என் மலர்
நீங்கள் தேடியது "பாராளுமன்ற தாக்குதல்"
- நேற்று அமளியில் ஈடுபட்டதாக மக்களவையில் 13 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
- இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் இருவர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர். இது பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு மக்களை சபாநாயகர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் நேற்று முதல் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 14 எம்.பி.க்கள் மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாநிலங்களவையில் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியதும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் அதே விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கூச்சலிட்டனர். அவைத் தலைவர்கள் சமாதானப்படுத்தியும் அவர்கள் கூச்சலை நிறுத்தவில்லை. இதனால் அவைகள் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவைத் தலைவர்கள் தன்னுடைய அறையில் சந்திக்குமாறு சேர்மன் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
- டிசம்பர் 13ல் பாராளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவம் பெரும் சர்ச்சையானது.
- வண்ண புகை குண்டுகளை வீசி அவையில் இருந்த உறுப்பினர்களை கலக்கத்தில் ஆழ்த்தினர்.
பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான டிசம்பர் 13-ம் தேதி பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 இளைஞர்கள் வண்ண புகை குண்டுகளை வீசி அவையில் இருந்த உறுப்பினர்களை கலக்கத்தில் ஆழ்த்தினர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

புதிய பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து வரலாறு காணாத அளவிற்கு 140க்கும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.