என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்.ஏ.20"
- தென் ஆப்பிரிக்காவில் ‘எஸ்.ஏ.20’ கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது.
- 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.
கெபேஹா:
தென்ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஈஸ்டன் கேப், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், எம்.ஐ. கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
கெபேஹாவில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஈஸ்டன் கேப் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- எஸ்.ஏ.20 இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப்டவுனும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மொத்தமுள்ளது.
- ஒரு கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறக்க நேரிடுகிறது.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து, நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று 2 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப்டவுன் அணியும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மொத்தமுள்ளது. கடந்த 2 டி20 லீக் தொடரிலும் வேற்று கோப்பையை கைப்பற்றிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஹாட் ட்ரிக் முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில், எஸ்.ஏ.20 அரையிறுதிக்கும் இறுதிப்போட்டிக்கும் இடையே இருந்த இடைவெளியில் என்ன செய்தீர்கள் என்று எம்.ஐ.கேப்டவுன் அணி கேப்டன் ரஷித் கானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "நான் தற்போது PRISON BREAK என்ற இணைய தொடரை பார்த்து வருகிறேன். சவாலான சூழல்களில் இருந்து எப்படி மீண்டு வருவது என அதிலிருந்து கற்று வருகிறேன். ஒரு கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறக்க நேரிடுகிறது. அதனால், தோன்றும் விஷயங்களை கையில் எழுதி வைத்து அடுத்தடுத்த ஓவர்களில் பயன்படுத்துவேன்" என்று தெரிவித்தார்.