என் மலர்
நீங்கள் தேடியது "2023 ரீவைண்ட்"
- சாம்சங் நிறுவனம் குறிப்பிடத்தக்க மாடல்களை அறிமுகம் செய்தது.
- ஒப்போ ஃபைண்ட் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.
ஒவ்வொரு ஆண்டை போலவே, இந்த ஆண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான மாடல்கள் அறிமுகமாகின. முன்னணி நிறுவனங்கள் துவங்கி புதிதாக களமிறங்கிய நிறுவனங்கள் வரை வாடிக்கையாளர்களை எந்த மாடலை வாங்குவது என்று குழம்ப செய்தன. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த மாடல்கள் ஒருபுறம் கவனம் ஈர்த்தன.
மறுப்பக்கம் யாரும் எதிர்பாராமல் அறிமுகமாகி பிறகு, நல்ல வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்களும் சந்தையில் கணிசமான விற்பனையை பதிவு செய்தன. அந்த வரிசையில், 2023 ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

ஐகூ 11 5ஜி:
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி மாதத்திலேயே அறிமுகமான ஐகூ 11 5ஜி பிரீமியம் டிசைன், அசத்தலான டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது ஐகூ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி:
2023 பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகமான கேலக்ஸி S3 அல்ட்ரா 5ஜி மாடல் அசத்தலான அம்சங்கள், சிறப்பான கேமரா சென்சார்கள் மற்றும் அதிரடியான பிராசஸர் கொண்டிருக்கிறது. இது சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

ஒன்பிளஸ் 11:
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சந்தையில் அப்போது அறிமுகமானதில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக இருந்தது. மெட்டல் மற்றும் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விவோ X90 ப்ரோ:
பிரீமியம் டிசைன், அழகிய டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா உள்ளிட்டவை விவோ X90 ப்ரோ மாடலின் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்:
ஆப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல் இது ஆகும். முற்றிலும் புதிய டைட்டானியம் டிசைன், சக்திவாய்ந்த பிராசஸர், தலைசிறந்த கேமரா சென்சார்கள் உள்ளிட்டவை ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 5, ஒன்பிளஸ் ஓபன் மாடல்கள் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றன. ஃப்ளிப் போன் பிரிவில் ஒப்போ ஃபைண்ட் N3 அதன் அம்சங்கள், டிசைன் மற்றும் விலை என அனைத்து பிரிவுகளிலும் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது.
- செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
- அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றி தெரியவந்துள்ளது.
உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வதில் அதிவேகமாக முடிவெடுக்கின்றனர். செயலிகள் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை பொருத்தும், பயனர் தேவைகளை எந்த அளவுக்கு பூர்த்தி செய்கிறது என்பதை பொருத்தும் செயலி ஸ்மார்ட்போனில் வைத்துக் கொள்ளப்படும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பயனர்கள் எந்த அளவுக்கு செயலிகளை இன்ஸ்டால் மற்றும் அன்-இன்ஸ்டால் செய்கின்றனர் என்ற வழக்கம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையின் படி, உலகளவில் 480 கோடி பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இது சர்வதேச மக்கள் தொகையில் 59.9 சதவீதமும், ஒட்டுமொத்த இண்டர்நெட் பயனர்கள் எண்ணிக்கையில் 92.7 சதவீதம் ஆகும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் ஒவ்வொரு மாதமும் 6.7 வெவ்வேறு நெட்வொர்க்குகளை பயன்படுத்துகின்றனர். தினமும், 2 மணி 24 நிமிடங்கள் வரை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர்.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் "இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும்" என்று தொடர்ச்சியாக இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

உலகளவில் ஒரு லட்சம் பேரில் 12 ஆயிரத்து 500 பேர் வரை இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது தொடர்பான இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதள உலகில் முன்னணி தளமாக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து நீடிக்கிறது. உலகளவில் சுமார் 240 கோடி பேர் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமை தொடர்ந்து ஸ்னாப்சாட் தளத்தை பயன்படுத்துவோரில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்களது ஸ்னாப்சாட் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும் என்று இணையத்தில் தேடியுள்ளனர். இது இன்ஸ்டாகிராமுடன் ஒப்பிடும் போது குறைவு ஆகும்.
- இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் பல்வேறு புது மாடல்கள் அறிமுகமாகின.
- முன்னணி நிறுவனங்கள் குறைந்த விலை மாடலை அறிமுகம் செய்தன.
2023 ஆண்டு இந்திய சந்தையில் இருசக்கர வாகன பிரியர்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைந்தது. பழைய பிராண்டுகளில் துவங்கி பிரீமியம் பிராண்டுகள் வரை சிங்கில் சிலிண்டர் மற்றும் டுவின் சிலிண்டர் என்ஜின் கொண்ட வாகனங்கள் பிரிவில் களமிறங்கின.
வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வழக்கமான பாணியை தவிர்த்து, வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன. குறைந்த விலை மாடல்கள் மட்டுமின்றி பிரீமியம் மற்றும் ஃபிளாக்ஷிப் பிரிவில் இருசக்கர வாகன சந்தை, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கணிசமான வளர்ச்சியை பதிவு செய்தன.
அந்த வகையில், இந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில் டாப் மோட்டார்சைக்கிள் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்..

ராயல் என்பீல்டு ஹிமாலயன்:
புதிய தலைமுறை ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்கிறது. இந்த மாடல் முற்றிலும் புதிய ஷெர்பா 450 என்ஜின் கொண்டிருக்கிறது. ராயல் என்பீல்டு உருவாக்கியதிலேயே அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மாடலாக புதிய ஹிமாலயன் அமைந்தது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

டிரையம்ப் 400 சீரிஸ்:
டிரையம்ப் நிறுவனத்தின் 400 டுவின்ஸ் மாடல்களை பஜாஜ் ஆட்டோ உற்பத்தி செய்தது. இந்த மாடல்களில் 400சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 23 ஆயிரம் என்று துவங்குகிறது.

கே.டி.எம். 390 டியூக்:
புதிய தலைமுறை கே.டி.எம். 390 டியூக் மாடல் அதிகளவு மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மேம்பட்ட என்ஜின், ரைடர் எலெக்டிரானிக்ஸ், முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. இதன் விலை ரூ. 3 லட்சத்து 11 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஹார்லி டேவிட்சன் X440:
ஹார்லி டேவிட்சன் இதுவரை உருவாக்கியதிலேயே சிறிய மாடல் இது ஆகும். பட்ஜெட் அடிப்படையிலும் இந்த மாடல் ஹார்லியின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் 440 சிசி சிங்கில் சிலிண்டர் ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டி.வி.எஸ். அபாச்சி RTR 310:
டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிளாக அபாச்சி RTR 310 அறிமுகம் செய்யப்பட்டது. நேக்கட் ஸ்டிரீட்ஃபைட்டர் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் அபாச்சி RTR 310 மாடலில் 312 சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
- ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி 25 முறை 200 ரன்னுக்கு எடுத்தது.
ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த தொடரில் கொல்கத்தா அணி வீரரான ரிங்கு சிங் இந்த தொடரில் தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இந்த தொடரின் லீக் ஆட்டம் ஒன்றில் குஜராத் - கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியின் கடைசி ஓவரில் கொல்கத்தா அணிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.

அந்த போட்டியில் இருந்து ரிங்கு சிங் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோல கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்தார்.

இந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் பெங்களூர் அணிக்கு எதிராக காயமடைந்தார். பீல்டிங்கின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் ராகுல் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த சீசனின் இறுதி ஆட்டத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த சீசனில் ரோகித் சர்மா மோசமான சாதனையை படைத்தார். ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரரானார். அவர் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

டக் அவுட்டில் மோசமான சாதனை படைத்தாலும் சிக்சர் மூலம் மிரட்டலான சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏ.பி.டிவில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா 2-வது இடம் பிடித்துள்ளார். ரோகித் 252 சிக்சருடன் 2-வது இடம் பிடித்துள்ளார். அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 141 போட்டியில் 357 சிக்சருடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஐ.பி.எல். தொடரில் 7,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். 233 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 46 அரைசதங்களுடன் மொத்தம் 7,036 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அவர் தனது ஏழாவது சதத்தை பதிவு செய்தார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் ஏழு சதங்கள் அடித்தது கிடையாது.
மேலும் 236 ஆட்டங்களில் ஆடிய டோனி 5004 ரன்கள் குவித்துள்ளார். இந்த மைல்கல்லை கடந்த 7-வது வீரர் டோனி ஆவார். ஏற்கனவே விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, டிவில்லியர்ஸ் ஆகியோர் ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.

இந்த சீசனில் லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் விராட் கோலி, நவீன் உல் ஹக், கம்பீர் ஆகியோர் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவத்தை யாரும் மருந்து விட முடியாது. இந்த மோதலினால் கோலி- கம்பீர் ஆகியோருக்கு 100% அபராதம் விதிக்கப்பட்டது.

ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி 25 முறை 200 ரன்னுக்கு எடுத்தது. அதிக முறை 200-க்கு மேல் எடுத்த அணி சென்னை தான். இந்த வகையில் 2-வது இடத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் (24 முறை), 3-வது இடத்தில் பஞ்சாப் கிங்சும் (17 முறை) உள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்தது. சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13 கோடி கிடைத்தது. 3-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 4-வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு முறையாக ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

இந்த தொடர் முழுவதிலும் சென்னை அணி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அங்கு சென்னை அணிக்கே அதிகமான ஆதரவு கிடைத்தது. ஏனென்றால் இந்த தொடருடன் டோனி கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக வதந்தி பரவியது. இதனால் அவரை கடைசி போட்டியில் பார்த்து விட வேண்டுமென்றே அனைவரும் சென்றதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த சீசனில் இறுதிப்போட்டி நடக்கும் மைதானத்தில் ராட்சத திரையில் 'ரன்னர் அப் சென்னை சூப்பர் கிங்ஸ்' என்று எழுதியிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் சொல்லி வைத்து ஆடுவது போல என்று நினைக்கும் ரசிகர்களுக்கு, உண்மையிலேயே அப்படிதான் நடக்கிறதோ என்பது போல இருந்தது இந்த புகைப்படம்.

போட்டி டாஸ் கூட போடாத நிலையில் ராட்சத திரையில் இப்படி வந்தது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் திரை சோதனை, வழக்கமான பயிற்சியாக இருந்திருக்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறினர்.
- ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
- பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.
துருக்கியில் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி அன்று அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின.

இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியாவிலும் எதிரொலித்தது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.
இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அந்த இருநாடுகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின. அதன்படி இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் இரு நாடுகளையும் சேர்ந்த மீட்பு குழுக்களுடன் இணைந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இதன்பலனாக நிலநடுக்கம் ஏற்பட்ட பல நாட்களுக்கு பிறகும் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஏராளமானோர் மீட்கப்பட்டனர்.
நிலநடுக்கத்தால், சுமார் 14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 60,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2023-ம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில், அதி பயங்கர சம்பவமாக துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கருதப்படுகிறது.
- ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை மீது கால் வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுவதாக தெலுங்கு நடிகை தெரிவித்தார்.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரில் விளையாடியதன் மூலம் இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பிரதமர் மோடி உள்பட விளையாட்டு பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் கண்டு களித்தனர். உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னர் சச்சின் 2011 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசளித்தார்.

2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அது என்னவென்றால் உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுவதாக அவர் தெரிவித்தார். சில குறும்புக்கார ரசிகர்கள் 'விசாகப்பட்டினத்தில் 19-ந்தேதி சந்திப்போம்' என்றெல்லாம் 'கமெண்ட்' செய்தனர்.

ஏற்கனவே 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபட்டது.

ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை ஐசிசி சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை வென்று அபார சாதனை படைத்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:
1987, 1999, 2003, 2007, 2015 என ஆஸ்திரேலியா அணி 5 முறை ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்று சாதித்துள்ளது.2006 மற்றும் 2009ம் ஆண்டில் சாம்பியன் டிராபி கோப்பையையும் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
ஒரு உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக அதிக ரன் திரட்டிய கேன் வில்லியம்சனின் (2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 10 ஆட்டத்தில் 578 ரன்) சாதனையை ரோகித் தகர்த்தார். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்சர் அடித்த கிறிஸ் கெய்ல் (85) சாதனையை ரோகித் (86) முறியடித்தார்.

இந்திய வீரர் விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் 3 சதம், 6 அரைசதம் உள்பட 765 ரன்கள் எடுத்து, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்து விட்டார். இதில் கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 50 ரன்னுக்கு மேல் எடுத்ததும் அடங்கும். உலகக் கோப்பையில் 2-வது தடவையாக அவர் தொடர்ந்து 5 ஆட்டங்களில் 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார்.
உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை மீது கால் வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் ரூ.33 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. ரன்னர் அப் அணிக்கு சுமார் ரூ.16 கோடி பரிசும், அரையிறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசும் அறிவிக்கப்பட்டது. மேலும், குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.82 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.
- விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்- அமைச்சர் தென்னரசு
- இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது- அமைச்சர் கணேசன்
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் (ஏப்ரல் 23-ந்தேதி) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்த போதிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், "வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்; இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.
இருந்தாலும் திமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இந்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து மசோதா நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
- நகர பகுதிகளில் நடந்து 1700 கி.மீ. தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனையை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் நோக்கில் "என் மண் என் மக்கள்" என்ற நடைபயணத்தை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை மாதம் 18-ந்தேதி தொடங்கினார். ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

நகர பகுதிகளில் நடந்து 1700 கி.மீ. தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்தார். 5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், வருகிற ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது.
நான்கு கட்ட பாத யாத்திரை முடிவடைந்த நிலையில் ஐந்தாம் கட்டம் மற்றும் கடைசி கட்ட யாத்திரையை டிசம்பர் 16-ந்தேதி தொடங்கியுள்ளார். அடுத்த மாதம் 10-ந்தேதி யாத்திரையை நிறைவு செய்கிறார்.
- புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 28-ம் தேதி திறந்துவைத்தார்.
- மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28-ம் தேதி திறந்து வைத்தார். அங்கு மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட்டது. நாடு விடுதலை பெற்றபோது ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன் என எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. மேலும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவைப் புறக்கணித்தன.
- ஜூன் 13-ந்தேதி பலமணி நேரம் விசாரணைக்குப்பின் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
- ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ஜூன் 13-ந்தேதி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை சோதனை நடைபெற்ற நிலையில், விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்படுவதாக தெரிவித்தார். இதனால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் காவேரி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்ததும் ஜூன் 21-ந்தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிட்டார்.
என்னுடைய பரிந்துரை இல்லாமல் அமைச்சரை சேர்க்கவே, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அறிவித்தார்.
அறுவை சிகிச்சை முடிந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்ட பிறகு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்து, நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.
செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டடு. ஆனால் மூன்று நீதிமன்றங்களும் ஜாமின் வழங்க மறுத்திவிட்டன. இதனால் தொடர்ந்து புழல் ஜெயலில் இருந்து வருகிறார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இரண்டு முறை உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் ஜெயலில் அடைக்கப்பட்டார்.
- ஜி20 மாநாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்தியது.
- இதில் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடுகள் பலவும் கலந்துகொண்டன.
ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்பட மிக முக்கியமான 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜி-20 அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் உச்சி மாநாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது.

இந்த மாநாட்டுக்காக டெல்லி மாநகரம் சொர்க்கலோகம்போல அலங்கரிக்கப்பட்டு மாற்றப்பட்டது. ஜி20 மாநாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செப்டம்பரில் நடத்தியது. ஜி20 கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
- டிசம்பர் 13ல் பாராளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவம் பெரும் சர்ச்சையானது.
- வண்ண புகை குண்டுகளை வீசி அவையில் இருந்த உறுப்பினர்களை கலக்கத்தில் ஆழ்த்தினர்.
பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான டிசம்பர் 13-ம் தேதி பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 இளைஞர்கள் வண்ண புகை குண்டுகளை வீசி அவையில் இருந்த உறுப்பினர்களை கலக்கத்தில் ஆழ்த்தினர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

புதிய பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து வரலாறு காணாத அளவிற்கு 140க்கும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.