என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்தியா தென்ஆப்பிரிக்கா"
- தென்ஆப்பிரிக்கா மண்ணில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம்.
- ஒன்று அல்லது இரண்டு செசன்களில் சிறப்பாக விளையாடும் அணி ஒன்றைவிட ஒன்று சிறந்ததாக திகழும்.
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
அதன்பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ந்தேதியும், 2-வது டெஸ்ட் கேப் டவுனில் ஜனவரி 3-ந்தேதியும் தொடங்க இருக்கிறது.
விராட் கோலி குறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் காலிஸ் கூறியதாவது:-
விராட் கோலி தென்ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய தொடரை விளையாட விரும்புவார் என நம்புகிறேன். அவர் சிறந்த ஃபார்மில் உள்ளார். இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்கு வகிப்பார். இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் தொடரை வெல்ல வேண்டும் என்றால், விராட் கோலி சிறந்த தொடராக அமைய வேண்டும். விராட் கோலி சிறந்த வீரர். தென்ஆப்பிரிக்காவில் குறிப்பிட்ட அளவு ரன்கள் சேர்த்துள்ளார்.
அவர் மற்ற வீரர்களுக்கு ஆட்டத்தின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்கும் நபர். தென்ஆப்பிரிக்கா சீதோஷண நிலையை மற்றும் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து இளம் வீரர்களுக்கு யோசனை வழங்கக் கூடியவர்.
தற்போதுள்ள இந்திய அணி சிறந்தது. என்றபோதிலும் தென்ஆப்பிரிக்கா மண்ணில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம்.
செஞ்சூரியன் தென்ஆப்பிரிக்கா அணிக்கு சாதகமாக இருக்கும். கேப் டவுன் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இது சிறந்த தொடராக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு செசன்களில் சிறப்பாக விளையாடும் அணி ஒன்றைவிட ஒன்று சிறந்ததாக திகழும்" என்றார்.
கடந்த ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தொடரில் விராட் கோலி 30 இன்னிங்சில் 932 ரன்கள் எடுத்துள்ளார். தற்போதைய தொடரில் ஒரு சதம், இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். நடைபெற்று முடிந்த உலகக் கோப்பையில் 765 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.
- தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கேட்டுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடர் முடிவடைந்தவுடன் தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள், டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது.
இந்தத் தொடர் டிசம்பர் 10-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒயிட்-பால் தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புவதாக பிசிசிஐ-க்கு விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனால் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, 3 சதங்கள் விளாசியதுடன் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இருந்தபோதிலும் கோப்பையை வெல்ல முடியாததால் மிகுந்த கவலை அடைந்தார்.
விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா தொடரின்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்