search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை தொடர்"

    • ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
    • ரிங்கு சிங், இந்திய அணிக்காக இதுவரை ஸ்லோ விக்கெட்டில் ஆடியது கிடையாது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் மே 26-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்குகிறது. லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.

    தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகார்கரிடம் சமர்பித்துள்ளனர். அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்லோ விக்கெட்டில் ரிங்கு சிங் சொதப்பியதால், கடைசி 10-15 பந்துகளுக்காக ரிங்கு சிங்கை சேர்க்க வேண்டுமா என்ற எண்ணம் பிசிசிஐயிடம் இருப்பதாகவும், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற பினிஷர்களே அணிக்கு போதும் என்ற முடிவுக்கு பிசிசிஐ வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ரிங்கு சிங், இந்திய அணிக்காக இதுவரை ஸ்லோ விக்கெட்டில் ஆடியது கிடையாது. டி20 உலகக் கோப்பை அணித் தேர்வை கருத்தில்கொண்டு, சிஎஸ்கே, கேகேஆர் இடையிலான போட்டிக்கு ஸ்லோ விக்கெட்டை தயார் செய்திருந்தனர்.

    ஆனால், அந்த ஸ்லோ விக்கெட்டில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படவில்லை. மொத்தம் 14 பந்துகளை எதிர்கொண்ட அவர், அதில் ஒரு பவுண்டரியை கூட அடிக்காமல் 9 ரன்களை மட்டும் எடுத்து, தேஷ்பண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க இன்னமும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ரிங்கு சிங் சொதப்பியதால், அவரை அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது.
    • மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29 ந் தேதி வரை நடைபெறுகிறது. 29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டது. டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வருகிறது.

    இந்நிலையில் உலகின் எந்த வீரரையும் விட கோலி பெரிய அளவில் ஈர்க்கக்கூடியவர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ராட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற மாட்டார் என்ற தகவல், உண்மையாக இருக்கக் கூடாது. உலகின் எந்த வீரரையும் விட கோலி பெரிய அளவில் ஈர்க்கக்கூடியவர். அவர் அணியில் கண்டிப்பாக இடம்பிடிப்பார்.

    இவ்வாறு ப்ராட் கூறினார்.

    • பெங்களூரு போன்ற கடினமான மைதானத்தில் நல்ல பந்து வீச்சை வீசும் அளவுக்கு அவர் கற்றுள்ளார்.
    • 2024 உலகக்கோப்பை அணி தேர்வுக்கு அவரின் பெயரையும் பரிசீலனையில் வைத்துள்ளோம்.

    பெங்களூரு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ஷிவம் துபே தொடர் நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில் முன்பை விட தற்போது ஷிவம் துபே நன்கு முன்னேறியுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டிராவிட் கூறியதாவது:

    இந்த தொடரில் துபே தன்னுடைய கையை உயர்த்தி, பாருங்கள் என்னிடம் திறமைகள் இருக்கின்றன. நீங்கள் எதிர்பார்ப்பதை செய்யக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது என்பதை எங்களுக்கு காண்பித்துள்ளார். குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை அவர் எங்களுக்கு காண்பித்தார்.

    அதேபோல பந்து வீச்சிலும் அவர் ஒரு சில நல்ல ஓவர்களை வீசினார். குறிப்பாக பெங்களூரு போன்ற கடினமான மைதானத்தில் நல்ல பந்து வீச்சை வீசும் அளவுக்கு அவர் கற்றுள்ளார். அதனால் 2024 உலகக்கோப்பை அணி தேர்வுக்கு அவரின் பெயரையும் பரிசீலனையில் வைத்துள்ளோம்.

    என்று அவர் கூறினார்.

    • டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம்.
    • உலகக் கோப்பை தொடரில் விளையாட அனைத்து வாய்ப்புகளும் உண்டு.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. டிசம்பர் 10-ம் தேதி டி20 தொடர் துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் டிசம்பர் 17-ம் தேதியம், டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ம் தேதியம் துவங்குகிறது.

    இந்த நிலையில், டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாகவும், டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

     

    அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை 2024 டி20 தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி கேப்டன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் விளையாட இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தகுதி உடையவர்கள் என கெவின் பீட்டர்சன் தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறும் போது, "ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என இருவரும் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்கள், அவர்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும். ரோகித் மற்றும் விராட் கோலி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட அனைத்து வாய்ப்புகளும் உண்டு."

    "எனினும், அவர்கள் ஐ.பி.எல். தொடரில் எப்படி செயல்படுகின்றார்கள் என்பதை பார்க்க வேண்டும். அவர்களது ஃபார்மை பார்த்து வாய்ப்பு கொடுக்கலாமா இல்லையா என்பதை அவர்களிடமே நீங்கள் கேட்க வேண்டும். அவர்கள் மகத்தான கிரிக்கெட்டர்கள்," என்று தெரிவித்தார். 

    ×