search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின் ஆலன்"

    • டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்காக இந்த முடிவு எடுத்துள்ளார்.
    • நியூசிலாந்து டெஸ்ட் அணிக்காக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்து அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேன் டேவன் கான்வே. இவர் நியூசிலாந்து அணியுடன் மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட மறுத்துள்ளார். உலகளவில் நடக்கும் பெரும்பாலான டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த முடிவை எடுத்து உள்ளார்.

    ஆனால் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டி மற்றும் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகியது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் இந்த நேரத்தில் சிறந்தது என நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே கேன் வில்லியம்சன், பெர்குசன் போன்ற முன்னணி வீரர்கள் இதே முடியை எடுத்துள்ளனர். இந்த பட்டியலில் தற்போது கான்வே இணைந்துள்ளார்.

    மற்றொரு பேட்ஸ்மேனான பின் ஆலன் இதே முடிவை எடுத்து உள்ளார். ஆனால் நியூசிலாந்து இது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை.

    நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை என்றால் நியூசிலாந்து அணிக்காக ஒரு வீரர் விளையாட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வெளிநாட்டில் எந்த ஒரு லீக் போட்டிகளிலும் விளையாடலாம். லீக் போட்டியில் அதிக வருமானம் கிடைப்பதாலும், குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வெண்டியதில்லை என்பதாலும் பெரும்பாலான வீரர்கள் தற்போது இந்த முடிவை எடுத்து வருகிறார்கள்.

    டேவன் கான்வே ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    • முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.
    • பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்னே எடுக்க முடிந்தது.

    டுனிடின்:

    நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் பின் ஆலன் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் 62 பந்தில் 137 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், 16 சிக்சர்களும் அடங்கும்.

    16 சிக்சர்கள் விளாசியதன் மூலம் பின்ஆலன் புதிய சாதனை புரிந்தார். அவர் ஆப்கானிஸ்தான் வீரர் ஹசரத்துல்லாவை சமன் செய்தார். ஹசரத்துல்லா 2019-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக டேராடூன் மைதானத்தில் 16 சிக்சர்கள் அடித்து இருந்தார். தற்போது இருவரும் முதல் இடத்தில் உள்ளனர்.

    மேலும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் பின்ஆலன் படைத்தார். இதற்கு முன்பு ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரராக மெக்கல்லம் திகழ்ந்தார். அவர் 2012-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக பல்லேகலேவில் 123 ரன் எடுத்து இருந்தார்.

    பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. அந்த அணி ஏற்கனவே முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. 4-வது 20 ஒவர் போட்டி வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

    ×