search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி காவல்துறை"

    • ஸ்வாதி மலிவாலின் இல்லத்துக்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரிகள் குழு அவரிடம் இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றனர்.
    • நாளை (ஏப்ரல் 17) காலை 11 மணிக்கு பிபவ் குமார் தேசிய மகளிர் ஆணையம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன் மீது தாக்குதல் நடத்தியதாக கெஜ்ரிவாலின் இல்லத்தில் இருந்து ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் போன் மூலம் டெல்லி போலீசிடம் கடந்த மே 13 அன்று காலை முறையிட்டார். ஆனால் கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு போலீஸ் விரைந்த போது அங்கு ஸ்வாதி மலிவால் காணப்படவில்லை. அவரின் குற்றச்சாட்டு குறித்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.

    ஸ்வாதி தாக்கப்பட்டது உண்மைதான் என ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் ராவத் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். மேலும் பிபவ் குமார் மீது கெஜ்ரிவால் கடும் நடவடிக்கை எடுப்பார் எனவும் உறுதியளித்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் இந்திய மகளிர் ஆணையம், உடனே விசாரணை  அறிக்கை சமர்ப்பிக்க டெல்லி காவல் துறையை வலியுறுத்தியிருந்தது.

    ஆனால் இதுவரை டெல்லி காவத்துறைக்கு இந்த சம்பவம் குறித்த எழுத்துபூர்வமான புகார் அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று (மே 16) ஸ்வாதி மலிவாலின் இல்லத்துக்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரிகள் குழு அவரிடம் இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றனர். சுமார் 4 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின் பேசிய அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டின் மீது விரைவில் எப்ஐஆர் பதியப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

     

    இதனிடையே நாளை (ஏப்ரல் 17) காலை 11 மணிக்கு பிபவ் குமார் தேசிய மகளிர் ஆணையம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது  

    • தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உடனடியான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறையை வலியுறுத்தியிருந்தது.
    • இந்த விவகாரத்தில் ஸ்வாதி மலிவாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி காட்சியைச் சேர்ந்த மாநிலங்களைவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் கடந்த மே 13 ஆம் தேதி காலை டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தொடக்கத்தில் மௌனம் காத்துவந்த ஆம் ஆத்மி கட்சி பின்னர் ஸ்வாதி தாக்கப்பட்டது உணமைதான் எனவும், இந்த விவகாரத்தில் குறித்து கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளித்திருந்தது. .மேலும் பிபவ் குமார் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே டெல்லி பாஜகவினர் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உடனடியான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறையை வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் நாளை (மே 17) வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

     

    மேலும் பிபவ் குமார் ஆஜராக தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்வாதி மலிவாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.  

    • டிசம்பர் 13 சம்பவம் பெரும் பாதுகாப்பு குறைபாடாக விமர்சிக்கப்பட்டு வருகிறது
    • தேச பாதுகாப்பிற்கான பல முக்கிய அலுவல் கட்டிடங்களை சிஐஎஸ்எஃப் காத்து வருகிறது

    கடந்த டிசம்பர் 13 அன்று மக்களவைக்கு உள்ளே இருவர், பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவை மையப்பகுதியில் குதித்து, கோஷங்களை எழுப்பியவாறு, தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த வர்ண புகை எழுப்பும் குப்பிகளை வீசி வெடிக்க செய்தனர்.

    அவைக்கு வெளியேயும் இருவர் (1 ஆண், 1 பெண்) இதே போன்று கோஷங்களை எழுப்பி, புகை குப்பிகளை வீசினர்.

    நால்வரையும் கைது செய்த டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

    மத்திய அரசிற்கு பெரும் தலைக்குனிவாகவும், பெரும் பாதுகாப்பு குறைபாடாகவும் கருதப்பட்ட இந்த சம்பவம் அரசியல் கட்சி தலைவர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

    மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து விசாரித்து வந்த நிலையில், பாராளுமன்றத்தின் ஒட்டு மொத்த பாதுகாப்பு பொறுப்பை இனி டெல்லி காவல்துறையிடமிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் சிஐஎஸ்எஃப் பல மத்திய அரசாங்கங்களின் அலுவலகங்கள், அணு சக்தி மைய வளாகங்கள், விண்வெளி தளங்கள், சிவில் விமான தளங்கள், டெல்லி மெட்ரோ உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

    தற்போது உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பாராளுமன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஒரு ஆய்வை சிஐஎஸ்எஃப் நடத்தி வருகிறது.

    விரைவில் முழு பாதுகாப்பு பொறுப்பும் சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இதன் பாதுகாப்பு வளையத்தில் புதிய மற்றும் பழைய பாராளுமன்ற கட்டிங்களின் மொத்த இடங்களும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது குறித்த இறுதி முடிவு வரும் நாட்களில் எடுக்கப்படும்.

    ×