என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உணவு வினியோகம்"
- கோவையில் தயாரான ஒரு டன் உணவு பொருட்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர்களில் ஸ்ரீ வைகுண்டம் சென்றனர்.
- உணவு வினியோகம் மற்றும் மீட்பு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவுவதற்காக முப்படைகளும் களம் இறக்கப்பட்டு உள்ளன.
சூலூர் விமானப்படை தளம், மண்டபம், கொச்சி கடற்படை தளங்களில் இருந்து 6 ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கோவையில் தயாரான ஒரு டன் உணவு பொருட்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர்களில் ஸ்ரீ வைகுண்டம் சென்றனர்.
காலை 10.15 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் உணவு பொட்டலங்களை போட்டனர். அதில் பிஸ்கட், உலர் பழங்கள், பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள் இருந்தன.
மற்ற 5 ஹெலிகாப்டர்களும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீரில் சிக்கி உள்ளவர்களுக்கு உணவு பொட்டலங்களை வினியோகித்தது.
இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல பகுதிகளில் வினியோகிக்கப்படுகிறது.
விமானப்படை தரப்பில் கூறும்போது, உணவு வினியோகம் மற்றும் மீட்பு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் தெரி விக்கப்படும் இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் செயல்படுத்தப்படுகிறது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்