என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்பியன்ஸ் டிராபி"

    • சமீபத்திய ஐ.சி.சி.யின் கூட்டம் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்தில் மாற்றுவதற்கு (ஹை பிரிட் மாடல்) பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டது.
    • நிபந்தனை 3 ஆண்டுகளுக்கா? அல்லது 2031 வரையிலான ஐ.சி.சி. சுழற்சி முறை போட்டிகள் வரையா? என்று தெரியவில்லை.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர் ராவல்பிண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இதை கூறிவிட்டது.

    இந்தியாவின் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்று பாகிஸ்தான் அறிவித்தது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    சமீபத்திய ஐ.சி.சி.யின் கூட்டம் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்தில் மாற்றுவதற்கு (ஹை பிரிட் மாடல்) பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டது. இதை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்கிடையே ஹைபிரிட் மாடலை ஏற்றுக்கொள்ள பாகிஸ்தான் புதிய நிபந்தனை விதித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் தங்களுக்கு உரிய ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என நிபந்தனை விதித்து உள்ளது.

    இதை ஏற்று உறுதியான எழுத்துப்பூர்வமான ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்த நிபந்தனை 3 ஆண்டுகளுக்கா? அல்லது 2031 வரையிலான ஐ.சி.சி. சுழற்சி முறை போட்டிகள் வரையா? என்று தெரியவில்லை.

    இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் 3 ஐ.சி.சி. போட்டிகள் தொடங்குகிறது. 2026 பிப்ரவரியில் 20 ஓவர் உலக கோப்பையை இலங்கையுடன் இணைந்து நடக்கிறது. 2029-ல் சாம்பியன்ஸ் டிராபி, 2031-ல் உலக கோப்பை போட்டிகளை நடத்துகிறது. 

    • இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவிப்பதால் பொதுவான இடத்தில் போட்டியை நடத்த திட்டம்.
    • இந்தியா விளையாடும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. நாங்கள் பாகிஸ்தான் சென்று விளையாடமாட்டோம் என இந்திய அணி (பிசிசி) தெரிவித்தது.

    இதனால் போட்டியை ஹைபிரிட் மாடல் (பாகிஸ்தான் மற்றும் மற்றொரு நாடு) என்ற வகையில் நடத்த ஐசிசி விரும்பியது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    பேச்சுவார்த்தையின் போது ஹைபிரிட் மாடலுக்கு நாங்கள் சம்மதம். அதேபோல் இந்தியாவில் 2031 வரை நடைபெறும் ஐசிசி தொடர்களும் ஹைபிரிட் மாடலாக நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.

    இதை பிசிசிஐ ஏற்கவில்லை. நேற்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போர்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    இதில் பாகிஸ்தான் ஹைபிரிட் மாடலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதனைத் தொடர்ந்து போட்டி அட்டவணை வெளியாகும். பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆகிய நாடுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா விளையாடும் போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்.

    அதேவேளையில் 2027 வரை இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி தொடர்கள் ஹைபிரிட் மாடலாக நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த காலக்கட்டத்தில் இந்தியா பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை நடத்த இருக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பை (ஆண்கள்) இலங்கையுடன் சேர்ந்து நடத்துகிறது.

    பெண்கள் போட்டிகள் ஹைபிரிட் மாடலாக நடத்தப்பட வேண்டும். 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடத்தப்படும். ஒருவேளை அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதிப் பெற்றால் இந்த போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும்.

    கிரிக்கெட் வெற்றி பெற வேண்டும், அது மிக முக்கியமானது. ஆனால் அனைவருக்குமான மரியாதையுடன் இருக்க வேண்டும். கிரிக்கெட்டுக்கு சிறந்ததைச் செய்வோம். நாம் எந்த வடிவிலான கிரிக்கெட்டிற்கு சென்றாலும், அது சமமானதாக இருக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நக்வி தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தானில் சென்று விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்துவிட்டது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலாக நடத்த ஐசிசி பேச்சுவார்த்தை.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட முடியாது என அறிவித்து விட்டது.

    இதனால் பாகிஸ்தானிடம் ஹைபிரிட் மாடலாக இந்த தொடரை நடத்த ஐசிசி கேட்டுக்கொண்டது. நாங்கள் ஹைபிரிட் மாடலாக நடத்த தயார். அதேவேளையில் இந்தியாவில் நடைபெறும் தொடர்களையும் இதுபோது ஹைபிரிட் மாடலாக நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.

    2027 வரை ஹைபிரிட் மாடலாக நடத்தலாம் என ஐசிசி தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணை இன்னும் வெளியாகாமல் உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாட முடியாது என்றால், பாகிஸ்தான் அணியும் இந்தியா சென்று விளையாட எந்த காரணமும் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அப்ரிடி கூறுகையில் "பாகிஸ்தான் கிரிக்கெட் வலுவானதாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் இருக்க வேண்டும் மற்றும் வலுவான கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தியாவால் பாகிஸ்தானில் வந்து விளையாட முடியாவிட்டால், நாங்கள் இந்தியாவில் நடைபெறும் எந்த தொடரிலும் விளையாடுவதற்கு எந்த காரணமும் இல்லை.

    ஒவ்வொரு உறுப்பு நாடும் கிரிக்கெட் விளையாடுவது அல்லது பணம் சம்பாதிக்க விரும்புகிறதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு ஐசிசி-க்க உள்ளது. இது தொடர்பாக ஐசிசி முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும்.
    • 2026 தொடரில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாடாது.

    பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என பிசிசிஐ தெரிவித்தது. இதனால் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்த ஐசிசி முயற்சி மேற்கொண்டது.

    ஐசிசி-யின் ஹைபிரிட் மாடல் தொடரை பாகிஸ்தான் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் 2026 வரையிலான ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.

    இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலாக நடத்த ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.

    அதன்படி போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். அதேவேளையில் பாகிஸ்தான் 2026-ல் நடைபெறும் டி20 தொடரில் பங்கேற்காது. பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்தப்படுவதற்கு ஐசிசி பாகிஸ்தானுக்கு இழப்பீடு ஏதும் வழங்காது.

    பாகிஸ்தானில் உள்ள மூன்று மைதானங்களில் போட்டிகள் அனைத்தும் நடைபெறும். இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்.

    அதேவேளையில் 2027-க்குப் பிறகு பாகிஸ்தானுக்கு பெண்கள் ஐசிசி தொடர் நடத்த வாய்ப்பு வழங்கப்படும்.

    இந்தியா தகுதி சுற்றுடன் வெளியேறினால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முறையே லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும். இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் போட்டி துபாயில் நடத்தப்படும்

    • பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நியாயமான அணுகுமுறையை எடுத்ததாக நான் நினைக்கிறேன்.
    • இந்தியா வரவில்லை என்றால் நாங்கள் வரமாட்டோம் என்ற தெளிவான தகவலை அனுப்பியுள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பொதுவான ஒரு இடத்தில் நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் உள்பட இந்தியா விளையாடம் போட்டிகள் அனைத்தும் பொதுவான இடத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

    அதேபோல் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2027 வரையிலான போட்டியில் பாகிஸ்தான் இந்தியா சென்று விளையாடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெண்கள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடாது.

    இந்த முடிவால் இந்தியாவை விட பாகிஸ்தானுக்குதான் அதிக ஆதாயம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியான்டட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜாவித் மியான்தத் கூறியதாவது:-

    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நியாயமான அணுகுமுறையை எடுத்ததாக நான் நினைக்கிறேன். ஐசிசி மற்றும் பிற கிரிக்கெட் நாடுகள் மத்தியில் அவசரப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, பிசிசிஐ-யை விட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிக லாபம் ஈட்டியதாக நான் நினைக்கும் ஒரு தீர்வைத் தேர்ந்தெடுத்தது.

    மிக நீண்ட காலத்திற்குப் பிறகு பாகிஸ்தான் மிகப்பெரிய தொடரை நடத்த இருக்கிறது. நீங்கள் (இந்திய அணி) பாகிஸ்தான் வரவில்லை என்றால், நாங்கள் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்ற தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது.

    இவ்வாறு மியான்டட் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் மேலும் ஒரு ஐசிசி தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றால், பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு அது சிறந்த செய்தியாக இருக்கும் என மொயின் கான் தெரிவித்துள்ளார்.

    • 2024-2027 வரை இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஐ.சி.சி.யின் இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

    9- வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல் பிண்டியில் நடத்தப்படுகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து (ஏ பிரிவு) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.

    பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

    இதை பாகிஸ்தான் ஏற்காமல் நீண்ட நாட்களாக பிடிவாதமாக இருந்து வந்தது. இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை பொதுவான இடத்தில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்தது.

    இதேபோல 2024-2027 வரை இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது போன்றே அந்த தொடர்களிலும் பாகிஸ்தானுக்கு உரிய ஆட்டங்கள் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவுக்கான ஆட்டத்தை பொதுவான இடத்தில் ஹைபீரிட் மாடலில் நடத்த ஒப்புக்கொண்டதற்காக பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. நஷ்டஈடு வழங்கியது. அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. மூலம் ரூ.38 கோடி கிடைக்கும்.

    ஐ.சி.சி.யின் இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஹைபிரிட் மாடலில் நடத்துவதற்கு பாகிஸ்தானுக்கு எந்த பண இழப்பும் ஏற்பட போவதில்லை. பொதுவான இடத்தில் நடத்த ஒப்புக்கொண்டதற்காக ரூ.38 கோடி கொடுப்பது தொடர்பாக ஐ.சி.சி. விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    • பாகிஸ்தானில் 2025 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பாதுகாப்பு காரணமாக இந்திய வீரர்களை அனுப்ப மறுப்பு கூறப்பட்டது.
    • இரு அணிகளும் அரசியல் பதட்டங்கள் இல்லாமல் அந்தந்த நாடுகளில் இருந்து நுழைய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் - இந்தியா அரசியல் பிரச்சனை கிரிக்கெட் விளையாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.பாகிஸ்தானில் 2025 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பாதுகாப்பு காரணமாக இந்திய வீரர்களை அனுப்ப மறுப்பு கூறப்பட்டது.

    இதற்கு உபாயமாக ஐசிசி ஹைபிரிட் மாடலை பரிந்துரைத்து வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்குப் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் அகமது செசாத், ஒரு புதிய தீர்வை முன்மொழிந்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் சொந்த மைதானத்தில் எவ்வாறு விளையாடலாம் என்று ஒரு வினோதமான ஆலோசனையை அவர் வழங்கியுள்ளார்.

    யூடியூபில் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அகமது செசாத், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையில் ஒரு மைதானம் கட்டப்பட வேண்டும்.

    ஒரு வாயில் இந்தியாவை நோக்கியும், மற்றொரு வாயில் பாகிஸ்தானை நோக்கியும் இருக்கும். வீரர்கள் அந்தந்த வாயில்களில் இருந்து வந்து விளையாடுவார்கள். இதனால் இரு அணிகளும் அரசியல் பதட்டங்கள் இல்லாமல் அந்தந்த நாடுகளில் இருந்து நுழைய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

     

    ஆனால் பிசிசிஐக்கும் அவர்களின் அரசாங்கத்திற்கும் பிரச்சினைகள் இருக்கும். அவர்களின் வீரர்கள் எங்கள் பக்கத்தில் மைதானத்திற்கு வரும்போது, அவர்களுக்கு விசா தேவைப்படும் என்று அவர் கூறினார்.

    இதற்கிடையே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான நடுநிலைமையான இடத்தை ஐசிசி இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால் அது இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • முதல் டி20 போட்டி ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
    • 2 அணிகளுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    முதலில் டி20 தொடரும் அதற்கடுத்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது. அதன்படி முதல் டி20 போட்டி ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2 அணிகளுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விரைவில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இதே இங்கிலாந்து அணியே விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி சுமித், லியாம் லிவிங்ஸ்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், ஜோ ரூட், சாகிப் மக்மூத், பில் சால்ட், மார்க் உட்

    இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி சுமித், லியாம் லிவிங்ஸ்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சாகிப் மக்மூத், பில் சால்ட், மார்க் வுட்

    • இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பி.சி.சி.ஐ.யின் முதல் தேர்வாக காம்பீர் கிடையாது.
    • ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி நடக்க இருக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் காம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 9-ந் தேதி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட்டுக்கு பிறகு அவர் அந்த பொறுப்பை ஏற்றார்.

    காம்பீர் பயிற்சியாளர் பதவியை ஏற்ற பிறகு இந்திய அணி மோசமான நிலையை சந்தித்து வருகிறது. இலங்கையிடம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் தொடரை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது. தற்போது ஆஸ்திரேலியாவில் 5 போட்டிக் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    இதற்கிடையே இந்திய வீரர்கள் பேட்டிங் மோசமாக இருப்பதால் ஆஸ்திரேலிய பயணத்துக்கு புஜாரா வேண்டும் என்று காம்பீர் விருப்பம் தெரிவித்தார். அவரது வேண்டுகோளை தேர்வு குழுவினர் நிராகரித்து விட்டனர்.

    இந்த நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு காம்பீர் முதல் தேர்வாக இருந்தது கிடையாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) நிர்வாகி ஒருவர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பி.சி.சி.ஐ.யின் முதல் தேர்வாக காம்பீர் (முதல் தேர்வு வி.வி.எஸ்.லட்சுமண்) கிடை யாது. நன்கு அறியப்பட்ட வெளிநாட்டை சேர்ந்த சிலர் 3 வடிவிலான போட்டிகளிலும் பயிற்சியாளராக விரும்பவில்லை. இதனால் அவர் ஒரு சமரசம் செய்தார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் வேறு சில நிர்பந்தகளும் இருந்தன.

    ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி நடக்க இருக்கிறது. இதில் காம்பீரின் செயல் திறன் மேம்படவில்லையென்றால் அவரது பயிற்சியாளர் பதவிக்கு பாதுகாப்பு இல்லை.

    இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.

    இதற்கிடையே மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்கு பிறகு வீரர்கள் அறையில் காம்பீர் சத்தம் போட்டதாகவும், இதனால் அவருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அணியில் பிளவு இருப்பதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது.

    இதை காம்பீர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'வீரர்கள் அறையில் நடக்கும் விவாதங்கள் பொதுவெளியில் வரக்கூடாது. வீரர்களுடன் நேர்மையான உரையாடல்கள் நடைபெற்றது. கடுமையான வார்த்தைகள் என்ற தகவல் தவறானது' என்றார்.

    • ரோகித் டி20 உலகக் கோப்பையுடன் டி20 போட்டியில் ஓய்வை அறிவித்தார்.
    • தற்போது டெஸ்ட்டில் மோசமான பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப்பால் ரோகித், பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

    பாகிஸ்தானில் அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. இந்த தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்த உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. அதன்படி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும் துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி திட்டவட்டமாக கூறியுள்ளது.

    8 அணிகள் பங்கேற்கும் இதில் பங்கேற்கின்றனர். இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மாவை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்க பிசிசிஐ ஆலோசனை நடந்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரோகித் டி20 உலகக் கோப்பையுடன் டி20 போட்டியில் ஓய்வை அறிவித்தார். தற்போது டெஸ்ட்டில் மோசமான பேட்டிங் மற்றும் கேப்டஷிப்பால் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் விளையாடவே இல்லை.

    அவர் டெஸ்ட்டிலும் ஓய்வு அறிவிக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் பிசிசிஐ அடுத்த ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனை நியமிக்க ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இங்கிலாந்துடன் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி அடுத்த மாதம் பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடருக்கான அணிகளை ஜனவரி 12-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதனால் இந்திய அணியில் யார் இடம்பெறுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியால் புறக்கணிக்கப்படும் வீரரான சஞ்சு சாம்சனுக்கு இந்த முறையும் ஐசிசி தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒருநாள் வடிவத்தில் நடப்பதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்துடன் விளையாட உள்ளது. இதில் டி20 தொடரில் மட்டுமே சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகிய நிலையில், சாம்சன் தான் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் விளாசினார். அந்த வீடியோவை பதிவிட்டு சஞ்சு சாம்சனுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    • ஐசிசி-யிடம் நாளைக்குள் பட்டியலை வழங்க வேண்டும்.
    • ஐசிசியிடம் கால அவகாசம் கேட்டுள்ளது பிசிசிஐ.

    பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. பொதுவாக தொடர் தொடங்குவதற்கு 35 நாட்களுக்கு (அதாவது 5 வாரம்) முன் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்கள் பட்டியலை ஐசிசி-யிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி நாளைக்குள் வீரர்கள் பட்டியலை அளிக்க வேண்டும். பின்னர் தேவை என்றால் அதில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

    ஆனால் இந்திய அணி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீரர்களை பட்டியலை வெளியிட தயாராக இல்லை. இதனால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பிசிசிஐ ஐசிசி-யிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இந்தியா அணி அறிவிப்பு தாமதமாகலாம் எனத் தெரிகிறது.

    சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்தியா இங்கிலாந்து அணிக்கெதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அணியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இங்கிலாந்து அணியில் இடம் பெறும் பெரும்பாலான வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இதனால் இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் யார் யாரை அணியில் சேர்ப்பது என கலந்து ஆலோசித்து இன்னும் நாளைக்குள் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் அணி அறிவிக்கப்படலாம்.

    ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஜடேஜா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    ×