என் மலர்
நீங்கள் தேடியது "தலித் சமுதாயம்"
- இருவருக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கலாமா என்று கட்சி மேலிடம் ஆலோசித்தது.
- பாட்டி விக்ரமார்காவுக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம் என அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாநிலத்தில் துணை முதல் மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. துணை முதல் மந்திரி போட்டியில் பாட்டி விக்ரமார்கா மற்றும் உத்தம் ரெட்டி ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கலாமா என்று கட்சி மேலிடம் ஆலோசித்தது.
ஆனால் தலித் ஒருவரை துணை முதல்-மந்திரி ஆக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி பாட்டி விக்ரமார்காவுக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம் என அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- தினமுன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.
- இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்.
தினமும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில், தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.
இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.
வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது, சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர்- வள்ளலார் அதனை மீட்டார்.
தலித்துகள் தொடர்ந்து ஒடுக்கப்படுவது எனக்கு வலியை தருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.