என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பெண் குழந்தைகள் தினம்"

    • அனைத்து துறைகளிலும் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் வளமான திறனையும் நாடுகள் அங்கீகரிக்கிறோம்.
    • அவர்கள் நமது நாட்டையும், சமுதாயத்தையும் சிறந்ததாக மாற்றுபவர்கள்.

    புதுடெல்லி:

    தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

    தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தையின் அசைக்க முடியாத மனப்பான்மை மற்றும் சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் வளமான திறனையும் நாடுகள் அங்கீகரிக்கிறோம். அவர்கள் நமது நாட்டையும், சமுதாயத்தையும் சிறந்ததாக மாற்றுபவர்கள். மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

    கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு பெண் குழந்தையும் கற்கவும், வளரவும், செழிக்கவும் நமது அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

    • நாடு முழுவதும் பாலின பேதங்கள் இன்றி பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்
    • பெண் குழந்தைகள்தான் மாற்றத்தை உருவாக்குபவர்கள் என்றார் பிரதமர் மோடி

    நாடு முழுவதும் சில தசாப்தங்களுக்கு முன் வரை குழந்தை பிறந்ததும், ஆணா அல்லது பெண்ணா என கேட்பதும், ஆண் குழந்தை என்றால் உயர்வாக கருதுவதும் ஒரு வழக்கமாக இருந்து வந்தது.

    இன்றைய காலகட்டத்தில் அந்த நிலைமை பெருமளவு மாறி விட்டது.

    இன்று பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளுக்கு நிகராக, கல்வி, விளையாட்டு, கலைகள், கணிதம், விஞ்ஞானம், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறு வயதிலிருந்தே தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

    மூட நம்பிக்கைகளால் பெண் குழந்தைகளுக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த நிலைமை தற்காலத்தில் அறவே மாறி, பாலின பேதம் இல்லாமல் கிராமங்களிலும், நகரங்களிலும் பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்.

    2008ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" (National Girl Child Day) கொண்டாடப்படுகிறது.


    பாலின சமத்துவம், கல்வி, உடலாரோக்கியம், பணி மற்றும் ஊதியம் உள்ளிட்ட அம்சங்களில் சமநிலையை ஊக்குவிக்கவும், பெண் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் "பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.


    குழந்தைகள் திருமணம், பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கான வன்முறை ஆகியவற்றை சமூகத்திலிருந்து களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர்.


    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, "பெண் குழந்தைகள்தான் மாற்றத்தை உருவாக்குபவர்கள்.பெண் குழந்தைகள் கல்வி கற்று, வளர்ந்து சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ தேவையான அனைத்து முயற்சிகளையும் தனது அரசு செய்து வருகிறது" என குறிப்பிட்டார்.

    2015ல் பிரதமர் நரேந்திர மோடி இதே தினத்தன்று, "பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்; பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்" ("பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ") என முன்னெடுத்த பிரசார திட்டங்கள் குறித்தும் இன்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.

    • பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.
    • புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம்.

    புதுச்சேரி:

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை 2008-ம் ஆண்டு எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று தெலுங்கானா மாநில கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,

    பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்.

    பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.

    புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
    • வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தை இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

    நாளை பெண் குழந்தைகள் தினம்...

    இது இந்தியா முன்னெடுத்த பெருமைக்குரிய தினம். இது கடந்த 2008-ம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஜனவரி 24-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    என்னதான் பாலின சமத்துவம் பேசப்பட்டு வந்தாலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஒரு கட்டத்தில் அரசுக்கும் ஏற்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற அளவில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை சரிவை நோக்கி சென்றதை சந்தித்த போதுதான் அரசுக்கு பொறி தட்டியது. தாயின் வயிற்றில் இருக்கும் போதே பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டு கருவிலேயே அழிக்கப்படுவதும், தப்பித்தவறி பிறந்து விட்டால் கூட கள்ளிப்பாலையும், நெல் மணியையும் கொடுத்து அந்த கண்மணிகளை ஈவு இரக்கமில்லாமல் அழித்து வந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    நம்ம கடலூர் மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கும் 854 பேர் தான் பெண்கள் என்ற கணக்குதான் இந்திய அளவில் பெண் குழந்தைகளை காக்கும் அளவுக்கு நாட்டின் கண்களை திறக்க வைத்தது. பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கினார்கள்.

    சமூகத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், ஏற்றத்தாழ்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் குழந்தைகளை காப்பாற்றுதல், பாலின விகிதங்களை பராமரித்தல், குழந்தை திருமணம், அவர்களுக்கான சட்ட உரிமைகள், மருத்துவம், மரியாதை போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கம்.

    தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரத்தையும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரத்தையும் அரசே டெபாசிட் செய்கிறது. அந்த குழந்தை திருமண வயதை எட்டும் போது ரூ.3 லட்சம் கிடைக்கும்.

    அரசு திட்டங்கள் போட்டு காப்பதைவிட மக்களின் மனமாற்றம் தான் முழு வெற்றியை தரும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து. பெண் குழந்தை என்பது பல பரிணாம வளர்ச்சியோடு வாழ்க்கையை பரிபூரணமாக்குகிறது. எனவேதான் பெண் குழந்தைகளை கொண்டாடுகிறோம். வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தை இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

    அந்த வீட்டின் ஆனந்த யாழை மீட்டுபவள் அவள். "வா.. வா என் தேவதையே... பெண் பூவே வா... வா... பொய் வாழ்வின் பூரணமே..." என்று பெண் குழந்தைகளின் பிறப்பை உயர்வாக சித்தரித்து பாடுகிறார்கள்.

    பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அவர்களின் உரிமை, சட்ட பாதுகாப்பில் அடங்கி இருக்கிறது. குழந்தை திருமணம் சட்டப்படி தவறு. அதற்கு தண்டனையும் உண்டு. அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து இளம் வயது கர்ப்பம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    குழந்தை திருமணங்கள் அரங்கேற முக்கிய காரணம் இன்றைய சமூக சூழ்நிலையில் பெற்றோர்களுக்கு ஏற்படும் தேவையற்ற பயம். திருமணம் முடிந்துவிட்டால் தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதுகிறார்கள். ஆனால் அது அந்த குழந்தைகளை படு பாதாளத்தில் தள்ளுவது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இளம் வயது கர்ப்பம் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    பெண் குழந்தைகள் பிறந்ததும் பெருமைப்படும் பெற்றோர் மிக இளம் வயதிலேயே அந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு காரணம் சமூக அழுத்தமும், நடைபெறும் பாலியல் அத்துமீறல்களும்தான் எனப்படுகிறது.

    இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் வளர்ப்பதன் மூலம் களைய முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

    • இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள்.
    • விழுப்புணர்வுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை எடுத்த முயற்சி எடுத்தது.

    ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிகளவில் உயிரிழக்கும் பெரிய நாடு இந்தியா மட்டுமே.

    முந்தைய மூடநம்பிக்கை மண்டிய ஆணாதிக்க இந்திய சமூகத்தில் பெண்ணாக பிறப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட கொடூரமான பாகுபாடுகள் உடைக்கப்பட்டு தற்கால சமூகம் சற்று முன்னேறி உள்ளது.

    முன்பிருந்த வெகுஜன மனநிலைக்கு மாறாக இன்று பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளுக்கு நிகராக, கல்வி, விளையாட்டு, கலைகள், கணிதம், விஞ்ஞானம், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறு வயதிலிருந்தே தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

    ஆனால் நவீன சமூக கூட்டு மனப்பான்மையில் வேரோடியிருக்கும் ஆணாதிக்கம் வேறு வழிகளில் பெண் குழந்தைகளை ஒடுக்க தொடர்ந்து வழி தேடி வருகிறது. அதன் விளைவாகவே முந்தைய காலங்களின் தொடர்ச்சியாக தற்போதும் குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என பல வழிகளில் மீண்டும் பெண்கள் மீதான தனது அதிகாரத்தை நிறுவ சமூகத்தில் ஆணாதிக்க தன்மை முயன்று வருகின்றது.

    இவ்வாறான கொடுமைகள் குறித்த விழுப்புணர்வுக்காக 2008ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" (National Girl Child Day) கொண்டாடப்படுகிறது.

    குழந்தைகள் திருமணம், பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கான வன்முறை ஆகியவற்றை சமூகத்திலிருந்து களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர்.

    ஆனாலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான மனப்பான்மை இந்திய சமூகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிந்தபாடில்லை. குழந்தைதியிலுருந்தே பல பெண்கள் குடும்ப வன்முறை, கட்டாய கர்ப்பம், கட்டாயக் கருக்கலைப்பு போன்ற அனைத்து வகையான பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

    WHO வெளியிட்ட ஒரு மதிப்பீட்டின்படி, உலகளவில் 3ல் 1 (30%) பெண்கள் தங்கள் வாழ்நாளில் தங்களுக்கு நெருங்கியவர்களாலேயே உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் வன்முறையைக் கண்டுள்ளனர். 

    தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தரவுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள். வருந்தத்தக்க வகையில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பெண் குழந்தைகள். மேலும் இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 3 சிறுமிகள், குழந்தைத் திருமணத்துக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

     இந்த கொடுமைகளுக்கு  எதிரான போராட்டத்தை முன்னெடுக்க இன்றைய தேசிய பெண் குழந்தைகள் தினம் களம் ஏற்படுத்தித் தருகிறது. நேற்று வெளியான ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி பட்டியலில் பெண் குழந்தைத் தொழிலாளர்கள் வாழ்க்கை இன்னல்களை பிரதிபலிக்கும் இந்திய குறும்படமான அனுஜா இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×