என் மலர்
நீங்கள் தேடியது "பிரபலம்"
- ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உற்சாக பானம் (எனர்ஜி டிரிங்க்) விளம்பரத்தில் நடிக்க வைக்கப்பட்டு இந்தி தொலைக்காட்சி பிரபலங்கள் மீது நடந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உற்சாக பானம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரம் எனக் கூறி நடிக்க வைத்துவிட்டு அதற்கு எந்த சம்பளமும் தராமல் 25 பிரபலங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அதில் பிரபல இந்தி சீரியல் நடிகை அங்கிதா லோகண்டேவும் ஒருவர்.
அங்கிதா லோகண்டே, ஆயுஷ் சர்மா மற்றும் அட்ரிஜா ராய் உட்பட 25 நடிகர்களிடம் கிட்டத்தட்ட 1.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விளம்ரபரங்களுக்கு ஆள் பிடித்து கொடுக்கும் பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.
- அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையிலும், 48 மணி நேரத்திற்குள் உயிரிழப்பு.
பிரேசில் நாட்டின் சமூக வலைத்தள பிரபலமாக திகழ்ந்தவர் 19 வயதான மரியா சோபியா வலிம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய உடற்பயிற்சி, தோல் தொடர்பான அழகு குறிப்புகள் போன்றவற்றை பதிவு செய்து பிரபலமானார். மேலும், தனக்கு ஆர்வமுள்ள உயர்தர பிராண்ட்கள் குறித்தும் வெளிப்படுத்துவார். அவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
19 வயதேயான மரியா சோபியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்ச மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு கல்லீரல் வழங்க கொடையாளர் சம்மதம் தெரிவித்து அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்திற்குள் அவர் மரணம் அடைந்துள்ளார்.
சோபியா மரணம் அடைந்த தகவலை சியாராவில் உள்ள காசியாவின் மேயராக இருக்கும் அவரது தந்தை உறுதிப்படுத்தியுள்ளார். 19 வயதிலேயே மரணம் அடைந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் அவரை பின்தொடர்ந்தவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்தபோது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார்.
- 1995 ஆம் ஆண்டு லவ் லெட்டர் திரைப்படம் அவருக்கு புகழை தேடித் தந்தது
ஜப்பானை சேர்ந்த பிரபல நடிகையும் பாடகியான மிஹோ நகயாமா [54 வயது] டோக்கியாவில் உள்ள அவரது வீட்டின் குளியல் தொட்டியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நகாயாமா நேற்று [வெள்ளிக்கிழமை] ஒசாகாவில் ஒரு கிறிஸ்துமஸ் கச்சேரியில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்தார்.
ஆனால் நேற்று வேலை நிமித்தமாக அப்பாயிண்ட்மண்ட் இருந்தபோதிலும் இன்னும் அவர் வரவில்லை என்பதால் உடன் வேலை செய்யும் ஒருவர் அவசர எண்ணை அழைத்துள்ளார்.
அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது குளியலறை தொட்டியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மருத்துவர்கள் அவரது இறப்பை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து டோக்கியோ போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறப்பின் காரணம் குறித்த மர்மம் வெளிவரும் என்று தெரிகிறது.

யார் இந்த மிஹோ நகயாமா?
ஜப்பானின் சாகு பகுதியில் பிறந்த நகாயாமா, 1985 ஆம் ஆண்டு 'மைடோ ஒசவாகசே ஷிமாசு' என்ற நாடகத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதே ஆண்டில் அவர் தனது முதல் ஜே-பாப் பாடலான "C" ஐ வெளியிட்டார். 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்தபோது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார்.
1995 ஆம் ஆண்டு அவர் நடித்த 'லவ் லெட்டர்' திரைப்படம் நடிகையாக அவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. நகயாமா சுமார் 22 ஜே பாப் ஆல்பங்களை வெளியிட்டார்.

1997 ஆம் ஆண்டு 'டோக்கியோ வெதர்' படமும் பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இசை ஆகியவற்றில் அவர் செய்த சாதனைகளுக்காகப் பல விருதுகளை தனதாக்கியவர் ஆவார்.