என் மலர்
நீங்கள் தேடியது "சாம்பியன்ஸ் டிராபி"
- தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.
- சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது துணை ஊழியர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் என்று கூறிய ராகுல் டிராவிட்டின் முன்மாதிரியை கவுதம் கம்பீர் பின்பற்றுவாரா என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்போர்ட்ஸ்டார் இதழில் சுனில் கவாஸ்கர் எழுதிய கட்டுரையில், "2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தனது சக துணை ஊழியர்களை விட அதிகமான பரிசுத்தொகை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். மேலும், தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.
2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. ஆனால் மோர்னே மோர்கெல், திலிப் உள்ளிட்ட துணைப் பயிற்சியாளர்களுக்கு 50 லட்சம் மட்டுமே பரிசாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட் போல எந்த அறிவிப்பும் வெளியிட்டதாக தெரியவில்லை. அப்படியானால் ராகுல் டிராவிட் நல்ல ரோல் மாடலாக இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
- இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் டிராபி பட்டத்தை வென்றது.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.
இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை பட்டத்தை வென்ற அணி எனும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றுள்ளது. இதில் 2002-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு வசதியான ஹோட்டல்களில் அறைகள் வழங்கப்படாது.
- ஒரு மாற்று வீரருக்கு இதற்கு முன் ஒரு போட்டிக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு இருந்தால் தற்போது அவருக்கு 125 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.
இஸ்லாமாபாத்:
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்று நடத்தியது. சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பதால், இதற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலையைத் தாண்டி அதிக செலவு செய்யப்பட்டது.
சுமார் 869 கோடி ரூபாயை இந்த தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலவிட்டது. இவ்வளவு பணத்தை வாரி இறைத்த நிலையில், இந்தத் தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.52 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக அளித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் அமைப்பு.
இந்த தொடரை நடத்துவதற்கான கட்டணம் மற்றும் டிக்கெட் விற்பனை வருவாய் என அனைத்தையும் சேர்த்து மொத்தமாக 52 கோடி மட்டும்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் சுமார் 739 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இது யாரும் எதிர்பாராத மிகப் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த நஷ்டத்தை சரி செய்வதற்காக பாகிஸ்தான் நாட்டில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களின் சம்பளத்தில் கை வைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு கிரிக்கெட் ஆடி வரும் பாகிஸ்தான் வீரர்களின் சம்பளத்தில் 90 சதவீதத்தை குறைத்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
மேலும், போட்டிகளில் விளையாடாத மாற்று வீரர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்ட சம்பளத்தில் இனி 12.50 சதவீதம் மட்டுமே சம்பளமாக அளிக்கப்படும் என கூறப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு மாற்று வீரருக்கு இதற்கு முன் ஒரு போட்டிக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு இருந்தால் தற்போது அவருக்கு 125 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.
மேலும், இனி பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு வசதியான ஹோட்டல்களில் அறைகள் வழங்கப்படாது. அவர்கள் சாதாரண விடுதிகளில் தான் இனி தங்க வேண்டும். பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு மிக மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்து வரும் நிலையில், சர்வதேச தரத்தில் மைதானங்களைத் தயார் செய்துவிட்டு உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை மேலும் பலவீனமானதாக மாற்றி இருக்கிறது பாகிஸ்தான்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.
- அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான அணி வென்றெடுத்து.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை வழிநடத்த ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் ஆதரவு கிடைத்துள்ளது. வரவிருக்கும் தொடருக்கு அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தான் இருக்க வேண்டும் என குழுவின் அனைத்து உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.
இதனால் ஹிட்மேன் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்று ஊகங்கள் எழுந்தன. இதற்கிடையே இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில் ரோகித் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது.

ஆனால் அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றெடுத்து.
இதன்மூலம் ரோகித் சர்மா தன்னை நிரூபித்து உள்ளார். எனவே அவரை ஓரம்கட்டும் முடிவை பிசிசிஐ கைவிட்டதாக தெரிகிறது. ரோகித் சர்மா மீண்டும் ஒரு பெரிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவை வழிநடத்த உள்ளார்.
அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த அதிகம் வாய்ப்புள்ளது.
- பவர்பிளேயில் 2 ஓவர்கள், டெத் ஓவர்களில் 2 முதல் 3 ஓவர்கள் வரை பந்து வீசினேன்.
- மிடில் ஓவர்களில் விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் பந்து வீசினேன்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இடம் பிடித்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் 2 லீக் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறாத அவர் 3-வது லீக் போட்டி மற்றும் நாக் அவுட் சுற்றில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ரோகித் சர்மா தன்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா என்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். பவர்பிளேயில் 2 ஓவர்கள், டெத் ஓவர்களில் 2 முதல் 3 ஓவர்கள் வரை பந்து வீசினேன். மிடில் ஓவர்களில் விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் பந்து வீசினேன்.
இப்படித்தான் என் திறனை அதிகப்படுத்த முடியும் என்று நான் அவரிடம் சொன்னேன், நான் சொல்லாமலேயே அவர் அதைப் புரிந்துகொண்டார். ஏனென்றால் அவர் எல்லா காலத்திலும் சிறந்த கேப்டன்களில் ஒருவர்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
- இந்தியாவிடம் இருந்து அதிக பணம் வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
- இந்தியா சொல்வதை எல்லாம் மற்ற நாடுகளும் ஐசிசியும் கேட்கக்கூடாது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக கைப்பற்றியது. பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போது உள்ள வீரர்கள் இந்திய அணியை விமர்சனம் செய்து வந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான்களும் இந்திய அணியை கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்தியா எங்கேயும் பயணம் செய்யாமல் ஒரே இடத்தில் விளையாடுவதால் தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வெற்றி பெற்றதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் ஆன்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியா கேட்கும் அனைத்து விஷயத்திற்கும் ஐசிசி தலையை ஆட்ட கூடாது. சில விஷயங்களுக்கு நோ என்று பதில் சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த டி20 உலக கோப்பையில் கூட இந்தியாவுக்கு சாதகமாக மைதானம் ஏற்கனவே முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
மற்ற நாடுகளுக்கு எல்லாம் எங்கே விளையாடுகிறோம் என தெரியாத சூழலில் இந்தியாவுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது சாம்பியன்ஷிப் டிராபி தொடரிலும் இதே தான் நடந்திருக்கிறது. அது எப்படி ஒரு தொடரில் பங்கேற்கும் அணி எங்கேயும் பயணம் செய்யாமல் ஒரே மைதானத்தில் விளையாட அனுமதி அளிக்க முடியும்.
இந்தியாவிடம் இருந்து அதிக பணம் வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக இந்தியா சொல்வதை எல்லாம் மற்ற நாடுகளும் ஐசிசியும் கேட்கக்கூடாது. தற்போது நடைபெறுவது கிரிக்கெட்டே கிடையாது. இது மற்ற அணிகளுக்கு பாதகமாக அமைகிறது.
கிரிக்கெட் என்பது இந்தியா மட்டும் விளையாடும் விளையாட்டு கிடையாது. என்னை பொறுத்தவரை ஐசிசி என்பது தற்போது இந்திய கிரிக்கெட் கவுன்சில் என மாறிவிட்டது. நாளை இந்தியா எங்களுக்கு நோபால் வைடு எடுத்து விடுங்கள் என்று கேட்டால் ஐசிசி உடனே நோ பாலையும் ஓயிடையும் ரத்து செய்து விடுவார்கள்.
என்று ஆண்டி ராபர்ட்ஸ் கூறினார்.
- சாம்பியன்ஸ் டிராபியுடன் ஹர்திக் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்
- பதிவிட்ட 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குளை பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.
இந்த வெற்றியை இந்திய வீரர்கள் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யா அவரது ஸ்டைலில் கொண்டாடினார். பிட்ச் மத்தியில் கோப்பையை வைத்து பாண்ட்யா இரு கைகளையும் கோப்பையை நோக்கி காட்டுவது போல ஸ்டைலாக போஸ் கொடுப்பார்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற போதும் அவரது தனித்துவமான ஸ்டைலில் போஸ் கொடுத்தார். அதே மாதிரி இந்த முறையும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியுடன் ஹர்திக் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். பதிவிட்ட 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குளை பெற்றுள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் லைக்குகளை பெற்ற இந்தியர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார். இந்தப் பதிவு தற்போது 16 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.
- இந்த தொடரில் விளையாடியதில் மகிழ்ச்சி.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2002, 2013-ம் ஆண்டுகளில் கைப்பற்றி இருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் இந்தியா வென்ற 7-வது கோப்பை இதுவாகும்.
இந்நிலையில் இந்த தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்தியாவிற்கு என் வாழ்த்துகள். இந்த தொடரில் விளையாடியதில் மகிழ்ச்சி. நியூசிலாந்து அணியில் இடம்பெற்றதை நினைத்து பெருமை கொள்கிறேன்.
என ரச்சின் கூறினார்.
4 போட்டிகளில் விளையாடிய ரச்சின், 263 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிப்பு.
- பாகிஸ்தானில் நடத்தப்படும் போட்டியில் இந்தியா கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்தும் உரிமை ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் கையெழுத்திட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.) தலைமையத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப், ஐ.சி.சி. பொது ஆலோசகர் ஜொனாதன் ஹால் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
2009-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கரவாத தாக்குதலையடுத்து அப்போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்தியா மோதிய ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன. 2025-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது சந்தேகம்தான்.
- வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் பிஎஸ்எல் நடத்தப்படும்.
- அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி நடைபெற இருக்கிறது.
இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) என்ற பெயரில் டி20 தொடரை நடத்துகிறது.
வழக்கமாக பிப்ரவரி மாதம் இந்த டி20 லீக் தொடரை பாகிஸ்தான் நடத்தும். இதுவரை 9 முறை லீக் தொடரை நடத்தியுள்ளது.
அடுத்த வருடம் 10-வது டி20 லீக் தொடர் நடத்தப்பட இருக்கிறது. அதேவேளையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது.
இதனால் அடுத்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்றுள்ள அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளது. அப்போது மே மாதம் நடத்த சம்பவம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மார்ச் மாதம் முதல் மே மாதம் கடைசி வாரம் வரை ஐபிஎல் தொடர் நடைபெறும். இதனால் அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் நடைபெறும்போது பிஎஸ்எல் போட்டியிடும் நடைபெறும் நிலையில் உள்ளது.
தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸின் பெரும்பாலான வீரர்கள் இரண்டு லீக் தொடரிலும் விளையாடி வருகிறார்கள். இதனால் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதத்தை தவறவிட்டால் ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை பாகிஸ்தான் அணிக்கு தொடர்ந்து சர்வதேச போட்டிகள் இருக்கிறது. இதனால் மே மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ரோகித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
- இதனை தொடர்ந்து கோலி, ரோகித், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பை 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த தொடரில் தோல்வியே இல்லாமல் கோப்பை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி எல்லா ஐசிசி கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான்.
மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார்கள்.
இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.
- தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வென்றது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் முதல்முறை நடத்த உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் தொடர் "சாம்பியன் டிராபி," இது மினி உலகக் கோப்பை தொடர் என்றும் அழைக்கப்படுகிறது. முதன் முதலில் 1998 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அறிமுக தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வென்றது.
அதன்பிறகு, இதுவரை எட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில், ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. இதனை பாகிஸ்தான் முதல்முறையாக நடத்த உள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்த தொடரில் பாகிஸ்தான் பரிந்துரைக்கும் அட்டவணையை ஐசிசி அறிவிக்கும். ஒருவேளை பாகிஸ்தான் உருவாக்கிய அட்டவணையில் திருத்தங்கள் இருப்பின் அதுகுறித்து போட்டி நடத்தும் நாட்டிற்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனிடையே 2025 ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த தொடரின் முதல் 20 நாளில் 15 போட்டிகள் நடைபெற உள்ளன. லாகூரில் அதிகபட்சம் ஏழு போட்டிகள் நடைபெறவுள்ளன. மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியும் லாகூர் மைதானத்திலேயே நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து தினமும் ஏதேனும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே 2025 ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த ஐசிசி-க்கு பிசிசிஐ வலியுறுத்தும் என்று பிசிசிஐ சார்ந்த தகவல்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.