search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா டிக்கெட்"

    • சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் (நலன்) மசோதா வெள்ளிக்கிழமை சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நல வாரியத்தை அமைப்பது, நிதியளிப்புத் திட்டங்களுக்கான நிதியை நிறுவுவதை இந்த மசோதா வலியுறுத்துகிறது.

    கர்நாடக மாநில அரசு சினிமா டிக்கெட்டுகள், சினிமா தொடர்பான ஓடிடி சந்தா கட்டணம், கலாச்சார கலைஞர்கள் வருமானத்தின் மீது இரண்டு சதவீதம் செஸ் வரி விதிக்க பரிசீலனை செய்து வருகிறது.

    மாநில அரசால் மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஒன்றில் இருந்து இரண்டு சதவீதம் வரை செஸ் திருத்தப்படும். இந்த செஸ் வரி சினிமா டிக்கெட்டுகள், ஓடிடி சந்தாக்கள், கர்நாடகாவில் உள்ள நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கு ஆகியவற்றிற்கு இந்த செஸ் வரி பொருந்தும். கர்நாடக சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் (நலன்) மசோதா வெள்ளிக்கிழமை சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நல வாரியத்தை அமைப்பது மற்றும் நிதியளிப்புத் திட்டங்களுக்கான நிதியை நிறுவுவதை இந்த மசோதா வலியுறுத்துகிறது.

    இந்த மசோதா திரைப்படத் துறையில் ஒரு கலைஞராக (நடிகர், இசைக்கலைஞர், நடனக் கலைஞர், முதலியன) அல்லது மேற்பார்வை, தொழில்நுட்பம், கலை ஆகியவற்றில் பணிபுரியும் எந்தவொரு நபரும் ஒரு சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலராகக் கருதப்படுவார் எனக் கூறுகிறது.

    • எரிக்கா பைதுரி தியேட்டரில் உள்ள அனைத்து சீட்களையும் வாங்கி படம் பார்த்துள்ளார்.
    • அவர் தனது வசதியை காட்டிக்கொள்வதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.

    கோலாலம்பூர்:

    மலேசியாவை சேர்ந்தவர் எரிக்கா பைதுரி. பணக்கார பெண்ணான இவர் டிக்-டாக் தளத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    அதில், மினி தியேட்டரின் 10 வரிசையில் உள்ள 16 சீட்களையும் முன்பதிவு செய்து தனி ஆளாக படம் பார்ப்பதுபோலும், தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டு கண்ணாடி அணிந்திருந்த காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தன.

    அந்த வீடியோவில், நாங்கள் உள்முக சிந்தனை கொண்டவர்கள் (தனிமை விரும்பி) என்பதால் அனைத்து இருக்கைகளையும் வாங்கினோம் என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எரிக்கா பைதுரி தனது வசதியை காட்டிக் கொள்வதாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ×