search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈகோ"

    • நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது
    • ஈகோ கிளாஸை எளிதாக விளக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இந்த போட்டிக்கு வந்த நபர் ஒருவர் அரங்கேற்றியுள்ளார்.

    டி20 உலகக்கோப்பை 2024 போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில் நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கிரிக்கெட்டை விளையாட்டு என்று கருதுவதையும் தாண்டி இரண்டு நாடுகளுக்குமாக ஈகோ கிளாசாக ரசிகர்கள் மாற்றத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த ஈகோ கிளாஸை எளிதாக விளக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இந்த போட்டிக்கு வந்த நபர் ஒருவர் அரங்கேற்றியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ரேசா கான் என்ற அந்த கன்டன்ட் கிரியேட்டர், தனது பாகிஸ்தானிய தந்தையையும், இந்திய மாமனாரையும் போட்டிக்கு அழைத்து வந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடும்போது அவர்களின் ரியாக்சன்களைப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து வீடியோ வைரலாகி வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த உயிரே படத்தில் இருவேறு சித்தாந்தங்களைக் கொண்ட தகப்பன்கள் மும்பையில் நடக்கும் மதக் கலவரத்தின்போது தங்களுக்குள் உள்ள வித்தியாசங்களையும் பிரிவினையையும் எதிர்கொள்ளும் தருணத்தை சந்திப்பர். இந்த வீடியோ அதை நினைவுபடுத்துவதாக உள்ளது.   

    • எப்போதும் நீங்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவீர்கள்.
    • கோலி மிகப்பெரிய ஈகோவை கொண்டுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் வருகிற 25-ம் தேதி தொடங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்த தொடரில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடித்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

    இந்நிலையில் விராட் கோலியை அவுட்டாக்க ஆர்வமாக இருப்பதாக இங்கிலாந்து வீரர் ராபின்சன் சவால் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எப்போதும் நீங்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவீர்கள் அல்லவா? நீங்கள் எப்போதுமே சிறந்த வீரர்களை அவுட் செய்ய விரும்புவீர்கள். விராட் கோலி அது போன்ற ஒரு வீரர். அவர் மிகப்பெரிய ஈகோவை கொண்டுள்ளார். குறிப்பாக இந்தியாவில் எதிரணி பவுலர்களை நம்முடைய சொந்த மண்ணில் அதிரடியாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவிக்கலாம் என்று அவர் நினைப்பார்.

    இதற்கு முந்தைய தொடர்களிலும் நாங்கள் மோதியுள்ளோம். எனவே இம்முறையும் அதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த சில வருடங்களில் எங்களுடைய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு நான் தலைவராக இருப்பேன் என்பதை உணர்ந்து அதற்கேற்றார் போல் பயிற்சிகளை செய்து வருகிறேன். தற்போது நல்ல முதிர்ச்சியடைந்துள்ள நான் இத்தொடரை மற்றுமொரு சாதாரண தொடராக நினைத்து பயிற்சி எடுக்கிறேன்.

    இவ்வாறு ராபின்சன் கூறினார். 

    ×