search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதா மூர்த்தி"

    • ஹுமாயுனை சகோதரனாக பாவித்து உதவி கேட்டும் விதமாக அவருக்கு வண்ணக் கயிற்றினை அனுப்பி வைத்தார்.
    • நான் சிறுமியாக இருந்தபோது கேட்டு வளர்ந்த அந்த கதையை நான் கூறினேன்

    மாநிலங்களவை எம்.பியும்  பத்ம பூஷன் வென்ற எழுத்தாளருமான சுதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி ஆவார். நேற்றைய தினம் நாடு முழுவதும் ரக்க்ஷா பந்தனுக்கு சுதா மூர்த்தி வெளியிட்ட வாழ்த்து செய்தி சர்ச்சையானது. அதில் ராணி கார்னாவதி ஆபத்தில் இருந்தபோது மன்னர் ஹுமாயுனுக்கு வண்ணக்கயிறு ஒன்றை அனுப்பி அவரை உதவிக்கு அழைத்தார். ரக்க்ஷா பந்தனின் பின்கதை இது என்று பேசியிருந்தார்.

    16 ஆம் நூற்றாண்டில் தற்போதைய ராஜஸ்தானில் அமைந்துள்ள சித்தோர்கர் Chittorgarh பகுதி ராஜ்யத்தின் அரசர் ராணா சங்கா உயிரிழந்த பிறகு அவரது மனைவி கார்னாவதி ராஜ்யத்தின் ராணியானார். அப்போது குஜராத் சுல்தான் பகதூர் ஷா சித்தோர்கர் ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்தார். இந்த தாக்குதலை சமாளிக்க ராணி கார்னாவதி டெல்லி சுல்தான் ஹுமாயுனின் உதவியை நாடினார். ஹுமாயுனை சகோதரனாக பாவித்து உதவி கேட்டும் விதமாக அவருக்கு வண்ணக் கயிற்றினை அனுப்பி வைத்தார். [இந்து-முஸ்லீம்] சகோதரத்துவத்தை உணர்த்தும் இந்த நிகழ்வே ரக்க்ஷா பந்தன் கொண்டாடப்பட காரணம் என்ற பின்கதை ஒன்று உண்டு. இதை மையப்படுத்தியே சுதா மூர்த்தி தனது வாழ்த்து செய்தியில் பேசியிருந்தார்.

    ஆனால் ரக்க்ஷா பந்தன் பழம்பெரும் பண்டிகை எனவும், ஒரு பொய்யான கதையோடு அதை தொடர்புப்படுத்துகிறார் எனவும் இணையத்தில் அவருக்கு எதிராக சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுதா மூர்த்தி விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் சொன்ன கதை ரக்க்ஷா பந்தன் கொண்டப்படுவற்கான காரணமாக கூறப்படும் பல்வேறு கதைகளில் ஒரு கிளைக் கதை. நான் சிறுமியாக இருந்தபோது கேட்டு வளர்ந்த அந்த கதையை நான் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

    • இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி, சுதா மூர்த்தி
    • அக்‌ஷதா மூர்த்தி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி

    மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, இன்போசிஸ் (Infosys).

    தகவல் தொழில்நுட்ப துறையில் $76 பில்லியன் மதிப்புள்ள நிறுவனமாக விளங்கும் பெங்களூருவை தலைமையகமாக கொண்ட இந்நிறுவனத்தை, 1981ல் என்ஆர் நாராயண மூர்த்தி, தனது நண்பர்களுடன் துவங்கினார்.

    என்ஆர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி (73).

    சுதா மூர்த்தி, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாராயண மூர்த்தி தம்பதியினருக்கு ரோஹன் எனும் மகனும், அக்ஷ்தா எனும் மகளும் உள்ளனர்.

    அக்ஷதா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தங்கள் மகளுக்கும் மருமகனுக்கும், தவறான விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வது என சுதா மூர்த்தி அறிவுரை வழங்கினார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    நம்மை குறித்து நாம் செய்யும் பணிதான் பேச வேண்டுமே தவிர நாம் அல்ல. உண்மையும் அர்ப்பணிப்பும்தான் முக்கியம். நமது செயல் தர்மப்படி சரியானதாக இருக்கும் வரையில் பிறரின் மதிப்பீடுகளை குறித்து கவலைப்படாமல் அவற்றில்தான் ஈடுபட வேண்டும். நீங்கள் நேர்மையாக இருந்து, உங்கள் நாட்டிற்கு பணியாற்றி வந்தால் மக்கள் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். அதை புறக்கணித்து விடுங்கள். உங்கள் செயலுக்கு எவரும் சாட்சியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; கடவுளே சாட்சி. உங்கள் வேலையை செய்து கொண்டே இருங்கள்; அவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும். அவர்களின் தகாத வார்த்தைகள் உங்களை சில சமயம் அதிகம் பாதிக்கலாம். அவர்கள் விமர்சித்து பேசினாலும், நீங்கள் உங்கள் கடமையை செய்ய பழகி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சுதா மூர்த்தி கூறினார்.

    "குடும்ப உறுப்பினர்கள் எனும் முறையில் பரஸ்பர அன்பும், அரவணைப்பும் எங்களுக்குள் உண்டு. ஆனால், அந்த எல்லையை தாண்டி நாங்கள் இரு நாட்டு விஷயங்களை குறித்து பேசுவதில்லை" என நாராயண மூர்த்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 6 நண்பர்களுடன் இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார், என்.ஆர்.என்.
    • விப்ரோவிற்கு பெரும் போட்டி நிறுவனமாக உருவெடுத்தது, இன்போசிஸ்

    இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனம், இன்போசிஸ் (Infosys).

    1981ல் இன்போசிஸ் நிறுவனத்தை தனது 6 நண்பர்களுடன் தொடங்கியவர், "இந்திய மென்பொருள் துறையின் தந்தை" என அழைக்கப்படும் என். ஆர். நாராயண மூர்த்தி (77).

    சுமார் 3.5 லட்சம் பணியாளர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். மென்பொருள் துறைக்கான கல்வி பயிலும் பல இளைஞர்களுக்கு கனவு நிறுவனமாக திகழ்வது, இன்போசிஸ்.

    இன்போசிஸ் துவங்கும் முன்பே 80களில் துவங்கப்பட்ட மற்றொரு மென்பொருள் துறை நிறுவனம், விப்ரோ (Wipro). இதன் தலைவர் அசிம் பிரேம்ஜி (Azim Premji).

    தனது ஆரம்ப கால வாழ்வில் செய்த பல முயற்சிகள் குறித்து அவ்வப்போது கருத்துகளை கூறி வரும் நாராயண மூர்த்தி, தான் வேலைக்கு செல்ல முயன்றது குறித்து தற்போது தெரிவித்துள்ளார்.

    நாராயண மூர்த்தி தெரிவித்ததாவது:

    அக்காலத்தில் நான் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்ற விரும்பினேன். அதற்கென விண்ணப்பமும் செய்தேன். ஆனால், என்னை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை.

    அதற்கு பிறகுதான், நான் என் நண்பர்களுடன் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கினேன். அதுதான் இன்போசிஸ்.

    இது குறித்து பல வருடங்கள் கழித்து பிரேம்ஜியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது, என்னை தேர்ந்தெடுக்காமல் விட்டது ஒரு தவறான முடிவு என பிரேம்ஜி தெரிவித்தார்.

    ஒரு வேளை பிரேம்ஜி என்னை தேர்வு செய்திருந்தால், எனது வாழ்க்கையும், பிரேம்ஜியின் வாழ்க்கையும் பெரிதாக மாறியிருக்கும்.

    இவ்வாறு நாராயண மூர்த்தி கூறினார்.

    விப்ரோ மென்பொருள் நிறுவனத்திற்கு பெரும் போட்டியாக இன்போசிஸ் உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.


    நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியும் ஒரு பொறியாளர். இன்போசிஸ் தலைமை பொறுப்பில் அமர அவர் விரும்பியும், நாராயண மூர்த்தி மறுத்து விட்டார்.

    இது குறித்து சில தினங்களுக்கு முன் பேசிய நாராயண மூர்த்தி, "எங்கள் 7 பேரையும் விட மிகுந்த திறமைசாலியான சுதாவை தலைமை பொறுப்பிற்கு வர அனுமதிக்காதது, நான் செய்த மிக பெரும் தவறு" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தான் செய்த தவறையும், பிரேம்ஜி செய்த தவறையும் நாராயண மூர்த்தி கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பயனர்களால் விவாதிக்கப்படுகிறது.

     

    ×