என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கப்பற்படை அதிகாரிகள்"

    • 8 பேரின் குடும்பத்தினர் பிரதமர், உள்துறை அமைச்சர் தலையீட்டை கோரினர்
    • புதிய தண்டனையின் விவரம் குறித்து இரு அரசுகளும் தகவல் தெரிவிக்கவில்லை

    அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் (Qatar) அல் தஹ்ரா (Al Dahra) எனும் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற சென்ற இந்திய கப்பற்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் 8 பேர் அந்நாட்டில் பணியாற்றி கொண்டே இஸ்ரேல் நாட்டிற்கு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கத்தார் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    அதிகாரிகளின் குடும்பத்தினரும், உறவினரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி கடிதங்கள் எழுதினர்.

    இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி குற்றம் சாட்டப்பட்ட 8 பேரின் குடும்பத்தினர் இந்திய அரசிடம் கண்ணீர் மல்க பலமுறை கோரிக்கை வைத்தனர். அவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பலர் இத்தீர்ப்பை கத்தார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதற்கு இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர்.

    இம்மாத தொடக்கத்தில் கத்தாருக்கான இந்திய தூதர் சிறையில் அடைக்கப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.

    கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது தூதரும், அதிகாரிகளின் குடும்பத்தினரும் நேரில் அங்கு சென்றிருந்தனர்.

    இந்நிலையில் இன்று, கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்திருப்பதாகவும், குறைந்த தண்டனையே வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

    புதிய தண்டனையின் விவரம் குறித்து இதுவரை இரு நாட்டு அரசாங்கங்களும் தெரிவிக்கவில்லை.

    • ஹிஸ்புல்லாவின் நாசர் பிரிகேட் ராக்கெட் பிரிவின் உயர் தளபதி ஜாபர் காதர் பவுர் கொல்லப்பட்டார்
    • பெட்ரோன் பகுதிக்குள் இஸ்ரேல் கடற்படையின் சிறப்பு கமாண்டோக்கள் தடாலடியாக நுழைந்தனர்

    பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 43 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தியும் ஹமாஸ் அமைப்பை அழிக்க முடியமால் இஸ்ரேல் திணறி வருகிறது.

    இதற்கிடையே லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸுக்கு ஆதராவாக செயல்படும் ஹிஸ்புல்லாவை குறிவைக்கும் இஸ்ரேல் அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது. தொடர்ந்து அடுத்த தலைவராக அறியப்பட்ட ஹாசன் ஷபிதைனி கொல்லப்பட்டார்.

    எனவே தற்போது நைம் காசிம் ஹிஸ்புல்லா தலைவராகத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்திக்கொண்டால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று அவர் தெரிவித்தார். ஆனால் அமைதி பேச்சுவார்த்தையை விரும்பாத இஸ்ரேல் ஈரான் உடனும் வம்பிழுத்து வருகிறது.

    அந்நாட்டின் அணு ஆயுத தளங்களை தாக்கப்போவதாக இஸ்ரேல் மிரட்டி வருகிறது. இந்நிலையில் லெபனானின் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தளபதி உயிரிழந்துள்ளார்.

    தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் நாசர் பிரிகேட் ராக்கெட் பிரிவின் உயர் தளபதி ஜாபர் காதர் பவுர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான பல தாக்குதலுக்கு அவர் மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேலில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லெபனானின் கடற்கரை நகரமான பெட்ரோன் பகுதிக்குள் இஸ்ரேல் கடற்படையின் சிறப்பு கமாண்டோக்கள் தடாலடியாக நுழைந்தனர். அவர்கள் கடற்கரை அருகே உள்ள வீட்டில் பதுங்கி இருந்த ஹிஸ்புல்லா கடற்படை தளபதி இமாத் ஹமீசை கைது செய்தனர். இவர் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த உறுப்பினராகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    ×