என் மலர்
நீங்கள் தேடியது "கருட வழிபாடு"
- எதிரிகளை ஜெயிக்கலாம், வழக்குகளில் வெற்றி உண்டாகும்.
- படிப்புகளில், கல்வி சம்பந்தமானவற்றில் தேர்ச்சி பெறுதல், வேலைவாய்ப்புக்கிடைக்கும்.படிப்புகளில், கல்வி சம்பந்தமானவற்றில் தேர்ச்சி பெறுதல், வேலைவாய்ப்பு கிடைக்கும்.
*எதிரிகளை ஜெயிக்கலாம், வழக்குகளில் வெற்றி உண்டாகும்.
*சர்வரோக நிவாரணம், பிணி பீடைகள் நிவர்த்தி கிடைக்கும்.
* பில்லி, சூன்யம், ஏவல் கண்திருஷ்டி தோஷம், செய்வினைக் குற்றம் போன்றன நிவர்த்தி ஆகும்.
*ஜாதக கிரக தசாபுத்தி, கோச்சார கிரகங்களால் ஏற்படும் கண்டாதி தோஷங்கள், விபத்து, ஆயுள்பயம்
போன்றன நிவர்த்தி ஆகும்.
*போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும்.
*நிலம், வீடு, மனைபோன்றவற்றில் லாபம் ஏற்படும்.
*திருமண பாக்கியம் கைகூடுதல், புத்திரதோஷம்
நீங்கி, புத்திரப்பேறு உண்டாகும்.
*படிப்புகளில், கல்வி சம்பந்தமானவற்றில் தேர்ச்சி
பெறுதல், வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
*அவரவர் செய்யும் உத்தியோகம், தொழில்,
வர்த்தகம், வியாபாரத்தில் வெற்றியும், லாபமும் உண்டாகும்.
*குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை, சௌக்கியம் உண்டாகும்.
*கிடைக்க வேண்டிய சொத்துகள், காசு பணம், இழந்த பொருட்களை மீண்டும் பெறுதல்
போன்றன கருட பகவான் அருளால் கிடைக்கும்.
* நியாயமான எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள் நிறைவேறும்.
*விஷ ஜந்துக்கள், சர்ப்ப வாக்குகளில் இருந்து சதா பாதுகாப்பு சக்தி கிடைக்கும்.
*விஷம குணங்கள் கொண்ட கொடிய சத்ருக்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
- கருடனின்குரு பிரகஸ்பதி.
- குரு, புதன் கிரகங்களின் தோஷ பரிகாரமாக கருட வழிபாடு செய்ய உத்தம பலனைத்தரும்.
ராகு, கேதுவால் ஜாதகத்தில் உள்ள காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், தாரதோஷம் போன்ற
பலசர்ப்ப சாப தோஷங்கள் யாவும் கருடவழிபாடு செய்வதால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடும்.
கருட மந்திர ஜெபம், காயத்ரி ஜெபம், பஞ்சாட்சரி, அஷ்டோத்ரம் போன்ற கருட சம்பந்தமான மந்திர
ஜெபபாராயணங்கள் செய்வதால் சர்ப்பதோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆகும்.
கருடனுக்குரிய முக்கிய விசேஷ ஹோம, யாகங்கள் செய்து வழிபாடு செய்வது அதீத பலத்தையும்,
மிக சிறப்பான பலன்களை வாரி வழங்கும்.
ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள குரு, புதன் கிரகங்களின் தோஷ பரிகாரமாக கருட வழிபாடு செய்ய உத்தம பலனைத்தரும்.
கருடனின் குரு பிரகஸ்பதி.
- மனை அமைப்புகளைக் கொண்டு வாஸ்துவில், சிங்க மனை, யானை மனை, கருடமனை எனப் பலவகை உள்ளன.
- மேலும் அந்த வீட்டில் எப்போதும் சுபங்களே நடக்கும். நல்ல வெற்றி, முன்னேற்றம் உண்டாகும்.
மனை அமைப்புகளைக் கொண்டு வாஸ்துவில், சிங்க மனை, யானை மனை, கருடமனை எனப் பலவகை உள்ளன.
இதில் கருடமனை அமைப்பில் வீடு கட்டினால் அந்த வீட்டிற்கு விஷஜந்துக்கள், சத்துருக்களால் எப்போதும் பாதிப்பு ஏற்படாது.
கருடனின் அருட்கடாட்சம் எப்போதும் இருக்கும்.
வீடுகட்ட தொடங்கும்போது கருடன் தரிசனம் கொடுப்பதும், கருடன் வட்டமிடுவதுமான சகுணம் கண்டால் அந்த வீடு நல்ல முறையில் எளிதாகக்கட்டி முடித்து, கிரக பிரவேசம் செய்யப்படும்.
மேலும் அந்த வீட்டில் எப்போதும் சுபங்களே நடக்கும். நல்ல வெற்றி, முன்னேற்றம் உண்டாகும்.
- வசியம் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
- நல்ல நினைவாற்றல் பெருகும்.
கருட தரிசனம் எங்கு, எப்போது, எப்படி, எத்திசையில் தரிசித்தாலும் நன்மையே! கருட தரிசனம் கிடைப்பதே
மாபெரும் பாக்கியம் ஆகும். பத்மபுராணத்தில் கூறப்படும் கருட அருளால் கிடைக்கும் பலன்கள் வருமாறு
• வசியம் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
• சத்ருஜெயம் கிடைக்கும்.
• நல்ல நினைவாற்றல் பெருகும்.
• வாதத்திறமை, வானில் உலவுதல் உணடாகும்.
• வித்தையில் தேர்ச்சி, இந்திரஜாலம் காட்டுதல் அதிகரிக்கும்.
• நீர், நெருப்பு, காற்றில் அச்சமின்றி உலவுதல் வரும்.
• மயங்க வைத்தல், உணர்விழக்கச் செய்தல் தரும்.
- சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் வாழ்வில் நல்ல நிலை கிட்டும்.
- அறிவு கிரகமான புதன் கருடனை வாகனமாகக் கொண்ட ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாகும்.
ஞாயிறு: ஞாயிற்றுக்கிழமையில் கருட தரிசனம் செய்ய சர்வ ரோகங்களை (நோய்கள்) நிவர்த்தி செய்து தேக,
மன ஆரோக்கியத்தைத் தரும் என்பது பெரியோர்களின் வாக்கு!
திங்கள்: ஜாதகத்தில் சந்திரபலம் பெறவும், சந்திரகிரக தோஷம் நீங்கி சுபிட்சம் பெறவும்,
மாதுர் தோஷம், சாபம் நிவர்த்தி அடைய திங்கட்கிழமை கருடதரிசனம் செய்யவும்.
கடகராசி, லக்னகாரர்கள் திங்கட்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் நல்ல உயர்வை எதிர்நோக்கலாம்.
ஜாதகத்தில் சந்திரன் 6, 8, 12ல் இருப்பவர்களும் நீச்சம், சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற தீய
கிரகங்களின்சேர்க்கை, பார்வை பெற்றிருப்பது போன்ற சந்திர பாதிப்படைந்த ஜாதகர்கள்
திங்கட்கிழமையில் சந்திர ஓரையில் கருட தரிசனம் செய்வது சந்திர தோஷ நிவர்த்தியும், சந்திர அனுக்கிரகமும் பெற்றுத்தரும்!
லக்னத்திற்கு 1, 5, 9ல் சந்திரன் இருப்பவர்கள் திங்கட்கிழமை கருட தரிசனம் செய்வது
வாழ்வில் பெரிய முன்னேற்றங்களை அடையலாம்.
செவ்வாய்: செவ்வாய் கிரகம் 6, 8, 12ல் உள்ளவர்களும், நீச்சம் அஸ்தமனம், பகை, வக்ரம், பாதகஸ்தானம், சனி,
ராகு, கேது தொடர்பு பெற்றிருத்தல் போன்ற நிலையில் உள்ள ஜாதகர்கள் செவ்வாய்க்கிழமை
கருட தரிசனம் செய்வது செவ்வாய் கிரக தோஷம் நீங்கி, யோக பலன்கள் சித்திக்கும்.
நிலம், வீடு, மனைகள் போன்றவற்றில் குறைகள், பிரச்சினைகள் நிவர்த்தி அடைய
செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் உத்தம பலன் தரும்!
செவ்வாய்க்கிரகத்தின் ராசி, லக்னம், நட்சத்திரங்களில் கிழமையில், ஓரையில் பிறந்தவர்கள்
செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் சிறந்த நிலை அடைய வழி வகுக்கும்.
வாழ்வில் ஏற்படும் அனைத்துவித துன்பங்களும், துயரங்களும் நீங்கிட, சுபிட்சம் ஏற்பட வேண்டுவோர்
தவறாமல் செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும்.
புதன்: அறிவு கிரகமான புதன் கருடனை வாகனமாகக் கொண்ட ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாகும்.
கல்விகளில் ஏற்படும் தடைகள், தோல்விகள் நீங்கி வெற்றிகள் ஏற்பட புதன்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும்!
புதனின் ராசி, லக்ன, நட்சத்திரங்களில் (மிதுனம், கன்னி, ஆயில்யம், கேட்டை, ரேவதி) பிறந்தவர்கள்
புதன்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் நல்ல உயர்வு கிட்டும்.
புதன் ஜாதகத்தில் 6, 8, 12ல் பாதகம், நீச்சம், வக்கிரம், அஸ்தமனம், நீச்சாம்சம் போன்ற எதிரிடையான
அமைப்பைப் பெற்றவர்கள் புதன்கிழமையில் கருட தரிசனம் செய்வது நல்லது.
வியாழன்: வாழ்வில் ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தருவது
வியாழக்கிழமை மாலை நேர கருட தரிசனம் ஆகும். இன்றும் வியாழக்கிழமை கருட தரிசனத்திற்காக
ஏரிக்கரைகளில் பல கருட தரிசன பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் வைபோகத்தைக் காணலாம்.
குருவார கருட தரிசனத்தால் எடுத்த காரிய வெற்றி, பணவரவு, சத்ரு ஜெயம்,தேர்வுகளில் வெற்றி போன்றவைக் கிட்டுவது உறுதி ஆகும்!!
புத்திரப்பேறு வேண்டுவோர் குருவார கருட தரிசன பலன்களை ஜோடியுடன் தரிசனம் செய்ய வேண்டும்.
வெள்ளி: வெள்ளிக்கிழமை கருட தரிசனம் நோய், கடன், சத்ரு உபாதைகள் நீங்க வழிவகுக்கும். கொடுத்த கடன் வசூல் ஆகும்.
சுக்கிரன் ஜாதகத்தில் 6, 8, 12லும், நீச்சம், அஸ்தமனம், வக்கிரம், பாதகம், பகை, பாபிகளின் சூழல் போன்ற
எதிரிடையான தன்மையில் இருந்தால் வெள்ளிக்கிழமை கருட தரிசனம் சுக்கிர கிரக சாந்திக்கு வழிவகை செய்யும்!
சுபிட்சங்கள் உண்டாகும்.
சுக்கிரனின் ரிஷப, துலா ராசி, லக்னம், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்
சுக்கிர வார கருட தரிசனம் செய்வது வாழ்வில் உன்னத நிலையைத் தரும்.
சனிக்கிழமை: வேலைக்காரர்கள், ஊழியர்கள், கடின உழைப்பாளிகள், வியர்வை சிந்த உழைப்பவர்கள்
சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் வாழ்வில் நல்ல நிலை கிட்டும்.
சனி ஜாதகத்தில் 6, 8, 12லும், பாதகம், நீச்சம், பகை, அஸ்தமனம், வக்கிரம், செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற
கிரக தொடர்புகள் பெற்று எதிரிடையாக இருப்பின், சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால்
சனியின் எதிர்மறை பலன்கள் தணியும். சுபங்கள் உண்டாகும்.
ஞாயிறு: பிதுர் சாபம், தோஷம், பிதுர் துரோகம், தந்தை வர்க்காதிகளின் குரோத, விரோத எண்ணங்களின்
தாக்கங்கள் போன்ற தோஷங்கள் விலக ஞாயிற்றுக்கிழமை கருட தரிசனம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
சூரியன் ஜாதகத்தில் 6, 8, 12 பாதகம், நீச்சம், பகை, செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற எதிரிடையான
பலன்கள் விலகி சுபங்கள் ஏற்பட ஞாயிறு கருட தரிசனம் செய்ய வேண்டும்!
சூரியனின் சிம்ம ராசி, லக்னம், உத்திரம், உத்திராடம், கிருத்திகை, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
ஞாயிற்றுக் கிழமையில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.இதனால் வாழ்வில் நல்ல ஏற்றம், மாற்றம் காணலாம்.
- அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான்.
- பைரவருக்கும், அனுமாருக்கும் கடும் போர் நடந்தது.
காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. காரணம் பின்வருமாறு:
ராமர், ராவண வதம் செய்தபின்சேதுவில் சிவ பூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி ஏவினார்.
அனுமார் காசியை அடைந்து பார்த்தார். எங்கும் லிங்கங்கள்; எது சுயம்பு லிங்கம் என்று தெரியாமல் விழித்தார்.
அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான்.
பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமார் அந்தச் சிவலிங்கத்தைப் பேர்த்து எடுத்துப் புறப்பட்டார்.
காசியின் காவலராகிய காலபைரவர் அதுகண்டு கோபித்தார். "என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்?" என்று கூறித் தடுத்தார்.
பைரவருக்கும், அனுமாருக்கும் கடும் போர் நடந்தது.
அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி, "உலக நன்மைக்காக இந்தச் சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.
பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொடுத்தனுப்பினார்.
தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமாருக்குத் துணை புரிந்த கருடன் காசிநகர எல்லைக்குள்
பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார்.
அந்த சாபத்தின்படி இன்றும் கருடன் பறப்பதில்லை. பல்லி ஒலிப்பதில்லை.
- கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.
- எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குட முழுக்கை நடத்தி மகிழ்கின்றனர்.
நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சியிலும்,
குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.
அவ்வாறு வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர்.
கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.
இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன்.
வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும்.
ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை?
எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குட முழுக்கை நடத்தி மகிழ்கின்றனர்.
- அந்த கொடியில் ஸ்ரீ கருடனின் திருஉருவமே எழுதப்பட்டிருக்கும்.
- அந்தக் கொடியையே மிகவும் பவித்ரமாக உயரே ஏற்றி வழிபடுகிறோம்.
நம் நாட்டில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது,
அக்கோவிலின் கொடி மரத்தில் வேத மந்திரங்களோடு கொடியை ஏற்றுவது வழக்கம்.
அந்த கொடியில் ஸ்ரீ கருடனின் திருஉருவமே எழுதப்பட்டிருக்கும்.
அந்தக் கொடியையே மிகவும் பவித்ரமாக உயரே ஏற்றி வழிபடுகிறோம்.
இதற்கும் காரணம், கருடன் வேத வடிவானவன் என்பதால், இங்கு வேதத்திற்கே முதலிடம் கொடுத்து உயரே வைத்துள்ளனர்.
- ஒவ்வொரு இந்துவின் திருமண சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு.
- மாங்கல்யம் செய்யக் கொடுக்கும்போது கருடனின் நட்சத்திரமான சுவாதியில் கொடுப்பது மிகவும் விசேஷமாகும்.
ஒவ்வொரு இந்துவின் திருமண சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு.
திருமாங்கல்ய தாரணம் என்னும் தாலி அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது,
நாதஸ்வரக் கலைஞர்கள் கருடத்வனி என்னும் ராகத்திலேயே இசைக்கின்றனர்.
இந்த கருடத்வனியானது வேதத்திற்கு ஒப்பாகும் என்று ஏற்கனவே அறிந்துள்ளோம்.
வேத மந்திரங்களைக் கூறி நடைபெறும் திருமணத்தில், வேத மந்திரங்களை ஒலிக்கும் போது ஏதாவது தோஷம்
ஏற்பட்டாலும் கூட, இந்த கருடத்வனி அதனை நீக்கி விடுகிறது.
மேலும் திருமணத்தின் முக்கிய அங்கமான திருமாங்கல்யம் என்னும் தாலியை செய்யக் கொடுக்கும்போது
கருடனின் நட்சத்திரமான சுவாதியில் கொடுப்பது மிகவும் விசேஷமாகும்.
அல்லது திருமாங்கல்யத்தை வாங்கும்போதாவது சுவாதி நட்சத்திரத்தில் வாங்குவது நல்லது என்பது ஆன்றோர் வாக்கு.
- கருட பகவானுக்கு உரிய திதி ‘பஞ்சமி’ ஆகும்.
- பெண் குழந்தை வேண்டுவோர் பவுர்ணமி அன்று கருட தரிசனம் செய்யவும்.
எந்த திதியன்று கருட தரிசனம் செய்கிறோமோ அந்தத் திதியின் அதிதேவதையின் அருளாசியும்,சுபிட்சங்களும் நமக்கு கிடைக்கும்.
கல்வி,ஞானம், அறிவு, படிப்பில் நல்ல உயர்வு, வெற்றி கிடைக்க வேண்டுவோர் வளர்பிறை 'நவமி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
அஷ்ட ஐஸ்வர்யங்கள் லட்சுமி கடாட்சம் உண்டாக வேண்டுவோர் வளர்பிறை 'அஷ்டமி' திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
கண்திருஷ்டி தோஷங்கள் போன்ற தீவினைகள் நசியவும், பலவித எதிர்வினை சக்திகள் செயலிழக்கவும் செய்வது வளர்பிறை 'பிரதமை'யன்று கருட தரிசனம் ஆகும்.
சந்திரனால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக வளர்பிறை 'திரிதியை' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
சூரியனின் தோஷங்கள் விலக வளர்பிறை ஸப்தமி திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
செவ்வாய் சம்பந்தப்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆக வளர்பிறை 'சஷ்டி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
விநாயகப்பெருமானின் அனுக்கிரகம் கிடைக்க 'வளர்பிறை சதுர்த்தி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
புதனின் தோஷங்கள் நிவர்த்தி ஆகவும் நல்ல புத்தி உண்டாகவும் வேண்டுவோர் வளர்பிறை 'துவாதசி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
கருட பகவானுக்கு உரிய திதி 'பஞ்சமி' ஆகும்.
எனவே ஆவணி மாதம் வருகின்ற கருட பஞ்சமி மிகவும் சிறப்பு.
பொதுவாக பஞ்சமி திதி அன்று கருட தரிசனம் செய்வதால் ஈடு இணையற்ற சுப பலன்கள் உண்டாகும்.
தோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆக திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் கருடதரிசனம் செய்ய வேண்டும்.
மகாலட்சுமியின் அருளாசி உண்டாக வேண்டுவோர் 'துவாதசி' திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
புத்திர பாக்கியங்கள் சம்பந்தமான விஷயங்களுக்கும், குரு தோஷங்கள் நிவர்த்திக்கும் வாழ்வில் நல்ல மேம்பாடு அடையவும் வேண்டுவோர் தேய்பிறை 'தசமி'திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
முனிவர்களின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமானால் தேய்பிறை 'சப்தமி' அன்று கருட தரிசனம் செய்யவும்.
குபேர சம்பத்து உண்டாக தேய்பிறை 'பிரதமை' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
எமபயம் நீங்கவும் மரண பயம் விலகவும் தேய்பிறை 'நவமி' அன்று கருட தரிசனம் செய்யவும்.
கோச்சார சனியால் ஏற்படும் பாதிப்புகள் விலக வேண்டின் தேய்பிறை 'ஏகாதசி' அன்று சனீஸ்வர வழிபாடு கொள்ள வேண்டும்.
ராகு கேதுக்களின் அனுக்கிரகம் கிடைக்கவும் ராகு கேது தசாபுத்தி நடைமுறையில் உள்ளவர்கள் தேய்பிறை 'அஷ்டமி' அன்று கருட தரிசனம் செய்ய நல்ல பலன்கள் நடைமுறைக்கு வரும்.
அமாவாசை திதி அன்று கருட தரிசனம் செய்வது பித்ருக்கள் ஆசீர்வாதத்தை பெற்றுத் தரும். இதனால் அளப்பறிய நன்மைகள் வாழ்வில் உண்டாகும்.
ஆண்குழந்தை வேண்டுவோர் அமாவாசை அன்று கருட தரிசனம் தொடர்ந்து செய்ய பலன் நிச்சயம்.
பெண் குழந்தை வேண்டுவோர் பவுர்ணமி அன்று கருட தரிசனம் செய்யவும்.
சிவனின் அருளாசி கிட்ட தேய்பிறை 'திரயோதசி' பிரதோஷ காலத்தில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.
திருமண பாக்கியம் உண்டாக தேய்பிறை 'துவாதசி' அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். நல்ல வரன் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றியும், லாபமும், அபிவிருத்தியும் கிடைக்க வேண்டுவோர் தேய்பிறை, 'சஷ்டியில்' கருட தரிசனம் செய்ய வேண்டும்.
எந்த திதி அன்று கருட தரிசனம் செய்தாலும் அத்திதியின் அதி தெய்வ அருளாசியால் நமக்கு நல்ல பலன்களே விளையும்.
எனவே ' நித்திய கருட தரிசனத்தை ஒரு வழக்கமாக பழக்கமாக, தவமாக, வழிபாடாகக் கொண்டால் வாழ்வில் சகல சுபிட்சங்களையும் பெற்று வாழலாம்.
ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தில் தவறாமல் கருட தரிசனம் செய்தே ஆக வேண்டும்.
- கருடனை செல்வத்தின் சின்னமாக கருதுகின்றனர். அது கூர்மையான பார்வை கொண்டது.
- கருடன் பார்வைபட்டால் உடலிலுள்ள விஷக்கிருமிகள் அழிந்து விடும்.
கருடனை செல்வத்தின் சின்னமாக கருதுகின்றனர். அது கூர்மையான பார்வை கொண்டது.
எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கீழே உலவும் மற்ற வஸ்துக்கள் அதன் பார்வைக்குத் தெரியும்.
தொலைநோக்குப் பார்வை கொண்டது அது. காக்கும் கடவுளான திருமால் அதை வாகனமாக ஏற்றார்.
மனிதன் தன் வாழ்வை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களை வைத்திருக்க வேண்டும்.
ஒரு ஆற்றுக்குக் குளிக்கச் சென்றால் அதனுள் கழிவுகளைப் போட்டு நிரப்பக்கூடாது.
எதிர்காலத்தில் தனது சந்ததியும் அதே ஆற்றைப் பயன்படுத்த வேண்டுமே என்ற உணர்வு வர வேண்டும்.
இவ்வாறு தொலைநோக்கின்றி இஷ்டத்திற்கு நடந்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரும்.
காக்கும் கடவுள் நம்மை கைவிட்டு விடுவார்.
இயற்கை நம்மைத் தண்டித்து விடும்.
இதை உணர்த்தும் வகையிலேயே கூரிய பார்வையுடைய கருடனை வாகனமாகக் கொண்டுள்ளார் திருமால்.
மேலும் கருடன் பார்வைபட்டால் உடலிலுள்ள விஷக்கிருமிகள் அழிந்து விடும்.
நோயற்ற வாழ்வு கிட்டும். நோயில்லாதவர் உலகின் பெரிய பணக்காரர் ஆகிறார்.
எனவே செல்வத்தின் சின்னமாகக் கருடன் கருதப்படுகிறது.