் மூடியை திறக்க முடியாமல் போனால் ஈரத்துணியால் மூடியை இறுகப்பற்றி கொண்டு திருகினால் சுலபமாக கழன்று விடும்.

    * கூட்டோ, குழம்போ கொதித்த பின் தீ எரியும் அளவை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.

    * மிளகாய் தூள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காயக் கட்டியைப் போட்டு வைத்தால் நீண்ட நாள் காரம், மணம் மாறாமல் இருக்கும்.

    * சாம்பார் செய்து இறக்குவதற்கு முன் 2 தக்காளிகளை மிக்சியில் அரைத்து சேர்க்க அதிக ருசி கிடைக்கும்.

    * மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காயை இட்லி தட்டில் வைத்து சிறிது நேரம் வேக வைத்து, ஊறுகாய் போட்டால் விரைவாக ஊறும், சத்துக்களும் வீணாகாது.

    * லேசான தீக்காயம் என்றால் ஒரு வாழைப்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி சூடுபட்ட இடத்தில் வைத்தால் குளுகுளுவென்று இருக்கும். அரிப்பு ஏற்படாது.

    * அரிசி, தானியங்களை வைக்கும் டப்பாவில் பூச்சிகள் தொல்லை இருந்தால் அதில் பூண்டு அல்லது மஞ்சள் துண்டு போட்டால் பூச்சிகள் அண்டாது.

    * வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது.

    * புரோட்டாவிற்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு மில்க் மெயிட் சேர்க்க ருசியாக இருக்கும்.

    * பூண்டுவை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் அதன் மேல் தோலை எளிதாக நீக்கி விடலாம்.

    * உளுந்து வடை மாவில் சிறிது நெய் சேர்த்தால் வடை மொறு மொறுப்பாக இருக்கும். அதிக எண்ணெய் செலவாகாது.

    * கட்லெட்டில் அதிக ருசி கிடைக்க அதற்குரிய மாவில் சிறிதளவு ரொட்டித் தூள் அல்லது ரவை சேர்க்க வேண்டும்.

    • அதிரசம் செய்யும்போது பேரீச்சம் பழம் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
    • பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் விரைவில் பழுக்காது.

    * முட்டைக்கோசை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை தயிரில் போட்டு ஊறவைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்தால் முட்டைகோஸ் தயிர் பச்சடி புது சுவையுடன் இருக்கும்.

    * அதிரசம் செய்யும்போது மாவுடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * ஜவ்வரிசியை தண்ணீரில் ஊற வைத்து பாயசம் செய்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * மெதுவடைக்கு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து அரைத்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது.

    * பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க மாவை கலக்கும்போது சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும் கலக்க வேண்டும்.

    * தேங்காய் எண்ணெய்யில் சுத்தமான உப்புக்கல்லை சிறிது போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது.

    * எந்த வகை சட்னி செய்தாலும் சிறிது புதினா சேர்த்து அரைக்க வாசனையாக இருக்கும்.

    * பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் அவை விரைவில் பழுக்காது.

    * வாழைப்பூவுடன் முருங்கைக்கீரை சேர்த்து பொரியல் செய்தால் சுவை சூப்பரோ சூப்பர்.

    * வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ கூட்டு செய்யும்போது தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் ருசியாக இருக்கும்.

    * முருங்கை இலையை உருவிய பிறகு காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிடலாம். அது உடல், கை, கால் அசதிக்கு நல்லது.

    * கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும்போது கூடவே மில்க்மெய்ட் ஊற்றி கிளறினால் அல்வா மணம், ருசியுடன் இருக்கும்.

    * நெய் ஊற்றி ரவா லட்டு செய்த பின்பு தூய வெண்மை நிறம் கிடைக்க, சர்க்கரையை பொடித்து அதில் லட்டை புரட்டி எடுக்க வேண்டும்.

    * கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சுவை அமோகமாக இருக்கும்.

    * தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் செய்த பின்பு மோர் மிளகாயை எண்ணெய்யில் பொரித்து பொடி செய்து தூவினால் சுவையாக இருக்கும்.

    * பஞ்சாமிர்தத்துடன் ஒரு கப் பால் சேர்த்து ஒரு மூடி தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் கொட்டி கிளறி தட்டில் கொட்டி துண்டுகளாக்கினால் பஞ்சாமிர்த பர்பி ரெடி.

    * உளுந்து வடை செய்யும்போது 2 டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை செய்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.

    • ரவா கேசரி, ரவா பர்பி செய்யும்போது பால் சேர்க்க சுவை கூடும்.
    • கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டால் கல் உப்பு தடவினால் கொப்பளம் உண்டாகாது.

    * தோசைக்கு ஊறவைக்கும்போது ஒரு கிலோ அரிசிக்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவையான, சத்தான தோசை ரெடி.

    * கோதுமை மாவில் கொஞ்சம் வேர்க்கடலையை பொடித்து கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் ருசியாக இருப்பதுடன் உடலுக்கும் வலிமை ஏற்படும்.

    * எலுமிச்சம் பழங்களை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் `பிரஷ்'ஷாக இருக்கும். அந்த பழங்களில் இருந்து நிறைய சாறும் கிடைக்கும்.

    * தேங்காய் பர்பி பதம் தவறி முறுகி விட்டால் அதை பாலில் ஊறவைத்து மீண்டும் கிளறி, இறக்கும் போது நெய்யில் வறுத்த கடலைமாவை சிறிது தூவி இறக்கினால் பர்பி சரியான பதத்துக்கு வந்துவிடும்.

    * மிளகாய் பொடிக்கு வறுக்கும்போது ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சேர்த்து அவற்றையும் அரைக்கலாம். கறி வகைகள் செய்யும்போது இந்த பொடியை தூவினால் சுவையாக இருக்கும்.

    * கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறினால், கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்கும்.

    * ரவா தோசை செய்யும்போது அரிசி மாவு, ரவை இரண்டையும் சம அளவு கலந்து, அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி கடலை மாவு அல்லது வறுத்து அரைத்த உளுந்து மாவு கலந்து தோசை வார்த்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.

    * ரவா கேசரி, ரவா பர்பி செய்யும்போது தண்ணீரின் அளவில் பாதி குறைத்துவிட்டு அதற்கு பதில் கெட்டியான பால் சேர்க்க சுவை கூடும்.

    * வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சளி சம்பந்தப்பட்ட கோளாறு நீங்கும். இதில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது.

    * சமைக்கும்போது கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டுவிட்டால், அந்த இடத்தில் தேன் அல்லது கல் உப்பை சிறிது தடவினால்கொப்பணளம் உண்டாகாது.

    * தயிர் பச்சடி, சாலட் தயாரிக்கும்போது தேங்காய் எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட வாசனையாக இருக்கும்.

    * அடைக்கு ஊற வைக்கும்போது சிறிது கோதுமையும், ஜவ்வரிசியும் சேர்த்து ஊற வைத்து அரைத்து அடை செய்தால் மொறுமொறுவென்று மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * முற்றிய முருங்கைக்காய்களின் விதைகள் உள்ளே இருக்கும் பருப்புகளை வறுத்து உண்டால் நிலக்கடலை போல் ருசியாக இருக்கும். உடலுக்கும் வலு சேர்க்கும்.

    * ரசம் தயாரிக்கும்போது சிறிது முருங்கை இலை சேர்த்து கொதிக்க வைத்தால் ரசம் மணமாக இருக்கும். முருங்கைக்கீரை சேர்ப்பதால், சத்தாகவும் இருக்கும்.

    ×