என் மலர்
நீங்கள் தேடியது "அனஸ்வரா ராஜன்"
- மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் "திரிஷ்யம்" பெரும் வெற்றி பெற்றது
- விஜயமோகன் எனும் வக்கீல் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார்
கடந்த டிசம்பர் 21 அன்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் கதாநாயகனாக நடித்த "நெரு" திரைப்படம் உலகெங்கும் வெளியானது.
2013ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வெளியாகி, வசூலில் சக்கை போடு போட்ட "திரிஷ்யம்" திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், நெரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்திலும் பெரும் வெற்றி பெற்றதும், 2021ல் இதே கூட்டணியில் "திரிஷ்யம் 2" வெளியாகி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 2 வருடங்கள் கடந்து ஜீத்து ஜோசப்-மோகன்லால் இணைந்துள்ளதால், நெரு திரைப்படத்திற்கு மோகன்லால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்கும் ஆவலில் உலகெங்கும் திரைப்பட ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை போல் நெரு திரைப்படமும் நேர்மறை விமர்சனங்களுடன் வசூலை குவித்து வருகிறது.
இதுவரை உலகெங்கும் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கதை சுருக்கம்:
சாரா (அனஸ்வரா ராஜன்) எனும் இளம் பெண், பார்வை குறைபாடு உள்ள மாற்று திறனாளி. அவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறார். சிற்பக்கலை நிபுணரான சாரா, குற்றவாளியின் வடிவத்தை களி மண்ணில் செய்து தர, அதை வைத்து காவல்துறை, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. ஆனால், குற்றவாளி ஜாமீனில் வெளி வந்து விடுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக விஜயமோகன் (மோகன்லால்) எனும் வக்கீல் ஆஜராகி வழக்கை சிறப்பாக வாதாடி நீதியை நிலைநாட்டுகிறார்.
விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகாசித்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- . திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ஆசிஃப் அலி நடிப்பில் தின்சித் அய்யதன் இயக்கத்தில் வெளியானது மலையாள திரைப்படமான கிஷ்கிந்தா காண்டம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் ஓடிடி-யில் வெளியான பிறகு உலகம் முழுவது உள்ள மக்கள் இப்படத்தை பாராட்டினர். திரைப்படம் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து ஆசிஃப் அலி மற்றும் அமலா பால் நடிப்பில் ஓடிடியில் லெவல் கிராஸ் திரைப்படம் வெளியானது. இப்படமும் பலரின் பாராட்டை பெற்றது. இந்நிலையில் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து வரும் ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மம்மூட்டி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்த தி பிரீஸ்ட் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
அனஸ்வர ராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ்,சரின் ஷிஹாப், பாமா அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை நடிகர் மம்மூட்டி இன்று வெளியிட்டார். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
- திரிஷா நடித்த ‘ராங்கி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் '7ஜி ரெயின்போ காலனி' வெற்றி பெற்றதை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர்.
இதையடுத்து, ஆங்கில புத்தாண்டையொட்டி '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார். இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதல் பாகத்தை தயாரித்த ஸ்ரீ சூர்யா மூவிஸ் தான் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில், '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன். இவர் திரிஷா நடித்த 'ராங்கி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகியாக அனஸ்வரா ராஜன் வலம் வருகிறார். 2015-ம் ஆண்டு குறும்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் 2017-ம் ஆண்டு வெள்ளித்திரையிலும் 2019-ம் ஆண்டு வெளியான 'தண்ணீர் மத்தன் தினங்கள்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு திரிஷா நடிப்பில் வெளியான 'ராங்கி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 2023-ம் ஆண்டு வெளியான 'யாரியான் 2' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். 14 படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள அனஸ்வரா ராஜன் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவ்வேற்பை பெற்று வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஆசிஃப் அலி நடிப்பில் தின்சித் அய்யதன் இயக்கத்தில் வெளியானது மலையாள திரைப்படமான கிஷ்கிந்தா காண்டம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவ்வேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தில் மமூட்டி சிறப்பு தோற்றம் அளித்துள்ளது கூடுதல் சிறப்பாகும். இந்நிலையில் திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் 10.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்பட காட்சிகள் பல இடத்தில் அதிகரித்துள்ளது.
இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மம்மூட்டி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்த தி பிரீஸ்ட் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
அனஸ்வர ராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ்,சரின் ஷிஹாப், பாமா அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்
- ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஆசிஃப் அலி நடிப்பில் தின்சித் அய்யதன் இயக்கத்தில் வெளியானது மலையாள திரைப்படமான கிஷ்கிந்தா காண்டம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகாசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவ்வேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தில் மமூட்டி சிறப்பு தோற்றம் அளித்துள்ளது கூடுதல் சிறப்பாகும். திரைப்படம் இதுவரை உலகளவில் 36 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். அனஸ்வர ராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ்,சரின் ஷிஹாப், பாமா அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷ் படக்குழுவை பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது "ரேகாசித்திரம் திரைப்படத்தை பார்த்தேன். நான் இப்படத்தை பற்றி எழுத நீண்டநாள் காத்துக் கொண்டிருக்கிறேன். இப்படத்தை பார்த்தப்பின் அதில் இருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை. இப்படத்தில் மிகச்சிறந்த திரைக்கதையும் எழுத்தும் இருக்க்கிறது. அனஸ்வரா டார்லிங். உங்களுடைய திரைப்படங்களை எல்லாம் நான் பார்த்து வருகிறேன், இப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
ஆசிபீ உங்களுடைய எதார்த்தமான நடிப்பு அபாரமாகவுள்ளது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதாப்பாத்திரங்கள். நீங்கள் நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் மிக திறமையாக நடிக்கிறீர்கள்.. படக்குழு அனைவருக்கும் எனது பாராட்டுகள்" என குறிப்பிட்டிருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகாசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படத்தில் மமூட்டி சிறப்பு தோற்றம் அளித்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.
ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகாசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தில் மமூட்டி சிறப்பு தோற்றம் அளித்துள்ளது கூடுதல் சிறப்பாகும். திரைப்படம் இதுவரை உலகளவில் 75கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். அனஸ்வர ராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மனோஜ் கே ஜெயன், இந்திரன்ஸ்,சரின் ஷிஹாப், பாமா அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷமீர் முகமத் படத்தொகுப்பை மெற்கொள்ள முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படமே 2025 ஆம் ஆண்டில் வெளியான மலையாளம் திரைப்படங்களில் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது ஆகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.