என் மலர்
நீங்கள் தேடியது "திமுக மாணவரணி"
- தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி மாணவர்கள் நடத்தும் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
- போராட்டத்தில் மாணவர்கள் திரளாக பங்கேற்குமாறு தி.மு.க. மாணவரணி வேண்டுகோள் விடுத்து உள்ளது.
சென்னை:
காங்கிரஸ்-தி.மு.க. உள்ளிட்ட 26 கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக போட்டியிட வியூகம் வகுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட 16 மாணவர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து யுனைடெட் இந்திய மாணவர் அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பில் தி.மு.க. மாணவரணி இணைந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி மாணவர்கள் நடத்தும் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
இதில் மாணவர்கள் திரளாக பங்கேற்குமாறு தி.மு.க. மாணவரணி வேண்டுகோள் விடுத்து உள்ளது.
- துணை வேந்தர் ஜெகநாதனை ஆளுநர் சந்திப்பதற்கு திமுக மாணவரணியினர் கடும் கண்டனம்
- திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் அறிவித்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி, கூட்டுச்சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஜெகநாதனுக்கு உடந்தையாக இருந்ததாக துணைவேந்தரின் தனிச் செயலாளர், பொறுப்பு பதிவாளர், கண்காணிப்பாளர் உட்பட 5 பேரிடமும் சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில், முறைகேடு புகாரில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதனை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளார். சேலம் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள விழாவில் பங்கேற்கச் செல்லும் ஆளுநர் ரவி, ஜெகநாதனை சந்திக்க உள்ளதற்கு திமுக மாணவரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநரை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் அறிவித்துள்ளார்.
மேலும், ஆளுநரை கண்டித்து நாளை சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்
- பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மே 5-ந்தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. ஜூன் 14-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியானது.
வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்ததும் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திமுக மாணவரணி சார்பில் 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.
திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் திமுக மாணவரணி சார்பில் கூறப்பட்டுள்ளது.
- ஜூலை 3-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி உள்ளது.
சென்னை:
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 3-ந்தேதி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஜூலை 3-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீட் என்பது பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சமூக நீதிக்கு எதிரான தேர்வு முறை. நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி உள்ளது.
நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும்.
- சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு மதியம் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
சென்னை:
திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை தொலைக்காட்சியின் பொன் விழாவோடு இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு மதியம் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சரே முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.
- டி.ஆர்.பாலு தலைமையில் இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கக்கூடிய போராட்டமாக இது இருக்கும்.
யுஜிசி விதிகளுக்கு எதிராக டெல்லியில் நாளை திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பார் என திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எழிலரசன் செய்தியாள்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து மாநில உரிமைகளை பறிப்பதிலும், குறிப்பாக காவிமயமாக்குவதற்காக கல்வியை ஒட்டுமொத்தமாக அவர்கள் கட்டுப்பாட்டை கொண்டு செல்கிற முயற்சிகளில், தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கின்ற நடவடிக்கைகளில் ஒன்றாக தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ கொண்டு வந்தார்கள்.
அந்த அறிக்கையில் வழங்கப்பட்டதை போல இனி யுஜிசி என்று ஒன்று இருக்காது. இன்று யுஜிசி மூலம் கல்வியை மொத்தமாக அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்கலைக்கழக நிதி நெல்கைக் குழு என்பதனை இன்றைக்கு பல்கலைக்கழகங்களை விழுகுகின்ற குழுவாக மாறுகின்ற வகையில் மாநில உரிமைகளை பறிப்பதற்கும், கல்வி உரிமையை பறிப்பதற்கும், சமூக நீதிக்கு எதிராகவும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகவும், பல வரைவு நெறிவு முறைகளை வெளியிட்டிருக்கிறது.
அதை எப்போதும் போல பிற மாநிலங்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும் அதனை விரைவாக எதிர்க்கக்கூடிய மாநிலமாக சமூக நீதியின் மண்ணாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் கண்டித்தும் அதை நிறைவேற்றக் கூடாது என்றும், தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை அவரே முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இதைதொடர்ந்து திமுக மாணவர் அணியும், பிற மாநில அமைப்புகளின் மாணவர் அணியும் கூட்டமைப்பை கொண்டு ஒரு மாபெரும் போராட்டம் சென்னையின் நடந்தது.
ஒரு மாதம் ஆன நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் அறப்போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
டி.ஆர்.பாலு தலைமையில் இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கக்கூடிய போராட்டமாக இது இருக்கும்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டிஎம்சி சார்பாக சுதீப், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
- தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை ஒன்றிய அரசு பறிப்பதாக குற்றம்சாட்டினர்
இந்தியை திணிப்பதாக ஒன்றிய அரசை கண்டித்து 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப்போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாணவரணி அறிவித்து இருந்தது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கல்வி நிதியை நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசுக்கு நிபந்தனை விதிப்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை ஒன்றிய அரசு பறிப்பதாக குற்றம்சாட்டினர்
மதுரையில் இந்தி திணிப்பை எதிர்த்தும், கல்வி நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க. மாணவரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையிலும் ஒன்றிய அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி, திராவிடர் மாணவர் கழகம், இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.