search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்பூர்"

    • தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை வாங்கினார்.
    • அதிர்ச்சி அடைந்த செரிஷ் உடனே இந்தியா புறப்பட்டு வந்தார்.

    ராஜஸ்தானை சேர்ந்த நகை கடை உரிமையாளர் அமெரிக்க பெண்ணிடம் ரூ. 300 மதிப்புள்ள போலி நகையை ரூ. 6 கோடிக்கு விற்பனை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த செரிஷ் என்ற பெண் ஜெய்பூரில் உள்ள ஜோரி பஜாரில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை வாங்கியுள்ளார்.

    ரூ. 6 கோடி கொடுத்து வாங்கிய நகைகளை அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில் செரிஷ் காட்சிப்படுத்த ஆயத்தமானார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது, செரிஷ் வாங்கிய விலை உயர்ந்த நகைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த செரிஷ், உடனே இந்தியா புறப்பட்டு வந்தார்.

    இந்தியாவில் தரையிறங்கிய செரிஷ் நேரடியாக நகை வாங்கிய கடைக்கு விரைந்தார். அங்கு கடையின் உரிமையாளர் கௌரவ் சோனியை சந்தித்து போலி நகை குறித்து விளக்கம் கேட்டார். செரிஷ்-இன் குற்றச்சாட்டுகளை கௌரவ் சோனி மறுத்துள்ளார். இதையடுத்து காவல் நிலையம் விரைந்த செரிஷ் கௌரவ் சோனி மீது புகார் அளித்தார்.

    மேலும், தனது புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி செரிஷ் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் உதவி கேட்டார். பிறகு, அமெரிக்க தூதரகம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் ஜெய்பூர் காவல் நிலையத்தில் கௌரவ் சோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து கௌரவ் சோனி மற்றும் அவரது தந்தை ராஜேந்திர சோனி ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான கௌரவ் சோனியிடம் செரிஷ் பலக்கட்டங்களாக ரூ. 6 கோடி மதிப்பிலான போலி நகைகளை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.

    • மோடிக்கு லூவர் அருங்காட்சியகத்தில் பெரிய விருந்து அளிக்கப்பட்டது
    • ஜெய்பூரில் பிரான்ஸ் அதிபருக்கு பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    கடந்த வருடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 2-நாள் அரசியல் சுற்று பயணம் மேற்கொண்டார். "இந்தியா, உலக சரித்திரத்தில் ஒரு பெரிய நாடு" என அப்போது பிரான்ஸ் அதிபர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் (Louvre Museum) பிரதமர் மோடிக்கு மிக பெரிய விருந்து அளிக்கப்பட்டது. இதையொட்டி, அந்த அருங்காட்சியகத்திற்கு பார்வையாளர்கள் வருவது தடை செய்யப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் வருகை தடை செய்யப்படுவது அதன் சரித்திரத்தில், 60 வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம்தான் முதல் முறையாக நடைபெற்றது.

    இந்நிலையில், வரும் ஜனவரி 26 அன்று இந்தியாவின் 75-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

    இதில் பிரதம விருந்தினராக பங்கேற்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் (Emmanuel Macron) இந்தியாவிற்கு வர உள்ளார்.

    முன்னதாக ஜனவரி 25 அன்று பிரான்ஸ் அதிபருக்கு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில், மிக பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட உள்ளது.

    தற்போது இந்தியா வரும் மேக்ரானின் சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ராணுவ மற்றும் தொழில்துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

    இரு துறைகளுக்கும் தேவைப்படும் உபகரண உற்பத்தியில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என தெரிகிறது. குறிப்பாக, கனரக விமான எஞ்சின்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய பிரான்ஸின் உதவி பெறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேக்ரானின் வருகை சம்பந்தமான முன்னேற்பாடுகள் குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரான்ஸ் அரசாங்க ஆலோசகர் எம்மானுவல் பான் (Emmanuel Bonne) ஆகியோர் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.

    ×