என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னிந்தியா"

    • வடகிழக்கு பருவமழை விலகக் கூடிய சாதகமான சூழல் நிலவி வருகிறது.
    • வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி முதல் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கியது.

    இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தென்னந்திய பகுதிகளில் இருந்து, வரும் 15ம் தேதியுடன் விலக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வரும் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை விலகக் கூடிய சாதகமான சூழல் நிலவி வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    • ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது.
    • தென்னிந்தியாவில் 50 லட்சம் ஹோண்டா ஆக்டிவாவை விற்பனை செய்ய 16 ஆண்டுகள் தேவைப்பட்டது.

    தென்னிந்தியாவில் 1 கோடி ஆக்டிவா ஸ்கூட்டரை விற்பனை செய்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

    இதில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களும் அடங்கும்.

    ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது.

    2017 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் 50 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த இலக்கை எட்ட அந்நிறுவனத்திற்கு 16 ஆண்டுகள் தேவைப்பட்டது.

    அதே சமயம் அடுத்த 50 லட்சம் ஸ்கூட்டியை விற்க 7 ஆண்டுகள் மட்டுமே அந்நிறுவனத்திற்கு தேவைபட்டுள்ளது. 

    • தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது.
    • 2047 ஆம் ஆண்டுக்குள் தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விடும்.

    தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

    விஜயவாடாவில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு, "தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    முன்பு நான் ஆட்சியில் இருந்த போது அதிக குழந்தைகளை பெற வேண்டாம் என்று எல்லோரிடமும் சொன்னேன். நான் சொல்வதைக் கேட்டு, நீங்கள் அனைவரும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையைக் குறைத்தீர்கள்.

    முன்னதாக, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் சட்டத்தை நான் அமல்படுத்தினேன். ஆனால் இப்போது அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வர ஆந்திர அரசு ஆலோசித்து வருகிறது.

    தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. கருவுறுதல் விகிதத்தின் தேசிய சராசரி 2.1 ஆக உள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் கருவுறுதல் விகிதம் 1.6 ஆக உள்ளது. 2047 ஆம் ஆண்டுக்குள் தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விடும்.

    தென்னிந்தியாவில் உள்ள இளைஞர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதால் இந்த பிரச்சினை மேலும் அதிகரிக்கிறது" என்று தெரிவித்தார். 

    ×