என் மலர்
நீங்கள் தேடியது "மல்லிகா சாகர்"
- 333 வீரர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 77 வீரர்கள் எடுக்கப்பட இருக்கிறார்கள்.
- ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக் தொடராக பிசிசிஐ-யின் ஐபிஎல் தொடர் பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.
2024 சீசனில் விளையாட தேவையான வீரர்களை எடுப்பதற்கான ஏலம் நாளை துபாயில் நடைபெற உள்ளது. இதில் 10 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப வீரர்களை ஏலம் எடுப்பார்கள்.
ஏலம் விடும் நபர் (தொகுப்பாளர்) இதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். தன்னுடைய அசாத்திய திறமையால் வீரர்களின் ஏலத்தை சில சமயம் அதிகரிக்கக் கூட செய்வர். கடந்த அண்டு ஹக் எட்மேட்ஸ் ஏலத்தை தொகுத்து வழங்கினார்.
ஆனால் இந்த முறை மல்லிகா சாகர் தொகுத்து வழங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கான பிரிமீயர் லீக் ஏலத்தையும் இவர்தான் தொகுத்து வழங்கினார். ப்ரோ கபடி லீக்கிற்கான ஏலத்தையும் இவர்தான் தொகுதி வஙழகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலத்தில் 333 பேர் வீரர்கள் பெயர் இடம் பிடித்துள்ளது. இதில் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட் நியூசிலாந்தின் ரச்சின் ஜடேஜா ஆகியோர் முக்கியமான வெளிநாட்டு வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
- பெண் ஏலதாரர் என்ற பெருமையை மல்லிகா சாகர் பெற்றுள்ளார்.
- மல்லிகா சாகர் விளையாட்டு துறையில் நன்கு அறியப்படுகிறார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தை முதல் முறையாக ஒரு இந்தியர் முழுநேரமாக நடத்த இருக்கிறார். மேலும் ஐ.பி.எல். ஏல வரலாற்றில் முதல் முறையாக பெண் ஏலதாரர் என்ற பெருமையை மல்லிகா சாகர் பெற்றிருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) ஏலத்திலும் மல்லிகா சாகர் ஏலதாரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 மற்றும் 2024 (டபிள்யூ.பி.எல்.) ஏலங்களில் ஏலதாரராக இருந்த மல்லிகா சாகர் விளையாட்டு துறையில் நன்கு அறியப்படுபவர் ஆவார்.

48 வயதான மல்லிகா சாகருக்கு ஏலம் விடும் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. கிரிக்கெட்டுக்கு முன்பு இவர் ப்ரோ கபடி லீக் ஏலங்களில் ஏலதாரராக இருந்துள்ளார். மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் கலை துறையிலும் அனுபவம் மிக்கவர் ஆவார்.
மும்பையில் உள்ள பண்டோல் கலை காட்சியகங்களில் பல்வேறு ஏலங்களில் இவர் ஏலதாரராக செயல்பட்டுள்ளார். உலக புகழ் பெற்ற கிரிஸ்டீஸ்-இல் ஏலதாரர் ஆன முதல் இந்தியர் என்ற பெருமையை மல்லிகா சாகர் தனது 26-வது வயதிலேயே பெற்றிருந்தார்.
- 2023 பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தை மல்லிகா சாகர் நடத்தினார்.
- 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தை மல்லிகா சாகர் நடத்தினார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் ஏலத்தை மல்லிகா சாகர் என்பவர் நடத்தி வருகிறார்.
மும்பையைச் சேர்ந்த கலை சேகரிப்பாளரான மல்லிகா சாகர், அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள பிரைன் மாவ்ர் கல்லூரியில் கலை வரலாறு பட்டப்படிப்பை படித்தார்.
2021 புரோ கபாடி லீக் வீரர்களின் ஏலத்திற்கான ஏல மேலாளராக மல்லிகா சாகர் பணியாற்றினார். பின்னர் 2023 பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தை மல்லிகா சாகர் நடத்தினார்.
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தை நடத்திய மல்லிகா, ஐபிஎல் மெகா ஏலத்தை தற்போது நடத்தி வருகிறார்.
இதற்கு முன்னதாக ரிச்சர்ட் மேட்லி மற்றும் ஹியூ எட்மீட்ஸ் போன்றவர்கள் ஏலத்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பட்லரை ஏலத்தில் எடுக்க குஜராத், லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது.
- இறுதியில் ஜாஸ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த ஏலத்தின் போது ஏலதாரர் மல்லிகா சாகர் சில தவறுகளை செய்துள்ளார். இது அணி உரிமையாளர்களை சற்று வேதனையடைய செய்துள்ளது.
அந்த வகையில் டெல்லி அணி ஏலத்தைக் கவனிக்காததால் உத்தரபிரதேச பேட்டர் ஸ்வஸ்திக் சிகாராவை ஆர்சிபிக்கு ஏலதாரர் விற்றார். உடனே டெல்லி நிர்வாகம் நாங்கள் துடுப்பை உயர்த்தினோம் என கூறினார். ஆனால் அதற்கு ஏற்கனவே ஆர்சிபி-க்கு விற்று விற்றதாக கூறி மன்னிப்பு கேட்டார். இதனால் டெல்லி அணி அதிருப்தி அடைந்தது.
இதனை தொடர்ந்து ஜாஸ் பட்லரை ஏலத்தில் விற்கும் போதும் சில தவறுகளை செய்ததால் குஜராத் அணிக்கு ரூ. 25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பட்லரை ஏலத்தில் எடுக்க குஜராத் - லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. இறுதியில் ரூ.15.50 கோடிக்கு குஜராத் ஏலம் எடுத்தது. அதை ஏலதாரர் ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுக்க விரும்புகிறீர்களா என லக்னோ அணியிடம் கேட்டார். உடனே லக்னோ மறுத்து விட்டது. இதனையடுத்து ஏலதாரர் ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணிக்கு விற்றது.
குஜராத் ரூ.15.50 கோடிக்கு கடைசியாக ஏலம் எடுத்தது. ஆனால் ஏலதாரர் ரூ.15.75 கோடிக்கு விற்றது. இதனால் அந்த அணி 25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏலதாரர் மல்லிகா சாகர் மீது இது குறித்து எதிர்ப்புகளை அணி நிர்வாகிகள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.