என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டு புடவை"

    • பட்டு புடவைகள் வாஷிங்மெஷினில் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்ய எப்போதும் கையில்தான் துவைக்க வேண்டும்.
    • நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி நன்கு காற்றோட்டமான பகுதியில் பட்டு புடவையை தொங்கவிடுங்கள்.

    பெண்கள் பலருக்கும் தங்கள் பட்டு புடவையை பராமரிப்பது கடினமாக உள்ளது. குறிப்பாக திருமணத்திற்கு வாங்கும் பட்டு புடவைகள் கனமாகவும், பராமரிக்க கடினமாகவும் இருக்கும். இதனை கையில் துவைப்பது அவ்வளவு எளிதல்ல. பட்டு புடவைகளை வீட்டிலேயே துவைத்து பராமரிக்க சில எளிய டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.

    1. குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள்

    பட்டு புடவைகளை துவைக்கும் போது, சூடான தண்ணீருக்கு பதிலாக குளிர்ந்த நீரை பயன்படுத்துவது முக்கியம்.

    சூடான நீர் பட்டு இழைகளை சுருக்கி அதன் பளபளப்பை இழக்கச் செய்யலாம். குளிர்ந்த நீர் மென்மை தன்மை கொண்டிருக்கும் என்பதால் அதன் அசல் பிரகாசத்தை பாதுகாக்க உதவும்.

    2. மென்மையான சோப்பு பயன்படுத்துங்கள்

    பட்டு புடவைகளை துவைக்கும்போது, மென்மையான துணிகளுக்கு வடிவமைக்கப்பட்ட சோப்பை பயன்படுத்துவது சிறந்தது. கடுமையான சோப்பு, பட்டு இழைகளை சேதப்படுத்தி புடவையில் உள்ள நிறங்களை மங்கச்செய்யலாம். குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் துணி துவைக்கும் சோப்பு, பட்டுப்புடவையை சலவை செய்ய பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சோப்பு மீதுள்ள லேபிளை படிக்கவும்.

    3. மெதுவாக கையில் துவைக்க வேண்டும்

    பட்டு புடவைகள் வாஷிங்மெஷினில் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்ய எப்போதும் கையில்தான் துவைக்க வேண்டும். ஒரு பக்கெட்டில் குளிர்ந்த நீரை நிரப்பி, பட்டுப்புடவையை துவைப்பதற்கான பிரத்யேக வாஷிங் திரவத்தை சேர்க்கவும். அந்த மென்மையான தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். அப்போது பட்டு புடவையை முறுக்கவோ அல்லது திருப்பவோ கூடாது. சிறிது நேரத்துக்கு பிறகு சோப்பு நுரையை அகற்ற, பட்டு புடவையை குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும்.

    4. காற்றில் உலர வேண்டும்

    பட்டு புடவையை வீட்டில் துவைத்த பிறகு, ஹீட்டர் அல்லது ஸ்டீமர் பயன்படுத்துவதற்கு பதிலாக அதை காற்றில் உலர்த்துவது முக்கியமானது. நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி நன்கு காற்றோட்டமான பகுதியில் பட்டு புடவையை தொங்கவிடுங்கள். இல்லாவிட்டால் வெயிலோ, வெப்பமோ மென்மையான பட்டு இழைகளை சேதப்படுத்தும். புடவை உலர்ந்தவுடன், அதில் இருக்கும் சுருக்கங்களை அகற்ற குறைந்த வெப்ப அமைப்பில் அதை அயர்ன் செய்யலாம்.

    • கணவன் மனைவி இருவரும் இணைந்து அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் உள்ள சீதாதேவிக்கு தங்க சரிகை சேலை நெய்து சாதனை படைத்துள்ளனர்.
    • ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    திருப்பதி:

    தெலங்கானா மாநிலம், சிர்சில்லா ஜவுளி நகரத்தைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். பட்டு நெசவு தொழிலாளி. இவரது மனைவி ரேகா.

    கணவன் மனைவி இருவரும் இணைந்து அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் உள்ள சீதாதேவிக்கு தங்க சரிகை சேலை நெய்து சாதனை படைத்துள்ளனர்.

    8 கிராம் தங்கம், 20 கிராம் பட்டு இழைகள் கொண்டு 20 நாட்களில் பட்டுப் சேலை விஷேசமாக தயார் செய்துள்ளனர்.

    அதில் ஸ்ரீராமரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

    புடவையின் ஒரு புறத்தில் அயோத்தி ராமர் கோவில், ஸ்ரீராம பட்டாபிஷேகம் மற்றும் ஜெய் ஸ்ரீராம் என தெலுங்கிலும், மறுபுறம் ஜெய் ஸ்ரீராம் என இந்தியிலும் நெய்யப்பட்டுள்ளன.

    ஸ்ரீராமரின் படங்கள் புடவையின் விளிம்பில் வைக்கப்பட்டு, சேலையின் மீதமுள்ள பகுதி ஸ்ரீ ராமர் பிறந்தது முதல் முடிசூட்டு விழா வரையிலான ராமாயண காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    இவ்வளவு சிறப்பு அம்சங்களுடன் நெய்யப்பட்டுள்ள பட்டுப் புடவையை வரும் ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் காட்டுகின்றனர்.

    பின்னர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    ×