search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரகப்பிரவேசம்"

    • உங்களிடம் சொந்த வீடு கட்ட எந்த ஒரு வசதியும் இல்லை.
    • கையில் அதற்கான பணமும் இல்லை என்பவர்கள் கூட நம்பிக்கையோடு சிறுவாபுரி வந்து முருகனை வணங்கலாம்.

    ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு விசேஷம் இருக்கும். அதுபோல சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்தால் 'சொந்த வீடு' கனவு நனவாகும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து உள்ளது.

    இதனால் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக இங்குள்ள முருகனை நாடி வரும் பக்தர்கள் கூட்டம்தான் அதிகமாக காணப்படுகிறது.

    அதுவும் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் இக்கோவிலை நாடி வரும் பக்தர்கள் அதிகம். பக்கத்து மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் இந்த கோவிலின் பெருமையை கேள்விப்பட்டு ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

    நாம் எல்லோருக்கும் எப்படியும் வாழ்க்கையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

    அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தாங்கள் படும் கஷ்டங்களில் இருந்து மீள சொந்த வீடு கனவு ரொம்பவே அதிகமாக இருக்கும்.

    ஆனால் எல்லோரும் அந்த கனவை அவ்வளவு எளிதாக அடைந்து விட முடிவதில்லை.

    சிலருக்கு கையில் பணம் இருந்து ஏதோ ஒரு காரணத்தினால் சொந்த வீடு கட்டுவதில் பல தடைகள் ஏற்படுவது உண்டு.

    இதுபற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

    உங்கள் உள்ளத்தில் உந்து சக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்து தருகிறேன் என்கிறார் சிறுவாபுரி முருகன்.

    ஆம் சிறுவாபுரிக்கு வந்து முருகனை உள்ளன்போடு வணங்கினால் நாம் நினைத்த காரியம் நினைத்தபடியே நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள்.

    கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம் உண்டு என்று சொல்வார்கள்.

    இதனால் இங்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு எப்படியாவது சொந்த வீடு வேண்டும் என மனமுருகி வேண்டுவதால் அவர்கள் எண்ணங்களை இந்த முருகன் உடனடியாக நிறைவேற்றி தருவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

    இதற்காக பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள பகுதிகளில் செங்கற்களை அடுக்கி வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு அகல் விளக்குகள் ஏற்றி பூக்கள் வைத்து முருகனை நினைத்து வழிபடுகின்றனர்.

    சிலர் சிறு சிறு கற்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

    இதற்காக அருகிலேயே செங்கற்களும் கிடைக்கிறது.

    பின்னர் 6 வாரம் தொடர்ந்து இந்த கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தால் உங்களது ஆசை பூர்த்தியாகும் என்பது ஐதீகம்.

    உங்களிடம் சொந்த வீடு கட்ட எந்த ஒரு வசதியும் இல்லை.

    கையில் அதற்கான பணமும் இல்லை என நினைப்பவர்கள் கூட நம்பிக்கையோடு சிறுவாபுரி வந்து முருகனை வணங்கலாம்.

    அதே போல 'திருப்புகழ்' பதிகத்தையும் தொடர்ந்து உச்சரித்து வர வேண்டும்.

    இப்படி செய்வதினால் உங்களின் பொருளாதார நிலை உயர்ந்து ஏழ்மைநிலை மாறி சொந்த வீடு கட்டுவதற்கான சிறப்பான சூழ்நிலை உருவாகும்.

    நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் கிட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • கோவிலின் உயரமான கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொழுவாக வீற்று இருக்கிறது.
    • இக்கோவிலின் தல விருட்சமாக மகிழம் மரம் திகழ்கிறது.

    இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி , ஆதிமூலவர் நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் அனைத்தும் பச்சைக்கற்களால் ஆனது என்பது தான் விசேஷம்.

    கோவிலின் உயரமான கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொழுவாக வீற்று இருக்கிறது.

    இக்கோவிலின் தல விருட்சமாக மகிழம் மரம் திகழ்கிறது.

    இங்குள்ள முருகனை மனமுறுகி வேண்டினால் பூமி சம்பந்தமாக அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும் , குழந்தை பேறு இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும் கடன் தொல்லை நீங்கவும் சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.

    தை மாதத்தில் கிரகப்பிரவேசத்திற்கு நாள் குறித்து விட்டு நம்பிக்கையுடன் சிறுவாபுரிக்கு 6 வாரம் தொடர்ந்து சென்று வந்தால் சொந்த வீட்டில் குடியேறும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இது மட்டும் அல்லாது கல்வி செல்வம் , செல்வ செழிப்பான வாழ்க்கை, கடன் பிரச்சினை தீருதல் என அனைத்து பிரார்த்தனைகளையும் இந்த முருகன் நிறைவேற்றி தருகிறார்.

    • உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்தது.
    • வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குப்பட்ட உப்பனாரு வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்ட 3 அடுக்குமாடி வீடு சரிந்து துண்டாக விழுந்து விபத்துக்குள்ளானது.

    உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு சரிந்து விழுந்துள்ளது.

    இந்த வீடு புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் சரிந்து விழுந்தது. வரும் பிப்ரவரி 1ம் தேதி வீட்டின் கிரக பிரவேசம் நடைபெற இருந்தது.

    வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×