search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்பியன்ஸ் டிராபி"

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது.
    • அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில்தான நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உறுதியாக உள்ளது.

    ஐசிசி-யின் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீசில் முடிவடைந்த நிலையில், ஐசிசி சாம்பியின்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

    பாதுகாப்பு காரணம், அரசியல் விவகாரம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை. "hybrid model" என அழைக்கப்படும் வேறுநாட்டில் போட்டி நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. குறைந்தபட்சம் இந்தியா மோதும் போட்டிகளில் அனைத்தும் நடத்தப்படலாம்.

    ஆனால் இந்திய அணி பாகிஸ்தானிற்கு வந்து விளையாட வேண்டும் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் போர்டு தலைவர்கள், வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது, பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தினேஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தினேஷ் கனேரியா கூறுகையில் "பாகிஸ்தான் சூழ்நிலையை பார்க்கும்போது, இந்திய அணி பாகிஸ்தான் செல்லக் கூடாது என்றுதான் நான் சொல்வேன். பாகிஸ்தான் இதுகுறித்து யோசிக்க வேண்டும். ஐசிசி இது தொடர்பாக முடிவு எடுக்கும். பெரும்பாலும் இது "hybrid model" தொடர்பானதாக இருக்கும். துபாயில் போட்டிகள் நடத்தப்படும்.

    வீரர்களின் பாதுகாப்புக்குத்தான் முதல் முன்னுரிமை. மரியாதை என்பதுதான் 2-வது முன்னுரிமைதான். ஏராளமான விசயங்கள் உள்ளன. பிசிசிஐ தனது சிறந்த வேலையை செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன். இறுதி முடிவை அனைத்து நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என நினைக்கிறேன். இது "hybrid model" தொடராகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கம்ரான் அக்மல் கூறுகையில் "இந்தியா பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். நாம் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, கிரிக்கெட் விளையாடி, நேசிக்க வேண்டும்" என்றார்.

    • ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் நடக்கிறது.
    • பாகிஸ்தானில் நடக்கும் இத்தொடரில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    லாகூர்:

    ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் நடக்கும் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா தெரிவித்துள்ளது.

    எல்லைப் பிரச்சனையால் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் விளையாடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. மேலும், ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் பொது இடத்தில் இந்தியா விளையாடி வருகிறது.

    இதற்கிடையே, சாம்பியன்ஸ் டிராபிக்கான தங்களது போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்தும்படி ஐ.சி.சி.யிடம் பி.சி.சி.ஐ. கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

    சமீபத்தில் பெஷாவரில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் நடந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். எனவே இந்தியா சொல்வது போல் பாதுகாப்பு பிரச்சனைகளை பாகிஸ்தான் சரிசெய்யவில்லை என கவலை தெரிவித்துள்ளார். வங்காளதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களின் போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடப்பது சந்தேகம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, பசித் அலி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு:

    வங்காளதேச தொடருக்குப்பின் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. எனவே நாம் பாதுகாப்புக்கு கவனம் கொடுக்க வேண்டும்.

    இந்த சுற்றுப்பயணங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி கண்டிப்பாக இங்கு நடக்காது. ஆனால் பலுசிஸ்தானிலும் பெஷாவரிலும் நமது ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்து வருகின்றனர்.

    அது ஏன் நடக்கிறது என்பதற்கு அரசாங்கம் மட்டுமே பதிலளிக்க முடியும். அது மிகவும் தவறு. இந்த நேரத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறு விஷயங்கள் நடந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி நடக்காது.

    நமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கொடுக்கப்படும் அதே பாதுகாப்பை வெளிநாட்டு அணிகளுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது.
    • இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வருகிறது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. பொதுவான இடத்திற்கு போட்டியை மாற்ற வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தங்கள் நாட்டில்தான் நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது.

    இந்த நிலையில்தான் கடந்த வாரம் கொழும்பில் ஐசிசி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் அட்டவணை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. சாம்பியன் டிராபியை நடத்துவதற்கு என்ன தேவையோ? அதை பெற்றுவிட்டது. வரைவு போட்டி அட்டவணை, என்ன வடிவிலான போட்டி (20 ஓவர் அல்லது 50 ஓவர்) ஆகியவற்றையும் தாக்கல் செய்துள்ளது.

    ஐசிசி இதை எப்படி வெளியிட்டு ஆலோசனை நடத்தி இறுதிப்படுத்துகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் வரைவு அட்டவணையை பரிந்துரை செய்ததில் ஒரு பகுதியாக உள்ளது. லாகூரில் இந்தியாவின் அனைத்து போட்டிகளும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அதுவும் லாகூரில்தான் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் ஐசிசி-யிடம் பிசிபி தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஆவணத்தில் அனைத்து விவரங்களையும் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வரி முறைகள், மைதானங்கள் தேர்வு, இந்திய அணி பாகிஸ்தானில் வந்து விளையாடுவதற்கான அரசின் அனுமதி உள்ளிட்டவைகளை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளது.

    இதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு இந்திய அணி விளையாட வருமா? என்பதை பிசிசிஐ-யிடம் இருந்து தகவல் பெறுவது, அட்டவணையை இறுதிப்படுத்தி வெளியிடுவது என அனைத்தை பொறுப்புகளையும் ஐசிசி-யிடம் விட்டுவிட்டது.

    அதேவேளையில் ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்தால், போட்டியை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்துவதற்காக துணை பட்ஜெட்டையும் வைத்துள்ளது.

    பாகிஸ்தானில் சென்று விளையாடுவது என்பது முற்றிலும் இந்திய அரசின் முடிவு என பிசிசிஐ உறுதியாக தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை.
    • போட்டிக்கு செல்லாமல் இருப்பது பிசிசிஐயின் சொந்த முடிவு.

    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து தினமும் ஏதேனும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதனிடையே 2025 ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த ஐசிசி-க்கு பிசிசிஐ வலியுறுத்தும் என்று பிசிசிஐ சார்ந்த தகவல்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை என ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    இதில் புதிதாக என்ன இருக்கிறது? இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை, போட்டிக்கு செல்லாமல் இருப்பது பிசிசிஐயின் சொந்த முடிவு. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை.

    இந்த இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவது நம் நாட்டின் பொறுப்பு மட்டுமல்ல, நல்லுறவு ஏற்பட வேண்டுமானால் பாகிஸ்தானின் பொறுப்பும் கூட என்று நான் இப்போதும் கூறி வருகிறேன்.

    இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கக்கூடாது, அப்படியொரு சூழல் இருக்கக்கூடாது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்படும் வகையில் பாகிஸ்தானும் பங்காற்ற வேண்டும் என்று கூறினார்.

    • தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வென்றது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் முதல்முறை நடத்த உள்ளது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் தொடர் "சாம்பியன் டிராபி," இது மினி உலகக் கோப்பை தொடர் என்றும் அழைக்கப்படுகிறது. முதன் முதலில் 1998 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அறிமுக தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வென்றது.

    அதன்பிறகு, இதுவரை எட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில், ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. இதனை பாகிஸ்தான் முதல்முறையாக நடத்த உள்ளது.

    பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்த தொடரில் பாகிஸ்தான் பரிந்துரைக்கும் அட்டவணையை ஐசிசி அறிவிக்கும். ஒருவேளை பாகிஸ்தான் உருவாக்கிய அட்டவணையில் திருத்தங்கள் இருப்பின் அதுகுறித்து போட்டி நடத்தும் நாட்டிற்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனிடையே 2025 ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த தொடரின் முதல் 20 நாளில் 15 போட்டிகள் நடைபெற உள்ளன. லாகூரில் அதிகபட்சம் ஏழு போட்டிகள் நடைபெறவுள்ளன. மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியும் லாகூர் மைதானத்திலேயே நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து தினமும் ஏதேனும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதனிடையே 2025 ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த ஐசிசி-க்கு பிசிசிஐ வலியுறுத்தும் என்று பிசிசிஐ சார்ந்த தகவல்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    • ரோகித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
    • இதனை தொடர்ந்து கோலி, ரோகித், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர்.

    டி20 உலகக் கோப்பை 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த தொடரில் தோல்வியே இல்லாமல் கோப்பை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி எல்லா ஐசிசி கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான்.

    மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார்கள்.

    இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.

    • வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் பிஎஸ்எல் நடத்தப்படும்.
    • அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி நடைபெற இருக்கிறது.

    இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) என்ற பெயரில் டி20 தொடரை நடத்துகிறது.

    வழக்கமாக பிப்ரவரி மாதம் இந்த டி20 லீக் தொடரை பாகிஸ்தான் நடத்தும். இதுவரை 9 முறை லீக் தொடரை நடத்தியுள்ளது.

    அடுத்த வருடம் 10-வது டி20 லீக் தொடர் நடத்தப்பட இருக்கிறது. அதேவேளையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது.

    இதனால் அடுத்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்றுள்ள அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளது. அப்போது மே மாதம் நடத்த சம்பவம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் மார்ச் மாதம் முதல் மே மாதம் கடைசி வாரம் வரை ஐபிஎல் தொடர் நடைபெறும். இதனால் அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் நடைபெறும்போது பிஎஸ்எல் போட்டியிடும் நடைபெறும் நிலையில் உள்ளது.

    தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸின் பெரும்பாலான வீரர்கள் இரண்டு லீக் தொடரிலும் விளையாடி வருகிறார்கள். இதனால் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மே மாதத்தை தவறவிட்டால் ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை பாகிஸ்தான் அணிக்கு தொடர்ந்து சர்வதேச போட்டிகள் இருக்கிறது. இதனால் மே மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிப்பு.
    • பாகிஸ்தானில் நடத்தப்படும் போட்டியில் இந்தியா கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    2015-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்தும் உரிமை ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் கையெழுத்திட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.) தலைமையத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப், ஐ.சி.சி. பொது ஆலோசகர் ஜொனாதன் ஹால் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    2009-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கரவாத தாக்குதலையடுத்து அப்போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்தியா மோதிய ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன. 2025-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது சந்தேகம்தான்.

    ×