என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரோ கபடி லீக் 2024"

    • நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
    • புரோ கபடி லீக்கின் 1000-வது போட்டி இதுவாகும்.

    ஜெய்ப்பூர்:

    புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ளன.

    பாட்னா பைரேட்ஸ் அதிகபட்சமாக 3 முறையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 3 தடவையும், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி அணிகள் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

    10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த மாதம் 2-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. அதை தொடர்ந்து பெங்களூரு, புனே, சென்னை, நொய்டா, மும்பையில் நடைபெற்றன. 7-வது கட்ட போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூல் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. புரோ கபடி லீக்கின் 1000-வது போட்டி இதுவாகும். இதையொட்டி அஜய் தாக்கூர், அனுப்குமார், சேரலாதன், மஞ்சித் சில்லர், ரிஷங் தேவதிகா ஆகிய முன்னாள் பிரபல வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    1000-வது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 35-29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களுருவை வீழ்த்தியது. அந்த அணி பெற்ற 6-வது வெற்றியாகும். பெங்களூருக்கு 8-வது தோல்வி ஏற்பட்டது.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர்-மும்பை அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 31-29 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூர் அணி பெற்ற 9-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்த அணி 53 புள்ளிகளுடன் புனேயை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றது. புனே அணி 52 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி (43 புள்ளி), குஜராத் (39), அரியானா (39), பெங்கால் (38), அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    • இரவு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத்- மும்பை அணிகள் மோதுகின்றன.
    • புனே அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி 'லீக்' போட்டி ஐதராபாத்தில் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்று உள்ள இந்தப் போட்டியில் சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 44-29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது.

    தமிழ் தலைவாஸ் அணி 2-வது ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடப்பு சாம்பியன் புனேரி பல்தானை சந்திக்கிறது. புனேயை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனே அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் (அரியானா, பாட்னா) வெற்றி பெற்று இருந்தது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றி வேட்கையுடன் இருக்கிறது.

    இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதுகின்றன. குஜராத் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. மும்பை அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    • 12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
    • இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    ஐதராபாத்:

    12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

    • புரோ கபடி ‘லீக்’ போட்டிகள் நேற்றுடன் 106 ஆட்டங்கள் முடிவடைந்து உள்ளன.
    • இன்னும் 26 ‘லீக்’ ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 37-26 என்ற புள்ளி கணக்கில் பெங்களூருவை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அரியானா முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 19 ஆட்டத்தில் 15 வெற்றி, 4 தோல்வியுடன் 77 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 47-31 என்ற கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தி 10-வது வெற்றியை பெற்றது. தமிழ் தலைவாஸ் 10-வது தோல்வியை தழுவியது.

    புரோ கபடி 'லீக்' போட்டிகள் நேற்றுடன் 106 ஆட்டங்கள் முடிவடைந்து உள்ளன. இன்னும் 26 'லீக்' ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

    பிளே ஆப் சுற்றுக்கு நுழைய உள்ள எஞ்சிய 5 அணிகள் எவை என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. மும்பை அணி 10 வெற்றி, 6 தோல்வி, 2 டையுடன் 60 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், பாட்னா பைரேட்ஸ் 10 வெற்றி, 6 தோல்வி, 1 டையுடன் 58 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும் உள்ளன.

    உ.பி. யோத்தாஸ் 9 வெற்றி, 6 தோல்வி, 2 டையுடனும், டெல்லி அணி 8 வெற்றி, 5 தோல்வி, 4 டையுடனும் தலா 56 புள்ளிகள் பெற்று முறையே 4-வது, 5-வது இடத்தில் உள்ளன.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 2 டை), தெலுங்கு டைட்டன்ஸ் (10 வெற்றி, 8 தோல்வி) தலா 54 புள்ளிகளுடன் 6-வது மற்றும் 7-வது இடத்தில் உள்ளன.

    நடப்பு சாம்பியன் புனே (49 புள்ளி), 8-வது இடத்திலும், தமிழ் தலைவாஸ் (38 புள்ளி), 9-வது இடத்திலும் உள்ளன. பெங்கால் வாரியர்ஸ் (37), குஜராத் (34), பெங்களூரு (19) ஆகிய அணிகள் முறையே 10 முதல் 12-வது இடத்தில் உள்ளன.

    வருகிற 24-ந்தேதி 'லீக்' ஆட்டங்கள் முடிகிறது. 26-ந்தேதி பிளே ஆப் சுற்று தொடங்குகிறது. இறுதிப் போட்டி 29-ந்தேதி நடக்கிறது.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8 மணி), உ.பி.-பெங்கால் (இரவு 9 மணி) மோதுகின்றன.

    ×