என் மலர்
நீங்கள் தேடியது "90s கிட்ஸ்"
- ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கு.
- ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங்.
சென்னையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் வந்தது.
நீதிமன்றத்தில் ஆஜரான இளைஞர் ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக் கொண்ட நிலையில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை என விளக்கம் அளித்தார்.
மேலும், ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் இளைஞர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையின்போது, "ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல. மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம்" என நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.
மேலும், "90's கிட்ஸ் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல் 2K கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.
அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவடைய வேண்டும். பள்ளிகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்" என்றது.
- சிறுவன் உலகை காக்க டிராகன் பால்களை சேகரிக்கும் கதையாக இந்த தொடர் அமைந்தது.
- டிராகன் பால் கதையை உருவாக்கிய அகிரா டோரியாமா கடந்த மார்ச்சில் உயிரிழந்தார்.
நீ போட்டு வச்ச தங்கக் குடம்.. 90ஸ் கிட்ஸ் புகழ் டிராகன் பால் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவுடிராகன் பால் Z என்பது உலகம் முழுவதிலும் உள்ள 90ஸ் கிட்ஸ்களிடையே பிரசித்தி பெற்ற ஜப்பானிய அனிமே தொடர் ஆகும். இந்த தொடர் ஆரம்பித்து இன்றுடன் 40 வருடம் நிறைவடைந்துள்ளது. டோய் அனிமேஷன் நிறுவனத்தால் கடந்த 1984 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி டிராகன் பால் தொடர் முதலில் தொடங்கப்பட்டது.
சன் கோகு [Son Goku] என்ற சிறுவன் உலகை காக்க டிராகன் பால்களை சேகரிக்கும் கதையாக இந்த தொடர் அமைந்தது. இது பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. குழந்தைகளை வெகுவாக கவர்ந்த இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து முந்தைய கதையின் தொடர்ச்சியாக டிராகன் பால் 1986 ஆம் ஆண்டு தொடங்கியது. இது முந்தையதை விட உலகம் முழுவதிலும் பெரு வெற்றி பெற்றது.

இதுவே பின்னாட்களில் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் நிலைத்தது. Shueisha நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சீரிஸ்சின் மங்கா காமிக் புத்தகங்களும் 260 மில்ல்லியன் பதிப்புகளை கடந்து விற்பனையானது. வீடியோ கேம்களும் இதைனை மையமிட்டு உருவாக்கப்பட்டது.
இந்த டிராகன் பால் கதையை உருவாக்கிய அகிரா டோரியாமா [Akira Toriyama] கடந்த மார்ச் 1 ஆம் தேதி தனது 68 ஆம் வயதில் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது சீரிஸ் தனது 40 வது வயதை எட்டியுள்ள இந்நாளில் ரசிகர்கள் டிராகன் பால் -ஐ நினைவுகூர்ந்து நெகிழ்ந்து வருகின்றனர்.
