என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு"
- லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
- அடுத்த 6 நாட்களில் PSL மீண்டும் தொடங்கும்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை துபாய்க்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அவசர ஆலோசனைக்கு பின் இந்த முடிவை அறிவித்துள்ளது. முன்னதாக ராவல்பிண்டி, முல்தான் மற்றும் லாகூரில் நடைபெறவிருந்த பிஎஸ்எல் எக்ஸின் கடைசி எட்டு போட்டிகள் இப்போது துபாயில் நடைபெறும் என்று பிசிபி உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்த 6 நாட்களில் PSL மீண்டும் தொடங்கும், மேலும் அனைத்து அணிகளும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் துபாய்க்கு அனுப்பப்படும்.
- இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
- பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருவதால் பாதுகாப்பு குறித்து கவலை.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்று காலை பாகிஸ்தான் இந்தியாவின் 15 இடங்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் அவைகளை இடைமறித்து தாக்கி அழித்தது. அதேவேளையில் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அங்கு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வருகிற 18ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் டிரோன் தாக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரிப்பு காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமா? என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு யோசிக்க தொடங்கியது.
ஏனென்றால் டேவிட் வார்னர், ஜேசன் ஹோல்டர், வான் டர் டுசன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து விவாதிக்கப்படும்.
மேலும், பாகிஸ்தான் அரசின் ஆலோசனையை கிரிக்கெட் போர்டு பன்பற்றும் எனத் தெரிகிறது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் சிஇஓ சல்மான் நசீர், வெளிநாட்டு வீரர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இந்த சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என உறுதி அளித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தப்படலாம். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தால் வெளிநாட்டு வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
- 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிப்பு.
- பாகிஸ்தானில் நடத்தப்படும் போட்டியில் இந்தியா கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்தும் உரிமை ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் கையெழுத்திட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.) தலைமையத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப், ஐ.சி.சி. பொது ஆலோசகர் ஜொனாதன் ஹால் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
2009-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கரவாத தாக்குதலையடுத்து அப்போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்தியா மோதிய ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன. 2025-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது சந்தேகம்தான்.
- 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப்பின் பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
- அணியின் எதிர்காலம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆலோசனை நடத்தவில்லை என ஷாஹீன் அப்ரிடி அதிருப்தி.
பாகிஸ்தான் அணியின் டி20 அணி கேப்டனாக இருப்பவர் ஷாஹீன் அப்ரிடி. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் நியூசிலாந்து அணிக்கெதிராக பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் 1-4 எனத் தோல்வியடைந்தது.
விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை, டி20 அணியின் எதிர்கால திட்டம், பயிற்சியாளர் நியமனம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி ஷாஹீன் அப்ரிடியிடம் கலந்து ஆலோசனை நடத்தவில்லை. இது ஷாஹீன் அப்ரிடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பாபர் அசாம் உடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஷாஹீன் அப்ரிடி கலந்து கொள்ளவில்லை. கேப்டனாக தொடரை வைக்க விருப்பம் இல்லை என்றால் தன்னை நீக்கி விட்டு, அதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஷாஹீன் அப்ரிடி எதிர்பார்க்கிறார்.
மேலும் அவருக்கு நெருக்கமான சிலர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தொடர்பான குழப்பத்தில் இருந்து விலகி இருக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால் ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பதவியை ராஜினாமா செய்யலாம் எனத் தெரிகிறது.
தற்போது ஷாஹீன் அப்ரிடி காகுலில் உள்ள பயிற்சி முகாமில் உள்ளார். இவர் சீனியர் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சதாப் கான், பஹர் சமான் ஆகியோரிடம் கேப்டன் பதவி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் தனது முடிவை அறிவிக்கலாம்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் அணியை இரண்டு முறை சாம்பியன் பட்டம் வாங்கும் அளவிற்கு வழிநடத்தி சென்றார். ஆனால், சமீபத்தில் முடிவடைந்த தொடரில் கடைசி இடம் பிடித்தது.
- விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது
- டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் நியூசிலாந்து அணிக்கெதிராக பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் 1-4 எனத் தோல்வியடைந்தது.
விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை, டி20 அணியின் எதிர்கால திட்டம், பயிற்சியாளர் நியமனம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி ஷாஹீன் அப்ரிடியிடம் கலந்து ஆலோசனை நடத்தவில்லை. இது ஷாஹீன் அப்ரிடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பாபர் அசாம் உடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஷாஹீன் அப்ரிடி கலந்து கொள்ளவில்லை. கேப்டனாக தொடரை வைக்க விருப்பம் இல்லை என்றால் தன்னை நீக்கி விட்டு, அதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஷாஹீன் அப்ரிடி எதிர்பார்க்கிறார்.
மேலும் அவருக்கு நெருக்கமான சிலர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தொடர்பான குழப்பத்தில் இருந்து விலகி இருக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால் ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பதவியை ராஜினாமா செய்யலாம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது. ஆதலால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
- ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்
- பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
அண்மையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ஷாஹீன் அப்ரிடி ராஜினாமா செய்தார். அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.
2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது. ஆதலால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 2011ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி க்ரிஸ்டன் தற்போது பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூத், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மே 22 முதல் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு மேற்கொள்ளும் டி20 சுற்றுப்பயணத்தில் இருந்து கிர்ஸ்டன் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
- கடந்த மே மாதம் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார்.
- இவரது தலைமையில் பாகிஸ்தான டி20 உலகக் கோப்பையில் தகுதி சுற்றோடு வெளியேறியது.
பாகிஸ்தான் ஒயிட்பால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த கேரி கிரிஸ்டன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம்தான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு மாதங்கள் மட்டுமே பயிற்சியாளராக நீடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஒவ்வொரு ஸ்டாஃப் ஆக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கி வருகிறது. கேரி கிரிஸ்டன் மட்டும்தான் நீடித்து வந்தார். இந்த நிலையில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே செல்லும் நிலையில் கேரி கிர்ஸ்டன் அணியுடன் செல்லமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளார.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. கிர்ஸ்டன் டேவிட் ரெய்ட்-ஐ ஹை பெர்மார்மன்ஸ் கோச்சாக நியமிக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது.
டேவிட் ரெய்ட்-க்குப் பதிலாக மற்றொரு ஆலோசனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வழங்கியுள்ளது. அதை கேரி கிர்ஸ்டன் ஏற்க மறுத்துவிட்டார். இதனால்தால் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக உள்ள ஜேசன் கில்லெஸ்பி அல்லது தேசிய அணியின் தேர்வாளராக உள்ள அக்யூப் ஜாவித் ஆகியோரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா தொடர் தொடங்க இருக்கும் நிலையில் முகமது ரிஸ்வானை கேப்டனாக பாகிஸ்தான் அணி நியமித்துள்ளது.
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான பயணம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் காஷ்மீர் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் பிசிசிஐ கடும் எதிர்ப்பு.
பாகிஸ்தானில் அடுத்த வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை விளம்பரப்படுத்துவதற்கான ஐசிசி கோப்பை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படும்.
அந்த வகையில் இன்று சாம்பியன்ஸ் டிராபி பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோப்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான ஸ்கார்டு, ஹன்சா, முசாபர்பாத் போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக இருந்தது.
இதற்கு பிசிசிஐ கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இதனால் அப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படாது என ஐசிசி தெரிவித்துள்ளது.
டாக்சிலா, கான்பூர், அபோதாபாத், முர்ரீ, நதியா கலி, கராச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 26 முதல் 28-ந்தேதி வரை ஆப்கானிஸ்தானிலும், டிசம்பர் 10 முதல் 13-ந்தேதி வரை வங்கதேசத்திலும், டிசம்பர் 15 முதல் 22-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்காவிலும், டிசம்பர் 25-ந்தேதி முதல் ஜனவரி 5-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவிலும், ஜனவரி 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நியூசிலாந்திலும், ஜனவரி 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இங்கிலாந்திலும், ஜனவரி 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை இந்தியாவிலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.
- பாகிஸ்தான் சென்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்தியா மறுப்பு.
- நாளை நடைபெறும் ஐசிசி- பிசிபி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது. அதேவேளையில் தொடரை ஹைபிரிட்டாக நடத்த பாகிஸ்தானும் மறுப்பு தெரிவித்து வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் ஐசிசி-க்கு சுமார் 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.
இதனால் தொடரை ஹைபிரிட் மாடலாக நடத்துங்கள் ஊக்கத்தொகை தருகிறோம் என ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக நாளை ஐசிசி- பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு எடுக்க இருக்கிறது. அதன்பிறகு போட்டிக்கான அட்டவணை இறுதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இனிமேல் பாகிஸ்தான் இந்தியா சென்று விளையாட வாய்ப்பில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நக்வி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி கூறுகையில் "இந்திய அதிகாரிகள் அவர்களுடைய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு வந்து விளையாட அனுப்ப தயாராக இல்லாதபோது, இந்தியாவில் நடைபெறும் அனைத்து தொடர்களிலும் பாகிஸ்தான் சென்று விளையாட வாய்ப்பில்லை.
இந்திய அணி பாகிஸ்தான் வர மறுப்பு தெரிவிக்கும்போது, பாகிஸ்தான் அணி மட்டும் இந்தியா செல்லும் சமநிலையற்ற சூழ்நிலையை நாங்கள் கொண்டிருக்க முடியாது. ஐசிசி உடனான கூட்டத்தில் என்ன நடந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நல்ல செய்திகள் மற்றும் முடிவுகளுடன் நாங்கள் வெளிவருவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்றார்.
- இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவிப்பதால் பொதுவான இடத்தில் போட்டியை நடத்த திட்டம்.
- இந்தியா விளையாடும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. நாங்கள் பாகிஸ்தான் சென்று விளையாடமாட்டோம் என இந்திய அணி (பிசிசி) தெரிவித்தது.
இதனால் போட்டியை ஹைபிரிட் மாடல் (பாகிஸ்தான் மற்றும் மற்றொரு நாடு) என்ற வகையில் நடத்த ஐசிசி விரும்பியது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையின் போது ஹைபிரிட் மாடலுக்கு நாங்கள் சம்மதம். அதேபோல் இந்தியாவில் 2031 வரை நடைபெறும் ஐசிசி தொடர்களும் ஹைபிரிட் மாடலாக நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.
இதை பிசிசிஐ ஏற்கவில்லை. நேற்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போர்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் பாகிஸ்தான் ஹைபிரிட் மாடலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதனைத் தொடர்ந்து போட்டி அட்டவணை வெளியாகும். பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆகிய நாடுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா விளையாடும் போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்.
அதேவேளையில் 2027 வரை இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி தொடர்கள் ஹைபிரிட் மாடலாக நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த காலக்கட்டத்தில் இந்தியா பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை நடத்த இருக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பை (ஆண்கள்) இலங்கையுடன் சேர்ந்து நடத்துகிறது.
பெண்கள் போட்டிகள் ஹைபிரிட் மாடலாக நடத்தப்பட வேண்டும். 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடத்தப்படும். ஒருவேளை அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதிப் பெற்றால் இந்த போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும்.
கிரிக்கெட் வெற்றி பெற வேண்டும், அது மிக முக்கியமானது. ஆனால் அனைவருக்குமான மரியாதையுடன் இருக்க வேண்டும். கிரிக்கெட்டுக்கு சிறந்ததைச் செய்வோம். நாம் எந்த வடிவிலான கிரிக்கெட்டிற்கு சென்றாலும், அது சமமானதாக இருக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நக்வி தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்து தொடரின்போது சில முடிவுகள் எடுக்க கில்லெஸ்பிக்கு நேரம் கொடுக்கப்படவில்லை.
- துணை பயிற்சியாளரின் பதவிக்காலத்தை நீடிக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கில்லெஸ்பி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த சில முடிவுகள் கில்லெஸ்பிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் ஒயிட்பால் அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒயிட்பால் தொடர் முடிவடைந்த உடன் வருகிற 26-ந்தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியுடன் துபாய் வழியாக கில்லெஸ்பி தென்ஆப்பிரிக்கா செல்ல வேண்டும். ஆனால் கில்லெஸ்பி குறித்து எந்த தகவலும் இல்லை எனத் தெரிகிறது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த வருடம் தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கில்லெஸ்பியை இரண்டு வருடத்திற்கு டெஸ்ட் அணி பயிற்சியாளராக நியமித்தது. வங்கதேசத்திற்கு எதிராக முதன்முறையாக டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது சில முடிவுகளை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கால அவகாசம் கொடுக்காததால் கில்லெஸ்பி அதிப்தி அடைந்துள்ளார். துணை பயிற்சியாளர் டிம் நீல்சனின் பதவிக் காலத்தை நீடிக்காததால் வருத்தத்தில் இருந்துள்ளார்.
- தொடர்ச்சியாக ஐந்து தொடர்களை வென்றுள்ளது.
- தென்ஆப்பிரிக்கா மண்ணில் 2000-த்திற்குப் பிறகு மூன்று தொடர்களை வென்றுள்ளது.
பாகிஸ்தான் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என வென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற இருக்கிறது.
இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தான் 21-ம் நூற்றாண்டில் தென்ஆப்பிரிக்காவில் 3 தொடர்களை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்த சீசனில் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி கைப்பற்றிய 3-வது தொடர் இதுவாகும். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அத்துடன் தொடர்ச்சியாக 5 தொடர்களை வென்று அசத்தியுள்ளது.
இது ஒரு அணி விளையாட்டு. தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அனைத்து வீரர்களும், ஈடுபாடுடன் பங்களிக்கின்றனர் என பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் தெரிவித்துள்ளா். பாபர் அசாம் 73 ரன்களும், ரிஸ்வான் 80 ரன்களும் விளாசி அணி 329 ரன்கள் குவிக்க உதவி புரிந்தனர்.
330 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணியால் 248 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.