search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாய்லர் வெடித்து விபத்து"

    • தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் பிரிவில் ஆந்திராவை சேர்ந்த 9 தொழிலாளர்களும், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என மொத்தம் 20 பேர் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
    • 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீதமுள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், ஜக்கையா பேட்டையில் தனியார் சிமெண்டு தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் பிரிவில் ஆந்திராவை சேர்ந்த 9 தொழிலாளர்களும், பீகார்,உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என மொத்தம் 20 பேர் நேற்று வேலை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது கொதிகலனுக்கு கியாஸ் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் காரணமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு கொதிகலன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களை தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவுலா வெங்கடேஷ், பரிதலா அர்ஜுன் ஆகியோர் உயிரிழந்தனர்.

    3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீதமுள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • விபத்து காரணமாக தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திராவில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலையில் எப்போதும்போல் இன்றும் வழக்கம் போல் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தொழிற்சாலையில் உள்ள பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் காயமடைந்த இருபது பேரையும் மீட்டு விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து காரணமாக தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ப்ரீ ஹீட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்து போலீசார் விசாரணை.
    • பாதுகாப்பை உறுதி செய்யப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு.

    சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்று எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் பெருமாள் வயது (52) கரிமேடு பகுதியை சேர்ந்தவர்.

    இச்சம்பவம் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

    மேலும், பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    • பெருமாளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்ற ஊழியர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னை தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் பெருமாள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பெருமாளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்ற ஊழியர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்குவதோடு, இது போன்ற ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    ×